Monday, December 15, 2014

Keerthivasan

இயற்கை விவசாயம் - 2

இயற்கை விவசாயம் - 2

ரசாயன உரங்கள் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தியதால் நன்மை செய்யும் நுன்னுயிரிகள் மற்றும் மண் புழுக்கள் அழிந்து இனி ரசாயன உரம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத சூழல் உறுவானது என்று நேற்று பார்த்தோம்...
இவ்வாறு தொடர்ந்து ரசாயனங்களை பயன் படுத்தியதில் நிலம் வளம் குறைந்து மலட்டு தன்மை அடைந்தது

பயிர்களை தாக்கும் பூச்சி புழுக்களை அழிக்கும் நன்மை செய்யும் வன்டுகள் பூச்சிகளும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் அழிக்கப் பட்டன.



பூமியில் உள்ள மேக்ரோ மைக்ரோ நியூட்ரிசியன்ஸை கரைத்துக் கொடுக்கும் பேக்டீரியாக்கள் மற்றும் காற்றில் உள்ள நைட்ரஜனை கிரஹித்து கொடுக்கும் பேக்டீரியாக்கள் மட்டும் அல்ல

நோய்களை தடுக்கும் நன்மை செய்யும் பேக்டீரியாக்களும் இயற்கையிலேயே மண்ணில் ஏராளமாக உள்ளன.

பேசிலோமைசிஸ்:- செடிகளின் வேர் மண்டலத்தை சுற்றி நூற் புழுக்கள் என்னும் கண்களுக்குத் தெரியாத நுன் புழுக்கள் தாக்குகின்றன.

மரம் செடி கோடிகளுக்கு வேர் மண்டலங்களே முக்கியமானதாகும்

தண்ணீர் சத்துக்கள் முலியவை பயிர்களுக்கு எடுத்து செல்ல வேர்கள் ஆரோக்யமாக இருக்க வேண்டியது அவசியம்.

நூற் புழுக்கள் தாக்கப்பட்ட வேர்கள் மிகவும் பலவீனம் அடைந்து பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும்

வேரழுகள் ஏறபட்டு வாடல் நோய் ஏற்படுத்தும்

வாழை கரும்பு முதலிய பயிர்களில் காணலாம்

இத்தகைய நூற் புழுக்களை மண்ணில் இயற்கையிலேயே உள்ள பேசிலோமைசிஸ் என்னும் பாக்டீரியாக்கள் தாக்கி அழிக்கின்றன.

ட்ரோகோடெர்மா வ்ரிடி மற்றும் ட்ரைகோடெர்மா ஹார்சியானம்:-

இந்த பாக்டீரியாக்கள் பயிர்களுக்கு நோய்களை ஏற்படுத்தும் பூஞ்சானத்தை அழிக்கின்றன.

சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ்:-

பூஞ்சான நோய்கள் இலைக்கறுகள் நோய்களை இந்த வகை பாக்டீரியாக்கள் கட்டுப் படுத்துகின்றன. .

இது போல இன்னும் ஏராளமான நன்மை செய்யும் நுன்னுயிர்களும் பேக்டீரியாக்களும்

ரசாயன உரங்கள் பூச்சி மருந்துகளால் அழிக்கப் பட்டன..

ஆக்கம்: கோபால தேசிகன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :