Wednesday, April 10, 2019

Keerthivasan

கல்கி தலையங்கம் - திரு மாலன் பதில்

வெறுமனே திரு.மோடி அவர்களின் மீது வெறுப்பை மட்டுமே முன் வைத்து தலையங்கம் எழுதியுள்ள கல்கி பத்திரிக்கைக்கு பத்திரிக்கையாளர் திரு.மாலன் மாலன் நாராயணன் அவர்களின் பதில்.


பெருமதிப்பிற்குரிய கல்கி ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்

இந்த வார (2019 மார்ச் 23) கல்கித் தலையங்கம் “ மகாராஜனே சாட்சி! தலையங்கம் கண்டேன் திடுக்கிட்டேன்.

அந்த அதிர்சியின் காரணமாகவே இதனை எழுதத் தலைப்பட்டேன்.

“அவரது (மோதியின்) பல நடவடிக்கைகள் நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன….” என்கிறது கல்கி தலையங்கம்.
1.மோதியின் நடவடிக்கைகள் குறித்து கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அஞ்சுகிறார்கள்.ஏனெனில் அவரது ஆட்சிதான் கறுப்புப் பணச் சட்டத்தை (Black Money (Undisclosed Foreign Income and Assets) and Imposition of Tax Act, 2015) இயற்றியது.

2.அவரைக் குறித்து பினாமிச் சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் அஞ்சுகிறார்கள் ஏனெனில் அவரது ஆட்சிதான் Benami Transactions (Prohibition) Amendment act 2016 இயற்றியது.

3.அவரைக் கண்டு கடன் வாங்கிவிட்டு அயல்நாட்டுக்கு ஓடிப் போய் ஒளிந்து கொள்கிறவர்கள் அஞ்சுகிறார்கள் ஏனெனில் அவரது அரசுதான் ( The Fugitive economic offenders act 2018) இயற்றியது.

சுருக்கமாகச் சொன்னால் ஊழல் செய்தவர்கள், பொருளாதாரக் குற்றங்கள் செய்தவர்கள் அச்சத்தினால் குடும்பத்தோடு போய் நீதிமன்றங்களில் முன் ஜாமீன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நேர்மைக்குத் தாயென்று சொல்லுமளவிற்கு நேர்மையோடும், கண்ணியத்தோடும்  பத்திரிகை உலகில் கோலோச்சி வரும் எங்கள் கல்கி ஏன் மோதியைக் கண்டு அஞ்ச வேண்டும்?

அரசு விழாக்களில் கட்சி அரசியல் பேசி  எதிர்க்கட்சிகளைத் தாக்குகிறார். என்று ஒரு குற்றச்சாட்டு. ஆனால் அவர் திருப்பூருக்கு வந்த போதும் சரி, வண்டலூருக்கு அருகே கிளாம்பாக்கம் வந்த போதும் சரி, இரு மேடைகள் அமைக்கப்பட்டன. அரசு நிகழ்ச்சிகளுக்கு ஒன்று. கட்சி நிகழ்ச்சிக்கு ஒன்று  (காண்க தினமலர் செய்தி1 :

” திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் பங்கேற்க, பிரதமர் மோடி, நாளை மதியம் திருப்பூர் வருகிறார்.பெருமாநல்லுார் அருகில், விழா மேடையில் இருந்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைக்கிறார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.நிகழ்ச்சிக்கு பின், மற்றொரு மேடையில் நடக்கும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். –தினமலர் பிப்ரவரி 09 2019. செய்தி நறுக்கை இணைத்துள்ளேன்)

இது கிளாம்பாக்கக் கூட்டம் பற்றி தமிழ் இந்து வெளியிட்டுள்ள செய்தி2: “தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக, மத்திய அரசு திட்ட தொடக்க விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக, கிளாம்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில், அருகருகே இரு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.” இந்து தமிழ் திசை மார்ச் 23. செய்தி நறுக்கை இணைத்துள்ளேன்)

இந்தச் செய்தி நறுக்குகளே உங்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என்பதை மறுக்கும்

“இந்து மதம்தான் தேசபக்தி என்ற மாயத் தோற்றம்” ஏற்பட என்ன காரணம்?
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்? மும்பையில் தாக்குதல் நடத்தி 174 அப்பாவி உயிர்களை பலி வாங்கியவர்கள் யார்? கோவையில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் யார்? இந்தத் தாக்குதலுக்குப் பின்னுள்ள நோக்கம் என்ன? தேசத்தின் மீது பற்று இருப்பவர்கள் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல்குருவை ஆதரித்துப் பேசுவார்களா? ஆண்டர்சன், அமெரிக்க FBIஐயிடம் மும்பைத் தாக்குதல் ISIயின் ஆணையின்படி நடத்தப்பட்டது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்து அதற்கான தண்டனையையும் அனுபவித்து வரும் போது, பாகிஸ்தானைக் குற்றம் சொல்லக் கூடாது என்று பேசுகிறவர்கள் தேசபக்தர்களா? பாலகோட் தாக்குதலில் சேதம் ஏற்பட்டதை முகமது அசாரின் சகோதரரே ஏற்றுக் கொண்ட பின்பும் நாட்டின் ராணுவத்தின் திறமையையும், உறுதிப்பாட்டையும் சந்தேகிப்பவர்கள் தேசபக்தர்களாக இருக்க முடியுமா?

பாடத்திட்டத்தில் 'ஒரே மதம் ஒரே மொழி' என்பது போல திணிகப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை எந்த CBSE மாணவர்களிடமாவது புத்தகத்தை வாங்கிப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். இது காங்கிரஸ் ஆட்சியில் எப்படிக்  கையாளப்பட்டது என்பதை அறிந்து கொள்ள ஏதுவாக அப்போது அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்த கன்னட எழுத்தாளர் பைரப்பா எழுதிய கட்டுரையை3 இத்துடன் இணைத்துள்ளேன்.

இது தொடர்பாக இன்னொரு சான்றும் தருகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட 9ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நாடார்களை இழிவுபடுத்தும் விதமாக  எழுதப்பட்ட பகுதிகள் இருந்தன. அதை நீக்கக் கோரி ஜெயலலிதா கடிதம் எழுதினார். கருணாநிதி வைகோ போன்றவர்கள் அறிக்கை விட்டனர். ஆனால் அவை நீக்கப்படவில்லை. ஆனால் அண்மையில் அவை மோதி ஆட்சியில் நீக்கப்பட்டுள்ளன.

மாநில உரிமைகள் படிப்படியாக பறிக்கப்படுகின்றன என்ற கவலையில் உண்மையிருந்தால் அது நியாயமான கவலை. அப்படிக் கவலைப்படுகிறவர்கள், மாநில அரசுப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது எப்போது,  ஜிஎஸ்டி கவுன்சில் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் இருக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ரூ 500, ரூ 1000 நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பு ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததுதான். அதற்குக் காரணம் அந்த நடவடிக்கையை பகிரங்கப்படுத்திவிட்டு மேற்கொள்ள முடியாது என்பதும். வங்கி அதிகாரிகளுக்கும் கறுப்புப் பணம் வைத்திருக்கும் பணக்காரர்களுக்கும் இடையே உண்டான உறவு அறியப்பட்ட ஒன்றே என்பதும்தான். இது போன்ற அதிமுக்கியமான நடவடிக்கையை மேற்கொள்ளும் போது அதை ரகசியமாகச் செய்வது இது முதன் முறை அல்ல. அமைச்சரவை ஒப்புதல் பெற்றா இந்திரா அவசர நிலையை அறிவித்தார் இந்திரா?

வேலை இழப்பு என்பதும் தவறான பிரச்சாரம். இப்போதுள்ள சட்டங்களின்படி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை பிராவிடண்ட் பண்ட் அலுவலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அதே போல ஜிஎஸ்டி ரிடர்னிலும் ஒவ்வொரு மாதமும் எத்தனை நிரந்திர ஊழியர்கள், எத்தனை ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளார்கள் என்ற தகவல் அளிக்கப்பட வேண்டும். இந்தத் தகவல்களின்படி கணக்கிடப்பட்ட விவரம் ஒன்றரைக் கோடிப் பேர் புதிதாக வேலை பெற்றுள்ளார்கள் எனத் தெரிவிக்கிறது. எந்தக் கட்சியையும் சேராத ஆதி கோத்ரஜ்ஜும் வேலை இழப்பு என்பது எதிர்க்கட்சிகளின் அரசியல் நோக்கம் கொண்ட பிரசாரம் என்கிறார்.

பொருளாதார வளர்ச்சியைப் பற்றி விரிவாக எழுத இடம் இல்லை. ஆதி கோத்ரஜ் நம்முடைய வாங்கும் சக்தி பற்றித் தெரிவித்துள்ள கருத்துக்களும், உலக வங்கித் தலைவர் கூறியுள்ளவையும் அதைப் பற்றிப் பேசும்.

சாக்ஷி மகாராஜ் நீண்டகாலமாக எம்.பி.யாக இருந்து வருகிறார் என்ற போதும் பாஜகவின் அதிகாரப் பூர்வ செய்தித் தொடர்பாளரோ, தலைமைப் பொறுப்பில் உள்ளவரோ அல்ல. அவர் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பல முறை வெளியிட்டு வந்திருக்கிறார். கர்நாடகத்தில் ஒரு காங்கிரஸ் தலைவர் மோதியைக் கொல்ல வேண்டும் என்று பேசியிருக்கிறார். அது காங்கிரசின் கருத்தாகிவிடுமா?

எமெர்ஜென்சிக்குப் பிறகு ஜனநாயகத்தைப் பாதுகாக்க அரசமைப்புச் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன. எனவே கவலை வேண்டாம். இந்தியாவில் சர்வாதிகாரம் ஏற்படாது. நாம் பாகிஸ்தான் இல்லை. இந்தியா!

என்றாலும் நாடு முன்னேற ஒரு வலுவான தலைமை வேண்டும். நீங்கள் சொல்வதை ஏற்று மோதிக்கு எதிராக வாக்களிக்க நான் தயார். ஆனால் அவருக்கு மாற்று யார் என்று சுட்டிக் காட்டுங்கள். காங்கிரசே பிரதமராக அறிவிக்கத் தயங்குகிற, ஒரு மாநிலத்தில் அமைச்சராகக் கூட இருந்திராத அனுபவமற்ற ராகுல் காந்தியா? அல்லது நாற்பது தொகுதிகளில் மாத்திரமே போட்டியிடுகிற (அதில் எத்தனை ஜெயிப்பார்களோ?) மாயாவதி, மம்தாவா? சொல்லுங்கள், யார் மோதிக்கு மாற்று?

காங்கிரசிலிருந்து வெளியேறிய பின் அதைக் கடைசி மூச்சுவரை எதிர்த்தவர் ராஜாஜி. அவருக்கு அந்தக் கட்சியின் மீது தனிப்பட்ட காழ்ப்பு ஏதும் இல்லை. அந்தக் கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகள் ஏற்கத்தக்கனவாக இல்லை என்பதால் அவர் அதை எதிர்த்தார். நாட்டில் ஊழல் குறைய வேண்டும் என்பது அவரது வேட்கைகளில் ஒன்றாக இருந்தது. வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்பது அவர் நம்பிக்கை அவர் எதிர்த்த காங்கிரஸ் இப்போது மேம்பட்டுவிட்டதா? இல்லை மேலும் மோசமாக ஆகியிருக்கிறதா? இந்தக் கேள்வியை கல்கி இதழ் ஆராய்ந்து அதற்கேற்ப முடிவெடுக்கட்டும்.

கல்கியின் தொடக்க கால வாசகங்கள் நினைவுக்கு வருகின்றன. கல்கியின் இலட்சியம் தேசநலன், தேசநலன், தேச நலன் என்று மும்முறை அறுதியிட்டுச் சொன்னார் பேராசிரியர் கல்கி. அது என்றும் தொடர வேண்டும் என விரும்பும் நெடுநாளைய வாசகன் நான்.

கடிதம் நீண்டுவிட்டது. மன்னிக்க. ஆனால் விரிவாக எழுதுவது தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. இது உங்களுக்குச் சிந்திக்க சிறு பொறியேனும் தருமானால் மகிழ்வேன்

பேரன்புடனும், பெரும் மதிப்புடனும்

வாசகன்

மாலன்

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனவற்றிற்கான இணைப்புக்கள்:

1.https://www.dinamalar.com/news_detail.asp?id=2209631&Print=1

2.https://tamil.thehindu.com/tamilnadu/article26433712.ece

3.https://www.prekshaa.in/dr-s-l-bhyrappa-distorting-indian-history

4.https://www.dailythanthi.com/News/State/2016/12/22010613/CBSE-9th-grade-Social-Science-at-the-Nadar-community.vpf

5.https://www.financialexpress.com/economy/modi-vindicated-as-iim-study-debunks-jobless-growth-theory-says-15-million-added-to-labour-force-yearly/1018590/?fbclid=IwAR0bEni_sMwXrlwyu1FyZgHesom7SSibrxPMzsc1WEAAe0g8AI8qdmZrFmk

6.https://www.livemint.com/news/india/shortage-of-jobs-it-s-a-wrong-perception-created-by-oppn-adi-godrej-1551033466994.html

7.https://indianexpress.com/article/india/world-bank-president-congratulates-pm-modi-as-india-rises-in-ease-of-doing-business-ranking-5431887
Read More
Keerthivasan

National Herald - புரட்சிகரமான நமக்கு நாமே திட்டம்


https://cdn-live.theprint.in/wp-content/uploads/2018/09/2018_9img22_Sep_2018_PTI9_22_2018_000067B-e1544532517456-696x437.jpg

National Herald விவகாரத்தில்..வரி ஏய்ப்பு என்று 100 கோடி ரூபாய் அபராதம் கட்டுமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதை எதிர்த்து .. நீதிமன்றத்திலும் வழக்கு நடக்கிறது. 'வழக்கம் போல' ப.சி.யும் வாதாடினார். இவ்வழக்கில் சோனியா& ராகுலுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது.

இந்த National Herald விவாகரம் தான் என்ன ? நீதிமன்ற வழக்கின் அடிப்படைகள் /விபரங்கள் தான் என்னென்ன ? என்று பார்க்கலாம்.

National Herald என்கிற செய்தித்தாள் 1930 களில் நேருவால் தொடங்கப்பட்டது.

ஆனால்..2000-ம் வருடம், 90 கோடி ரூபாய் கடனுடன் படு நஷ்டமடைந்து விட்டதாக அறிவிக்கப் பட்டது. அப்போது அதன் அசையும் சொத்து-அசையா சொத்து உட்பட மொத்த சொத்து மதிப்பு 5000 கோடி ! நஷ்டத்தை முன்னிட்டு ..இதன் இயக்குனர்களான சோனியா, ராகுல், மோதிலால் வோஹ்ரா மூவரும் National Herald-ஐ ..Young India Ltd-க்கு விற்க முடிவு செய்கிறார்கள்.

National Herald-ன் 90 கோடி கடனை அடைப்பதாகவும், பதிலாக அதன் 5000 கோடி சொத்து மதிப்பை ..Young India Ltd பெறுவதாகவும் ஏற்பாடு.

வேடிக்கை என்னவென்றால்..Young India-ன் இயக்குனர்களாக இருப்பவர்களும் அதே சோனியா, ராகுல், மோதிலால் வோஹ்ரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோர் தான் ! Young India Ltd-ல் சோனியா-ராகுலுக்கு 36 % பங்கு உரிமை. மீதமுள்ள பங்கு உரிமை ..வோரா-ஆஸ்கார் பெர்னாண்டஸ்
உடையது.

இதற்காக ...National Herald-ன் இயக்குனரான மோதிலால் வோரா ...Young India-ன் இயக்குனரான மோதிலால் வோராவுடன்..அதாவது தன்னுடன் தானே பேச்சு வார்த்தை நடத்துகிறார் ! :D

இதில் இன்னொரு சுவாரசியம் நடக்கிறது.

Natuonal Herald-ன் 90 கோடி கடனை அடைப்பதாக ஏற்றுக் கொண்ட Young India , காங்கிரஸ் கட்சியிடம் 90 கோடியை கடனாக கேட்கிறது. உடனே இது குறித்து பரிசீலிப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர், துணை தலைவர், பொது செயலாளர், பொருளாளர் ஆகியோர் கூடி பேசுகிறார்கள். இவர்களெல்லாம் யார் ? அதே சோனியா, ராகுல், ஆஸ்கார் பெர்னாண்டஸ், மோதிலால் வோரா !

காங்கிரஸ் 90 கோடி ரூபாய் கடன் கொடுக்க அதன் பொருளாளர் மோதிலால் வோரா அனுமதி கொடுக்ககிறார். இது...நமக்கு நாமே -1

அதே மோதிலால் வோரா ..Young India -ன் இயக்குனராக 90 கோடி ரூபாயை கடனாக வாங்கிக் கொள்கிறார்.

அதாவது ..தானே கொடுத்து.. தானே பெற்றுக் கொள்கிறார்! :D

இது...நமக்கு நாமே - 2

அதே மோதிலால் வோரா..National Herald-ன் இயக்குனராக ..90 கோடி ரூபாயை பெற்றுக் கொண்டு..5000 கோடி சொத்துக்களை young India Ltd-க்கு தாரை வார்க்கிறார். அனைத்தையும் ஒரே நபர் செய்கிறார்!

இது...நமக்கு நாமே - 3

இதோடு முடியவில்லை ஊழல் வேடிக்கை.

மறுநாள்..காங்கிரஸ் கட்சியின் உயர் பொறுப்பாளர்களான ..சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோர் கூடி..நாட்டின் விடுதலைக்கு National Herald அளித்திருக்கும் பங்களிப்பை பாராட்டி.. அதன் கடனை அடைப்பதற்காக Young India ltd வாங்கிய 90 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தவேண்டாம் என்று தீர்மானம் போடுகிறார்கள்!

ஆக...National Herald, Young India Ltd காட்டாற்று வெள்ளத்தில்.. கட்சி பணமான 90 கோடி ரூபாயும் சேர்ந்து அடித்துக் கொண்டு சென்றது!

இது...நமக்கு நாமே-4

இதில்..National Herald- ன் 5000 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும்-அசையா சொத்துக்களில்..டெல்லி பகதூர் ஷா ஜாபர் மார்க் -ல் உள்ள 11 மாடி அடுக்குமாடி கட்டடமும் அடக்கம். இதில் தான், பாஸ்போர்ட் அலுவலகம் உட்பட பல அலுவலங்கங்கள் வாடகைக்கு இயங்குகின்றன.

இத்தகைய நிலையில்..ராகுல்...''எந்த அடிப்படை நேர்மையில்'' .. விவாதம் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் ????????!!!

இந்தக் கூட்டணி தனக்கு தானே சூட்டிக் கொண்ட பெயர் தான் முற்போக்கு கூட்டணி !! :D

இது நமக்கு நாமே -5

- பானு கோம்ஸ் பேஸ்புக் பதிவில் இருந்து...
Read More

Wednesday, September 26, 2018

Keerthivasan

திலீபனை கொன்ற புலிகள்





அந்த வடமாராட்சி தாக்குதலில் புலிகள் கொல்லபடும் நிலையில் இருந்தனர், ஏராளாமன மக்கள் சாகும் நிலை இருந்தது, இனி புலிகள் தமிழரை காக்க முடியாது என்ற நிலை அது

இந்தியா முற்றுகையினை விலக்க சொன்னது, ஜெயவர்ததனே கேட்கவில்லை, ராஜிவ் கப்பல் நிறைய உதவிபொருளை அனுப்பினார், இலங்கையோ திருப்பி அனுப்பியது

ஐ.நா அனுமதி இன்றி விமானம் மூலம் உதவி பொருளையும் பாதுகாப்பிற்காக மிக் விமானத்தையும் அனுப்பி இலங்கையினை மிரட்டியது இந்தியா, அதன் பின்பே இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் வந்தது,அமைதியும் வந்தது

அது இந்திய அமைதிபடை இலங்கையில் கால்பதித்த நேரம், சிங்கள தாக்குதலிலிருந்து தம்மை காக்க இந்தியா வந்ததை ஈழதமிழர்கள் கொண்டாடிகொண்டிருந்த நேரம்

ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா போராளி குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம்

புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட
அமைதியாக இருக்க‌ மாதாந்திர 50 லட்சத்தையும் வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் சண்டை தொடங்கலாம் என எதிர்பார்த்த நேரம்.

ஆம் புலிகளுக்கு இந்திய ராணுவம் வந்ததோ அமைதி திரும்பியதோ கொஞ்சமும் பிடிக்கவில்லை, நேரம் பார்த்து சண்டை தொடங்கும் முடிவிலே இருந்தனர். ஆனால் இந்திய ராணுவமோ யுத்தம் வெடிக்கும் என நினைக்கவே இல்லை, சும்மா சுற்றுபயணம் போல சென்றிருந்தது

ஆனால் ஜெயவர்த்தனேவோ அனுபவஸ்தர், இந்தியாவினை எதிர்க்கும் அளவிற்கெல்லாம் செல்லவே இல்லை. சீரழிந்த வடக்கு மாகாணத்தை சீர் படுத்ததொடங்கினார்

புலிகளை கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மறக்க தொடங்கினர், புலிகளின் வசூலும் பாதிக்கபட்டது

புலிகள் பொறுமை இழந்து மக்களை தூண்டிவிட ஆரம்பித்தனர், இந்திய முகாம்கள் முன்னால் ஈழமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர், பிண்ணணியில் புலிகள்

கொஞ்சம் கொஞ்சமாக இது அதிகரித்தது, இந்திய ராணுவம் முதலில் குழம்பினாலும் பின்னால் சுதாரித்தது, ஏதோ அவர்களுக்கு புரிந்தது. அன்று வரவேற்ற மக்களுக்கு இன்று என்ன ஆனது? ஏதோ துர்போதனை, நடக்கட்டும்

இந்திய இலங்கை ஒப்பந்தபடி வடக்கே சீரழிந்திருந்த நிர்வகத்தை ஜெயவர்த்தனே நடத்த தொடங்கினார். அதுவரை காவல் நிலையங்கள் இல்லை, அவர் திறக்கதொடங்கினார்

புலிகளுக்கு அழிவுக்கண் திறந்தது, காரணம் காவல்நிலையம் திறப்பது மக்களுக்கு சௌகர்யமோ இல்லையோ, தங்களுக்கு ஆபத்து என கருதினர். அவர்களை பொறுத்தவரை நீதி, காவல் எல்லாம் அவர்கள்தான், ஒரே நோக்கம் வசூல்

அதற்கு முன்பாக மக்களை தூண்டிவிட்டு காவல்நிலையங்களை அடித்து நொறுக்கிய காட்சியியினை கண்ட இந்திய ராணுவம் அமைதியாகத்தான் இருந்தது, ஆனால் ஏதோ நடக்கபோவதை புரிந்து கொண்டது

அப்படி அந்நேரம் ஆங்காங்கே மக்கள் இந்தியாவினை எதிர்த்தாலும் பெரும் எதிர்ப்பு இல்லை. இந்தியாவினை மொத்த மக்களும் எதிர்க்க புலிகளுக்கு ஒரு காரணம் தேவைபட்டது, மொத்த ஈழமக்களும் இந்தியாவினை காரி துப்ப ஒரு விஷயம் தேவைபட்டது, தந்திரமாக திட்டமிட்டார்கள்.

சில காரணங்களை உள்ளடக்கி திலிபன எனும் ராசையா பார்த்தீபனை உண்ணாவிரதம் என களமிறக்கினர்.

காரணங்கள் இவைதான், புதிய காவல் நிலையம் திறக்க கூடாது, ஊர்க்காவல் படை கூடாது, எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துகொள்வோம், குறிப்பாக வடக்கு கிழக்கில் சிங்களன் வரவே கூடாது, இதனை ஏற்காதவரையில் உண்ணாவிரதம் தொடங்கும் என்றனர்.

இது சிக்கலான விஷயம், இந்தியபடை அமைதிகாக்க சென்றது, ஒருங்கிணைந்த ஈழமாகாணத்து தேர்தலை அமைதியாக நடத்த சென்றது, அங்கே நீதிமன்றம் கூடாது, காவல்நிலையம் கூடாது என்பது ஏற்றுகொள்ளகூடியது அல்ல, சட்டம் ஒழுங்கு வேண்டாமா?

கொழும்பில் ஏராளமான தமிழர்கள் வாழும்போது வடக்கே சிங்களர் நுழைய கூடாது என்பது எப்படி சாத்தியம்?

அதுவும் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என ஜெயவர்த்தனேவினை ஒப்புகொள்ளசெய்தபின் ஏன் தயக்கம் என ஏகபட்ட கருத்துக்கள் இந்தியாவிற்கு.

முதலில் உண்ணாவிரதத்தினை இந்தியா கண்டுகொள்ளவில்லை, காரணம் அப்படி தன்னை மிரட்டி தான் பணிந்தால் எடுத்தற்கெல்லாம் உண்ணாவிரதம் என கிளம்பிவிடுவார்கள் என்பது இந்தியாவிற்கு தெரியாததல்ல‌

இந்தியாவினை தன் விருப்பத்திற்கு மட்டும் ஆட்டுவிக்கும் விபரீத ஆயுதமாக புலிகள் திலீபனை பயன்படுத்துவதை இந்தியா உணர்ந்தது அமைதி காத்தது

ஆனால் புலிகள் ஈழமெங்கும் மக்களை அழைத்து திலீபனை காண செய்து கொடுங்கோல் இந்தியா எப்படி நம்மை சாகவிடுகின்றது பாரீர் என ஒப்பாரி வைத்தனர்.

மகாத்மா காந்தியும் உண்ணாவிரதம் இருந்தார், ஆனால் சுதந்திரம் கிடைக்கும்வரை இருந்து சாவேன் என அவர் இருக்கவில்லை. ஆனால் சில உரிமைகளை அவ்வப்போது பெற்றுகொடுக்கவும் தவறவில்லை

அந்த உயரிய தியாகத்திற்கும் வீண் பிடிவாததத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணரா நாடல்ல இந்தியா, அது அப்படியே இருந்தது.

புலிகளும் திலீபன் செத்தே தீரவேண்டும் என முடிவோடே இருந்தனர், இல்லை என்றால் சாகப்போகும் அவன் தன்னை காப்பாற்றவேண்டாம் என எழுதிகொடுத்ததாக சொன்ன கடிதத்தை காட்டியே அவனுக்கு ஒரு சொட்டு நீர் கொடுக்காமல் வதைத்தனர்.

புலிகள் நினைத்திருந்தால் அவனை காப்பாற்றி இருக்கலாம், புலிதலைவர் சொன்னால் சயனைடு கடிக்கும் புலிகள், அவர் கட்டளை இட்டால் நீர் குடிக்கமாட்டார்களா?

அவர் காட்டிய பிடிவாதமே திலீபனை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது, ஈழ மக்களிடையே இந்திய எதிர்ப்பு அதிகரித்தது.

இறுதியில் அவன் செத்துவிடுவான் என உறுதிசெய்யபட்ட நிலையில் இந்திய தரப்பு அணுகுமுறைகள் அவனை பாதுகாக்க வண்ணம் புலிகளும் ஆடினர், அதாவது தாமதபடுத்தினர். வெளியில் துடித்தனர், உள்ளுக்குள் கடும் திட்டம்

ஏற்றுகொள்ளமுடியாத கோரிக்கைகளுக்கு எப்படி செவிகொடுக்க முடியும் என இந்தியா யோசிக்க, வதைக்கபட்டு செத்தான் திலீபன்

அவன் செத்ததும் மொத்த ஈழதமிழரையும் இந்தியா கைவிட்டுவிட்டதாக ஒப்பாரி வைத்து, அவன் உடலை பெரும் பேரணியாக்கி ஒருவித பதற்ற நிலையினை உண்டாக்கினர் புலிகள்

அந்த நாள்தான் இதே செப்டம்பர் 26.

அதாவது மக்கள் போரினை மறந்து அமைதிவழிக்கு திரும்பிகொண்டிருந்தபொழுது, நிம்மதியாக பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து மகிழ்ந்தபொழுது, இனி போராளி குழுக்கள் வேண்டாம், இந்திய ராணுவம் எம்மை காக்கும் என் கொஞ்சம் கொஞ்சமாக புலிகளை மறக்க நினைத்தபொழுது

பெரும் சர்ச்சையாக திலீபனை சாகடித்து இந்திய ராணுவத்திற்கு எதிராக மக்களை திருப்பினர் புலிகள்.

ஆக எப்படியும் புலிகள் இந்தியாவுடன் மோதுவர், நாம் ஏன் அவசரபடவேண்டும் என்ற அனுபவஸ்த ஜெயவர்த்தனேவின் நிதானைம் வெற்றிபெற்ற வேளை அது.

அதன் பின் நடக்க கூடாதது எல்லாம் நடந்து, இன்று ஈழமக்களுக்கு ஒருங்கிணணைந்த மாநிலம் கூட இன்றி சிங்கள ராணுவ முற்றுகைக்குள்ளே வாழும்படி செய்தாகிவிட்டு அவர்களும் பரலோகம் சென்றாயிற்று

திலீபனும் புலிகள் அமைப்பின் உறுப்பினராக ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல, போராளிகுழுக்கள் ஒழிப்பில் அவர் காட்டிய வெறியும், இன்னபிற அழிச்சாட்டிய கொடுமைகளும் பல இடங்களில் காண கிடக்கின்றன‌

புலிகளின் இரண்டாம் உண்ணாவிரதம் இது, முதல் உண்ணாவிரதம் சென்னையில் ராமசந்திரன் காலத்தில் நடந்தது. சார்க் மாநாட்டையொட்டி ஜெயவர்த்தனே இந்தியா வரும்பொழுது சென்னையில் இருந்த பிரபாகரனை நிராயுதபாணியாக்கி வீட்டு சிறையில் தள்ளினார் ராமச்சந்திரன்

அதாவது மத்திய அரசு சொல்லி, செயலில் இறங்கினார் அவர். செய்தது அந்நாளைய கமிஷனர் மோகன் தாஸ், பழி சுமந்ததும் அவரே

ஒன்றுமறியாத கன்னிபோல கவலையாய் விழித்துகொண்டிருந்தார் ராமசந்திரன், காரணம் அவரின் ஈழ இமேஜை காப்பாற்றும் நாடகம் அப்படி.

அன்றெல்லாம் நெடுமாறன், வைகோ எல்லாம் ஏய் துரோகி ராஜினாமா செய் என்றெல்லாம் சொல்லவே இல்லை

மாநாடு முடிந்ததும் எச்சரிக்கையுடன் கருவிகளை பிரபாகரனிடம் கொடுத்தார் மோகன் தாஸ். ஒரே நாளில் உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு அடித்து புரண்டு இலங்கை ஓடிய பிரபாகரன அதன்பின் தமிழக பக்கம்வரவே இல்லை.

(பின்னாளில் பத்மநாபா, ராஜிவ் என எல்லா கொலைகளையும் தமிழகத்தில் செய்து தமிழகத்தை ஒரு கலவர பூமியாக்க புலிகள் எடுத்த முயற்சிக்கெல்லாம் உட்கோபம் அதுவேதான்.

ராமச்சந்திரன் அருமையாக நடித்த அரசியல் காட்சிகளில் இதுவும் ஒன்று.)

காரணம் உண்ணாவிரதம் என ஆரம்பித்து சென்னையில் ஒரு பதற்றத்தை அவர் தொடங்கினார், வீரமணி கும்பலின் ஜால்ரா ஒருபக்கம், புலிகளை பற்றிஅறியா தமிழக மக்களின் அப்பாவித்தனம் ஒருபக்கம் என மாநிலம் தடுமாறுவதை மோகன் தாஸ் விரும்பவில்லை

இன்னொன்று இலங்கை தீவிரவாதிகளுக்கு இடமளித்துவிட்டு பஞ்சாப், காஷ்மீர் என பாகிஸ்தானை எப்படி கண்டிக்கமுடியும் என்ற மோகன் தாஸின் பேட்டி பாராட்டதக்கது.

இதெல்லாம் ராமச்சந்திரனுக்கு தெரிந்துதான் நடந்தது, ஆனாலும் இன்றுவரை அவரை ஒருவார்த்தை யாரும் பேசமுடியாது ஜாதகம் அப்படி.

ஆக அன்று எப்படியும் தன்னை தமிழக மக்கள் காப்பாற்றுவார்கள் என உண்ணாவிரதம் தொடங்கிய பிரபாகரன், பின் நிச்சயம் இம்மும்றை சாகத்தான் வேண்டும் என்ற நிலையில் திலீபனை களம் இறக்கினார்.

ஏன் சாகவேண்டிய அந்த உண்ணாவிரதத்தை பிரபாகரன் இருந்தால் என்ன?

முன்பு சிங்கள பலகலைகழகத்திற்கெதிராக மாணவிகள் உண்ணாவிரதம் இருந்தபொழுது, இது எல்லாம் வேலைக்கு ஆகாது, வன்முறை ஒன்றே வழி என அம்மாணவியரை புலிகள் கடத்தினர். அவர்களில் ஒருவரை பிரபாகரன் திருமணமும் செய்தார்

அவர்தான் மதிவதனி,

அவருக்கு அன்று கொடுக்கபட்ட போதனை உண்ணாவிரதம் எல்லாம் சும்மா, தலைவர் பிரபாகரனை நம்பு

பின்பு திலீபனுக்கு கொடுக்கபட்ட கட்டளை, ஆயுத பலத்தால் இப்போது மக்களை திரட்டமுடியாது, உண்ணாவிரதம் இருந்து செத்துபோ, உணர்ச்சிகளை வைத்து பின் நாங்கள் பார்த்துகொள்கின்றோம்

அதாவது மதிவதனி இருந்தால் காப்பாற்றுவார்கள், திலீபன் இருந்தால் சாகும் வரை கிட்டே இருந்து கொல்வார்கள்.

அதன்பின் ஈழபிரச்சினை வேறுகோணத்தில் சென்று எல்லாம் நாசமாகிவிட்டது, எனினும் தங்களை மக்களிடம் மறுபடியும் கொண்டு சேர்ததற்காக யாழ்பாணத்தில் அவனுக்கொரு நினைவு தூண் புலிகளால் கட்டபட்டது

(இன்று அது சிதைக்கபட்டு அழிந்து கிடக்கின்றது, கண்டுகொள்ள யாருமில்லை)

தியாக தீபம் எனும் அடையாளம் காசி ஆனந்தனால் கொடுக்கபட்டது, பின் திலீபன் பெரும் அடையாளம் ஆனார்

ஏராளமான பேரினை கொன்றவர்கள் புலிகள், ஒருவனை உலகின் கண்முன் வதைத்து கொன்றனர் என்றால் அது திலீபனை மட்டுமே.

அவன் கடைசிவார்த்தை வரை பிரபாகரன் பின்னால் திரளுங்கள், ஈழத்தில் நமது கொடி நமது ராணுவம் என சொல்லியே செத்தான் என்றால் அவன் யாரால் தூண்டபட்டு, எதற்காக செத்தான் என்பது எளிதில் முடிவுக்கு வரகூடியது,

ஒரே காரணம் இந்திய ராணுவம் வெளியேற மக்கள் சண்டைக்கு வரவேண்டும்

அதன் பின்னும் ஈழமக்கள் அமைதிகாக்க, குமாரப்பா போன்றோர் இந்திய கைதுசெய்யபட்டனர், ஆனால் சயனைடு இல்லை. பின்னர் இலங்கை இந்திய அரசு பேசிகொண்டிருக்கும்பொழுது கைதிகளை சந்திக்க வந்த புலிகள் சயனைடை கொடுத்து சாக சொல்ல மறுபடி பற்றி எரிந்தது ஈழம்,

2009 வரை எரிந்தது.

அன்று இந்திய முயற்சியில் எல்லாம் மிக நன்றாக நடந்துகொண்டிருந்த பொழுது திலீபனின் வதை சாவு எல்லாவாற்றையும் நாசமாக்கி மக்கள் உணர்ச்சிகள் மீண்டும் புலிகளால் அநியாயமாக தூண்டபட்டு எல்லாம் மண்ணாய் போக மிக முக்கிய காரணமாய் அமைந்துவிட்டது.

அனுபவஸ்த ஜெயவர்த்தனே நிதானமாக தன் எதிரிகளை மோதவிட்டு ரசிக்க தொடங்கினார், வரலாற்றின் பெரும் தந்திரக்கார வில்லன் அவர்.

ஆனால் நிதானமிழந்த புலிகள் முட்டாள்தனமாக‌ உதவவந்த இந்தியா மீதே பாய இன்று எல்லாம் சர்வநாசம்.

இன்றும் ஆங்காங்கே தீயாக தீபம், திலீபன், இந்திய கோரமுகம் என சிலர் தமிழகத்திலும் வீரவணக்கம் என இறங்கலாம், புரிந்தவர்களுக்கு புரியும் திலீபன் ஏன் சாகடிக்கபட்டான் என்பது

இந்தியாவிற்கு எதிராக அன்று ஏவபட்ட ஒரு தற்கொலை படை அவன்.

போகட்டும்

திலீபன் உண்ணாவிரதம் தொடங்கும்பொழுது பிரபாகரன் சொன்னாராம் "திலீபா நீ முன்னால் போ..நான் பின்னால் வருகிறேன்"

சொன்னபடி உடனே வந்தாரா? இல்லை. அவன் செத்ததும் அவனை வைத்து சீன் போட்டு என்னமோ செய்தார்

22 ஆண்டுகள் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு தீலிபனுக்கு சொன்னபடி முள்ளிவாய்க்காலில் அவன் இருக்குமிடம் சென்றார்.

அவர் சென்றது பிரச்சினை இல்லை, மாறாக எத்தனை லட்சம் தமிழ்மக்களை கூட்டிகொண்டு சென்றுவிட்டார்.

அதுதான் மகா பரிதாபம், இந்த நூற்றாண்டின் பெரும் கொடுமைகளில் ஒன்று.

இப்படி எல்லோரையும் அனுப்பிவிட்டு இறுதியாக இவர் சென்றார், சரி இவருக்கு பின் போராட யாரை விட்டு சென்றார்? எதனை மிச்சம் வைத்துவிட்டு சென்றார்?

இதனைபற்றி எல்லாம் நாம் பேசகூடாது, இன்று தமிழகத்தில் அங்கிள் கோஷ்டியினர் இப்படியும் தொடங்கலாம்

"திலீபன் சாவுக்கு யார் காரணம் தெரியுமா என் உறவே..?"

ராஜிவ்,கலைஞர், சோனியா, மன்மோகன்சிங் மற்றும் இந்தியா என சிலர் முழங்கிகொண்டிருப்பர்,

ஆனால் அப்போது மிக அமைதியாக இருந்த ம.கோ ராமச்சந்திரன் என்பவரை பற்றி மூச்சே வராது.

அமைதிபடை அனுப்பிய இந்திய தளபதி சுந்தர்ஜி (சுந்தர்.சி அல்ல) ஒரு தமிழர் என்பதை பற்றி யாரும் பேசமாட்டார்கள், இதுவும் ஓர் விந்தை. அவரை இனதுரோகி என யாராவது சொல்லி கேள்விபட்டிருக்கின்றீர்களா? கிடையவே கிடையாது.

இதுதான் அரசியல்.

ஆக இதனை தாண்டி யோசியுங்கள் திலீபனை சாக விட்டது யார் என தெரியும், யாரின் தலமைக்கு பணிந்து அவன் செத்தான் என்பதும் தெரியும், யாருக்கு லாபம் என்பதும் புரியும்

காஷ்மீரிய எல்லையில் செத்த எம் தேசவீரர்களை மறந்துவிட்டு, இப்படி எவன் சொல்லி எங்கோ அந்நிய நாட்டில் செத்தவனுக்காக இங்கு எவனாவது கொடிபிடித்தால் அவர்கள் எப்படிபட்டவர்கள் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்

திலீபனுக்காக இங்கு அழுபவர்கள் அப்பட்டமான தேசவிரோதிகள், ராஜிவோடு செத்த 16 பேரை மறந்துவிட்டு அனுதினமும் இங்கு தீவிரவாதத்திற்கு எதிராக சாவோரை மறந்துவிட்டு கடல்கடந்த தற்கொலைபடை தீவிரவாதியான திலீபனுக்காக அழுபவர்கள் இந்நாட்டின் சாபக்கேடுகள்

நன்றி: Stanley Rajan
Read More

Tuesday, January 2, 2018

Keerthivasan

ரஜினி அரசியல் பிரவேசம்

https://avishjoseph.deviantart.com/art/Super-star-Rajinikanth-564963049
populist movement:

3ஆவது மெட்ராஸ் மாநில தேர்தல்(இன்றைய தமிழ்நாடு) 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக தேர்தலில் 27% வோட்டுகள் , அதற்கு முன் 1957ல் 14%வோட்டுகளை பெற்றது. இந்த இடைபட்ட காலத்தில் வளர்ச்சி அடைந்து திமுக 1967ல் 52.59% வோட்டுகளை பெற்று ஆட்சிக்கு வருகிறது. காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வருகிறது.

இந்த காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
திமுக கொள்கை , அதன் நேர்மை நியாயமான அரசியல் முன்நெடுப்பு , சமூக சமத்துவ கொள்கை , பொதுவுடைமை சிந்தனை என்று எந்த மண்ணாங்கட்டியும் கிடையாது. பின்ன காரணம் என்ன???

எம்ஜிஆர் என்ற பிரபலம்... அவர் மக்கள் மீது ஏற்படுத்திய ஈர்ப்பு... 1962 முதல் 1967 உள்ளாக அவருக்கு ஆயிரத்தில் ஒருவன் , எங்கள் வீட்டுபிள்ளை , விவசாயி , நான் ஆணையிட்டால் என்று உச்சகட்ட பிரபலம் ஆகிவிட்டார். அது போதாது என்று எம்ஜிஆர் சுடபட்டார்.. இந்த அதிர்வும் , அனுதாபமும் அவர் ஆதரவுடன் தான் திமுக 52.59% வோட்டுகளை பெற்று வெற்றிபெற காரணம். மற்றபடி கட்சி கொள்கை புண்ணாக்குக்கு எல்லாம் எவரம் வோட்டு போட்டதாக வரலாற்றை எங்கும் தேடி பார்த்தவரை எனக்கு தெரியவில்லை.

அதற்கு முந்தய தேர்தல்களில் திமுக 15%சராசரியாக வாங்க காரணம் என்ன? உணர்வை தூண்டும் கவர்ச்சி பேச்சுக்கள். மேடை மேடைக்கு எதுகை மோனை பேசியே திரிந்தவர்கள் இவர்கள். அந்த கவர்ச்சி பேச்சுதான் இன்னொரு காரணம் என்று வைத்து கொள்ளலாம். அடுத்து 1971ல் கருணாநிதி கொடுத்த கேவலமான ஆட்சி எம்ஜிஆர் பிரிவு - 1977 முதல் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடிக்க 1984 வரை அதிமுக வெற்றி நீள்கிறது. அதன் பின் அதிமுக திமுக மாறி மாறி ஆட்சியை பிடிக்கின்றன.

இதை ஏன் கூறுகிறேன் என்றால் - மக்களை சென்று சேர்வதில் கொள்கை எல்லாம் தாண்டி - ஒரு populist movement அதாவது சாதாரண வெகுஜனங்களை சென்று சேரும் அளவுக்கு ஒரு அரசியல் கட்சி தான் தமிழகத்தில் தேர்தல் மாற்றத்தை தரமுடியும். (இது தான் எதார்த்தம்... அப்துல்கலாம் அரசியலுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது என்பது இதனால் தான் கூறுவர்.)

எனவே அந்த வகையில் ரஜினி என்ற பிம்பம் தமிழக அரசியலை சந்திக்க ஒரு நல்ல தேர்வு.
-------------------------------------------------
சரி அவருக்கு என்ன தகுதி இருக்கு?????

01)தேர்தல் அரசியல்:

12 மாநகராட்சி, 148 நகராட்சி, 561 பேரூராட்சிகள்,12618 ஊராட்சிகள் , 385 ஊராட்சி ஒன்றியங்கள் இந்த கட்டமைப்புக்கு நிர்வாகிகளை போடும் திறன் அதிமுக , திமுக இரண்டுகட்சிகள் தவிர்த்து உள்ள ஒரே நபர் இன்றைய தேதியில் ரஜினி மட்டுமே. ஏன் என்றால் அவருக்கு இருக்கும் ரஜினி ரசிகர் பட்டாளம் என்று பார்த்தால் விஜயகாந்தை விட பல மடங்கு அதிகம். 30 வயது முதல் 55வயதுக்குள் இருக்கும் ஒரு பெரும் கூட்டம் ரஜினியை விரும்புகிறது.விஷயம் ரஜினி ரசிகர்கள் அவர் மீது காட்டும் தீவிரமான பாசம் , அந்த ஈர்ப்பு நம்பமுடியாத அளவு அதிகம். அதை அவர் சினிமா மூலம் சம்பாரித்தார் என்று கூறுவது, ஒரு நடிகன் தானே என்று குறைகூற ஆயிரம் பேர் வரலாம், கூறலாம் - ஆனால் எது எப்படியோ அவரிடம் பெரும் பலம் இருக்கிறது என்பது அசைக்க முடியாத உண்மை.

முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் - நானும் நீங்களும் கூட கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் அமைப்பு ரீதியாக பலம் வேண்டும். அதாவது

தேர்தலுக்கு சுமார் 64000பூத்கள் ஆட்கள் போட்டு வேலை செய்யும் ஒரு நிர்வாக திறன் - அமைப்பு ரீதியான பலம் வேண்டும், அப்போ தான் மாநில தேர்தலை எதிர்கொள்ள முடியும். மாநில தேசிய கட்சிகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம், விஜயகாந்த் தேமுதிக 2005ல் வந்தது. ஏறக்குறைய 10% வாக்குகளை பெறக்கூடிய அளவுக்கு அவர் அரசியலில் நல்ல வளர்சி அடைந்தார். (வைகோ, திருமா, கம்யூனிஸ்ட் கூட்டணி வச்சு நாசம் ஆகும் வரை)

விஜயகாந்த் எப்படி காணாமல் போனார்?
அந்த மனிதரை எந்நேரமும் செய்தியாளர்கள் விட்டு கேள்வி கேட்பதாக கூறி திக, திமுக , அதிமுக ஆதரவு பத்திரிக்கையாளர்கள் வம்பிழுத்து - அவமானம் செய்து - அவரை பற்றி தவறாக கருத்துகள் பரப்பி - காமடிகள் உருவாக்கி - ஒரு கடத்தில் அவரை முழுநேர நகைச்சுவை நடிகர் போல அரசியலில் மாற்றினர்- செய்தது இதே திராவிட கூட்டங்கள் தான்.

தேசியகட்சிகள் நிலை???
தேசிய கட்சிகள் வளரவிடகூடாது என்றால் இங்கே மிக எளிய பார்முலா என்னவென்றால் - கம்யூனிஸ்ட் தீவிரவாத குழுக்கள் நக்சல் , மாவோஸ்ட் ஆதரவாளர்கள் பேசவிடுவது - நாட்டில் உள்ள பிரிவினைவாதிகளை விட்டு தமிழ் தனி தேசியம் பேச சொல்லி இடம் கொடுப்பது.. அத்துடன் அனைத்து பிரச்சனைகுக்ம் மத்திய அரசு தான் காரணம் - நாங்கள் என்ன செய்வோம் என்று நல்லவன் வேடம் போடுவது. {ஆனால் கூட்டணி வச்சுபாங்க.. மத்திய மந்திரியாக எல்லாம் இருந்துபாங்க.)எனவே இது மறைமுகமாக தேசியகட்சிகள் வளர்ச்சியும் சாத்தியம் இல்லாமல் பார்த்து கொள்ளும் வேலையை திக என்ற பெரியார் கூட்டம் மூலம் செய்கிறார்கள்.

ஆகா திமுக , அதிமுக இரண்டையும் எதிர்க்கும் அமைப்பு ரீதியாக தேர்தலை சந்திக்கும் பலம் ரஜினியிடம் உண்டு.

02)கொள்கை அடிப்படையில்?:

ஆன்மீக அரசியல் என்ற ஒற்றை வரி கொள்கையை நாம் எப்படி புரிந்து கொள்ளவேண்டியுள்ளது ?

விசயத்தை நன்கு புரிந்து கொள்ளுங்கள்: "ஆம்ப்ரகாம் வழி தோன்றல்களால் ஜெருசலம் , பாலஸ்தீன பகுதிகளில் உருவான மதங்களான யுதம் , கிறிஸ்தவம் , இஸ்லாம் தான் Theocracy என்ற மதம் கொண்டு ஆட்சி முறையை வகுக்கும் பழக்கம் கொண்டவை. கிருஸ்தவர்கள் தனி மதமாக உருவாக காரணம் யூதர்களிடம் இருந்த பெரிய வேறுபாடு எல்லாம் இல்லை. ஆட்சி அதிகார முறையால் மதங்களாக அங்கீகரிக்கபட்டது தான்". அதாவது மதம் என்ற விஷயம் உருவானதே மேற்கத்திய நாடுகளில் தான் ஒழிய இந்தியாவில் அல்ல.

இந்தியாவை பொறுத்தவரை அனைத்தும் ஒன்றிணைத்து ஆன்மவியல் பரப்பும் வேலை மட்டுமே உண்டு. புத்தம் , மாகவீர் என்ற இந்துமத கிளைகள் எல்லாமே ஆன்மிகம் பரப்பும் வேலையை மட்டுமே செய்தார்கள் தவிர பெரிய அளவில் கடவுள்கள் வழிபாட்டால் பிரியவில்லை, பெரும் சண்டைகள் போட்டுகொண்டவர்கள் இல்லை. அதாவது கிருஸ்தவர்கள் , இஸ்லாமியர் , யூதர்களிடம் இருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் ஒரு மத வெறுப்பு இங்கே உருவான சிவன் , பெருமாள் , முருகன் , புத்தம் , மகாவீர் , சீக்கியர்கள் என்று இவரகளுக்குள் இருக்காது. காரணம் இங்கே ஆன்மிகம் பரப்ப மட்டுமே அனுமதி உண்டு. மதத்தை பரப்ப பெரியவர்கள் சொல்லி தரவில்லை.

இன்றும் உலகம் முழுவதும் இந்த இந்தியாவில் தோன்றிய எந்த மதமும்- தங்கள் மதம் பரப்பும் கேடுகெட்ட வேலையை செய்யாது. ஆனால் ஆப்ரகாம் வழி தோன்றல்களால் உருவான மாதங்கள் கடமையாகவே மதம் மாற்றுவர். அதனால் தான் ரஜினி ஆன்மிகம் என்கிறார் - மதம் என்னும் சொல்லை தவிர்க்கிறார்.

எனவே ஆன்மிகம் என்றால் என்ன என்று நமக்கு தெளிவு கிடைக்கிறது. யாரும் எந்த மதமும் வழிபடலாம் - ஆனால் பரப்புவது இந்த நாட்டின் குணம் அல்ல. ஆக ரஜினி இந்த விசயத்தில் மிக தெளிவாக இருக்கிறார். (ரஜினி குழப்பவில்லை. சிலர் அவர் குழப்புவதாக உருவகம் செய்ய முயற்சிக்கிறார்கள். ரஜினி மிக தெளிவாக தான் இதனை கூறுகிறார். இந்துத்துவா என்றால் அர்த்தமும் இது தான்.}

ஆன்மீக அரசியலுக்கு அவசியம் என்ன??

பெரியார் பிறந்த பூமி என்ற எல்லா கேவலமும் அசிங்கமும் அருவருப்பும் நியாயம் பேசி திரியும் கூட்டம் ஒன்று இங்கே உருவாக்கி கடவுள் நம்பிக்கையை அருவருப்பாக திட்டி திரிவது மட்டும் அல்ல - நம்ம எல்லாரும் படிச்சத்துக்கு காரணம் முதல் அப்துல் கலாம் அணுஆயுத சாதனைகளுக்கு கூட காரணம் - ஈவேரா பெரியார் தான் என்று ஒரு மாய உலகத்தை உருவாக்கி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் திரியும் கூட்டம் ஒன்று இங்கே இருக்கு. அது தான் திராவிட சிந்தனை.

திராவிட சிந்தனை எளிமையாக கூறினால் : தமிழ் தேசிய பிரிவினைவாதம் , இல்லாத திராவிட உணர்வை தூண்டிவிடுவது , கடவுள் நம்பிக்கை இல்லை என்ற பெயரில் இந்து கடவுகளை மட்டும் விமர்சிப்பது , மூடநம்பிக்கை ஒழிக்கிறேன் பேர்வழி என்று இந்து மக்கள் கொண்ட நம்பிக்கையை மட்டும் பேசி திரிவதாக இந்த மாநிலத்தை குழப்பிய ஒரு கேவலமான திராவிட சிந்தனை முடிவுக்கு வர எது சரி????- ஆன்மீக அரசியலை மேற்கொள்வேன் என்று ரஜினி கூறியது அவருடைய மிக மிக மிக பெரிய மாற்று அரசியலுக்கான சிந்தனையாக நான் பாராட்டுகிறேன். (திராவிட என்ற வார்த்தைக்கு அர்த்தம் வேறு - திக உருவாகிய திராவிட சித்தாந்தம் கொண்ட அர்த்தம் வேறு}

ஒன்றை நன்கு அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்:

இதுதான் "திராவிடம், திராவிடன்" என்று நிருபீக்க இன்றுவரை அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் சமர்பிக்காத50வருடம் மேலாக ஆட்சி செய்யும் இந்த திராவிட ஆட்சியர் கூட்டம் இன்றும் அதை ஒரு நம்பிக்கை சார்ந்த சிந்தனையாகவே விதைப்பது வெக்கம் கெட்ட அரசியல் தந்திரம். எனவே இந்த மாய திராவிட சிந்தனை ஒழிக்க இந்த கூட்டத்தை அடியோடு வீழ்த்தும் ஆன்மீக அரசியல் என்ற வார்த்தை 100% வரவேற்கதக்கதுவே. இந்த வகையிலும் ரஜினி ஒரு நல்ல மாற்றுதான்.

03)நேர்மை :

இன்றைய தேதியில் ரஜினி அளவுக்கு பிரபலமான நபர் தெனிந்தியாவில் இன்னொருவர் கிடையாது. ரஜினிக்கு இருக்கும் விளம்பர மார்க்கெட் மதிப்பு : 100கோடிக்கும் மேல் நிச்சயம் இருக்கும். ஆனால் அவர் விளம்பரங்களில் நடிப்பது இல்லை. ரஜினியால் எந்த பிராண்டையும் இங்கே விளம்பரபடுத்த முடியும். ஆனால் அவர் அவற்றை ஒரு கொள்கை ரீதியாக தவிர்ப்பது நிச்சியம் காசுக்காக வாழ்வில் வளைந்து கொள்ளகூடிய மனிதர் இல்லை என்று நம்மால் இந்த சின்ன விஷயம் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

எவன் என்ன அசிங்கமா வேண்டுமானாலும் பேசிக்கோ , திட்டிகோ , ஜெயிலுக்கு போயிக்கோ , மக்கள் என்ன வேண்டுமானாலும் அவமானமா பேசுங்க, ஆனால் நாங்க அப்படமாக திருடி தான் வாழ்கை நடத்துவோம் என்று திரியம் இரண்டு திராவிட கட்சிகள் அதன் இரு பெரும் குடும்பங்கள் சசிகலா , கருணாநிதி இரண்டுக்கும் மாற்றாக - காசுக்கு ஆசைபடாத நபராக ரஜினி அரசியல் பிரவேசமும் நிச்சயம் மிக பெரிய மாற்று தான்... சந்தேகமுமே இல்லை.

இதனால் ரஜினியானால் ஒரு நேர்மையான அரசியலை கொடுக்க முடியும் என்று நம்புகிறேன். அதாவது குறைந்தபட்ச நேர்மையான அரசியலை நான் கூறுகிறேன். (முற்றும் துறந்த ஒரு புத்தனை நான் அரசியலில் தேடும் முட்டாள் அல்ல.)

04)நிர்வாக திறன்:

ஒருவர் சமூகத்தில் ஒரு உயரம் அடைகிறார் என்றால் அது சும்மா ஒரு இரவில் , ஒரு விபத்து போல நடப்பது இல்லை. அதற்காக அவரகள் பெரும் உழைப்பை கொடுக்கிறார்கள் - அத்துடன் நிர்வாக திறமையுடன் இருக்கவேண்டும். அப்போது தான் சமூகத்தின் உயரத்தை அடைய முடியும். அந்த வகையில் கருணாநிதி தொட்டு இன்று ஜோசப் விஜய் வரை அனைவரையும் நான் மதிக்கிறேன். நிர்வாக திறன் எல்லாம் கட்டாயம் ரஜினிக்கு இருக்கும். ஆனால்

கருணாநிதி போல என்ன தந்திரம் வேண்டுமானாலும் செய்வோம் என்ற குறுக்கு புத்தி இல்லாமல் - மனசாட்சிக்கு நேர்மையாக அந்த உயரத்தை அடைவது அசாதாரணமான காரியம். எனவே உயரம் வந்தால் போதாது - அதில் ஒரு நேர்மையான தகுதி இருக்கவேண்டும். அந்த விதத்திலும் ரஜினி யாரையும் அடித்து பிழைத்தவர் கிடையாது. யார் சொத்தையும் பிடிங்கி பிழைத்தவர் கிடையாது... அதாவது கருணாநிதி , சசிகலா குடும்பம் போல் கிடையாது.

எனவே நிர்வாக திறன் நிச்சயம் உண்டு. ஆனால் அது ஆட்சியில் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நாம் ஒரு வாய்ப்பு கொடுத்துவிட்டு தான் பேச வேண்டும். அது தான் நியாயமும் கூட.
-------------------------------------------
இறுதியாக :

மேற்கூறிய இந்த காரணங்களால் தான் நான் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஒரு இந்தியனாக மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இனி என்ன கூத்து எல்லாம் நடக்கும்?

இனி ரஜினி பெயரை கெடுக்க திக என்ற தனது தாய் அமைப்பின் உதவியை நாடுவர் திமுக உடன்பிறப்புகள். திக - பெரியார் கூட்டம் இனி ரஜினியை ஏலனம் செய்ய ஆரம்பிக்கும். அவரை மறைமுகமாக அவமானம் செய்யும் , வித விதமாக மிமீஸ் முதல் பொய் செய்திகள், புரளிகள் அனைத்தையும் பரப்பிவிட திட்டம் போடும். அதை சாமர்த்தியமாக செய்யும் நரி தந்திரமும் திக கூட்டத்திடம் உண்டு. (அது இல்லாமலா தமிழை, தமிழரை அவமானமாக பேசிய ஈவேரா - பொய்யான வரலாற்றை உருவாக்கி வைக்கம் போராட்டம் வீரர் என்று கதையை கிளப்பி எல்லாமே பெரியார் தான் என்று வெக்கம் இல்லாமல் சொல்லி திரிகிறது. எனவே அருவருப்பான இந்த கூட்டம் என்ன வேண்டுமானாலும் செய்யும். முதல் எதிப்பு இங்கே தான் உருவாகும்.)

கம்யூனிஸ்ட் சொல்லவே வேண்டாம் ஆன்மீகம் எல்லாம் விசயமே இல்லை - சிறந்த தேசியவாதியாக ரஜினி இந்தியாவை நேசித்தால் அவரை எதிர்ப்பார் கம்யூனிஸ்ட். அவ்வளவு தான் கம்யூனிஸ்ட் கொள்கை. இன்னொரு பக்கம் நக்சல் மாவோஸ்ட் ஆதரவாளர்களாக திரியும் - இந்த ஒரு டஜன் புதிய போராளிகள் திருமுருகன் முதல் பியூஷ் மனுஷ் வரை அனைவருமே சத்தம் போடா ஆரம்பிப்பர். அவர்களுக்கு இந்தியா சிதற வேண்டும். ஆனால் இப்படி நாட்டுபற்றுள்ள ரஜினியை நிச்சயம் அவமானம் செய்ய கிளம்புவர். சீனாவின் அடிமைக்கு வேறு என்ன இங்கே வேலை. எனவே கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நிச்சயம் உண்டு.

அடுத்து மதம் மாற்றும் இயக்கங்கள் சார்ந்த கூடங்குளம் உதயகுமார் , செபாச்டீன் என்ற சீமான் போன்றவர்கள் இன்னும் வேகமாக ரஜினிக்கு அதிராக பிரச்சனை செய்வர். (கூடங்குளம் சுற்றி உள்ள சர்ச்சுகள் இந்நேரம் தீர்மானம் நிறைவேற்றி இருப்பர் - ரஜினியை எதிர்க்க வேண்டும் என்று. மதம் வெறிபிடித்தவர்கள் - மதசார்பின்மையின் பின்னால் ஒளிந்த கொண்டு ரஜினியை விமர்சனம் செய்ய ஆரம்பிப்பர். ஏன் என்றால் அவர் ஒரு இந்து என்பது நிச்சயம் பிரச்சனை தான் அவர்களுக்கு.)

இவை அனைத்தையும் விட நம்ம செய்தி ஊடகங்கள் சத்தம் இனி நாளுக்கு நாள் அதிகம் ஆகும்.

ரஜினி ரசிகர்கள் ஒன்றை நன்கு புரிந்து கொள்ளுங்கள்:

செய்தி ஊடகம் நடத்தும் ஒருத்தன் கூட யோக்கியவான் கிடையாது இந்த தமிழ் நாட்டில்... அது கல்வி கொள்ளையர்கள் நடத்தும் புதிய தலைமுறை செய்தி சேனல் முதல் மணல் மாபியா நடத்தும் நியுஸ்7 செய்தி நிறுவனங்கள் வரை அனைவருமே கேடு கெட்ட அயோக்கிய கும்பல்.

ஆக இங்கே தமிழக அரசியலில் எவனுக்கும் ரஜினியை குறை சொல்ல தகுதி இல்லை- எனவே எவரையும் எதிர்க்கும் துணிவுடன் - ரஜினி ரசிகர்கள் அரசியல் களத்தில் பணியை செய்தால் நிச்சயம் ரஜினி தமிழக முதல்வராக அமருவார்.

மதிப்பிற்குரிய ரஜினி - ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் என் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

-மாரிதாஸ்
Read More
Keerthivasan

மகாபாரதம் பேசுகிறது - என் பார்வை - 02


அறிமுகம்



மஹாபாரதம் போன்ற புராணங்களில் சற்றும் நம்பிக்கையே இல்லாதவர்களையும் நம்ப வைத்தே தீர்வது என்ற வீண் முயற்சி அல்ல இந்த அறிமுகம். நம்பிக்கை இருந்தாலும் கூட நம்பிக்கையற்றவர்களின் வாதங்களினால் அவ்வப்போது குழப்பம் அடைவோர்கள், சற்று மனம் தெளிந்து, நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்ற எண்ணத்தை பெற, இந்த அறிமுகம் உதவும் என்று கருதுகிறேன்.

18 பிரிவுகள்;
அவற்றில் 98 பகுதிகள்;
அவற்றில் 2,382 அத்தியாங்கள்;
அவற்றில் 96,635 செய்யுட்கள் – ஸ்லோகங்கள்.

இதுதான் நமது வசமிருக்கும் வியாஸ பாரதம். வியாசர் அருளிய 60 லட்சம் சுலோகங்களில், பூவுலகில் இவ்வளவுதான் இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது. இப்போது இருப்பதையே புஸ்தகமாக, முழுமையாக வெளியிட்டால், கிட்டதட்ட பத்தாயிரம்  பக்கங்கள் வரலாம்.

மகாபாரதத்தை முழுவதுமாகக் கண்ட வியாஸர் அதை எழுதி வைக்க விரும்பினார். பிரம்மா காட்சியளித்தார், “வியாஸ மகரிஷியே! அறம், பொருள், இன்பம், வீடு – என்ற நான்கு விஷயங்கள் பற்றியும் விரிவாகச் சொல்லும் பாரதம் என்கிற கதிரவனால், மனிதர்கள் சிக்கியிருக்கும் இருட்டாகிய அறியாமையைப் போக்கி விட்டீர். இந்தப் புராணத்தின் மூலமாக மனித குளத்தின் அறிவு மலர்ந்து விரிவடையும்” என்று கூறி, பாரதத்தை எழுத்தில் வடிக்க, விநாயகரை வேண்டிக் கொள்ளச் சொன்னார். அதன் பிறகு வியாசர் அவ்வாறே செய்ய, அவரது வேண்டுகோளை விநாயகர் ஏற்றார். வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதிக் கொண்டே வந்தார். இப்படி மஹாபாரதம் எழுத்து வடிவில் வந்தது.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன் வியாசர்தான் மகாபாரதத்தை இயற்றினார் என்பதற்கு என்ன ஆதாரம்? அவர் சொன்னாராம் விநாயகர் எழுதினாராம்! வினாயகரே உண்டோ? என்றெல்லாம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் சரி, மகாபாரதம் போன்ற புராணங்களில் உள்ள பல விஷயங்களுக்கும் சரி ஆதாரங்களை யாரும் காட்டப்போவதில்லை. ஆதாரம் இல்லை. ‘அப்படியே தான் நடந்தது’ என்று நம்பிக்கை உடையவர்கள் ஏற்கலாம்; அப்படி நடக்கவே இல்லை’ என்று நம்பிக்கையில்லாதவர்கள் நிராகரிக்கலாம். அப்படியே நடந்தது என்பதற்கு எப்படி ஆதாரம் காட்ட முடியாதோ, அதே போல் அப்படி நடக்கவே இல்லை என்பதற்கும் ஆதாரம் காட்ட முடியாது.

இந்த இரண்டு நிலைகளுக்கும் நடுவில் ஒரு நிலை இருக்கிறது. அதற்கு அடிப்படையாவது, அனுமானம். அப்படியேதான் நடந்தது என்று சொல்வது – நம்பிக்கை. அப்படி நடக்கவே இல்லை என்று சொல்வது – அவ நம்பிக்கை. பெருமளவு அப்படி நடந்திருக்க வாய்ப்புகள் உண்டா, கிடையாதா என்பதை யோசித்து ஒரு முடிவுக்கு வருவது – அனுமானம். மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள், அதில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகள், அதில் நடமாடுகிற மனிதர்கள், அவர்களை பற்றிச் சொல்லப்படுகிற குணாதிசயங்கள், அதிலுள்ள நீதிகள், விவாதங்கள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். சரித்திரம் என்பது எப்படி எழுதப்படுகிறது, அதை நாம் எப்படி ஏற்கிறோம் என்பதையும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலக்கியகர்த்தாக்கள், தாங்கள் எடுத்துக் கொண்ட விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்பதையும் சற்று யோசிக்க வேண்டும். இப்படிப் பல கோணங்களிலிருந்து சிந்தித்துப் பார்த்தால் மஹாபாரத நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நடந்திருக்கக் கூடியவையே என்ற அபிப்பிராயம் நமக்கு ஏற்படுகிறது.

எனது இந்த அபிப்பிராயத்தை விளக்குவதற்காக, ஒரு கற்பனை உரையாடலை இங்கே தருகிறேன். அவநம்பிக்கையாளர்க்கும், அனுமானிப்பவருக்கும் இடையில் ஒரு விவாதம் நடக்கிறது என்று கற்பனை செய்கிறேன்.

அவநம்பிக்கையாளர்: எப்போதோ, யாரோ எழுதி வைத்தார்கள் என்று சொல்லப்படுகிற இவர்ரைஎல்லாம் நம்புவது எப்படி?

அனுமானிப்பவர்: பழங்கால சரித்திரம் என்று இன்றைய சரித்திரப் பாடங்களிலும், புஸ்தகங்களிலும் காணப்படுவதை நாம எப்படி நம்புகிறோம்?

அவநம்பிக்கையாளர்: இன்றைய சரித்திரப் புஸ்தகங்களில் காணப்படுவது ஆராய்ச்சியாளர்கள் கஷ்டப்பட்டு சேகரித்த உண்மையே. அவை ஆராய்ச்சியின் பலன் அதனால் நம்புகிறோம்.

அனுமானிப்பவர்: ஒரு சரித்திர ஆசிரியர் என்ன ஆராய்ச்சிகளை செய்தார் என்பது நமக்கு தெரியாது. ஆதாரம் என்று அவர் கருதியவை உண்மையிலேயே ஏற்கக் கூடிய ஆதாரங்கள்தானா என்பதும் நமக்குத் தெரியாது. சரி, ஒரு பேச்சுக்காக நாம் இப்போது படிக்கும் சரித்திரம் எல்லாம் உண்மையே என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அவற்றுக்குள் ஏன் முரண்பாடுகள்?

ஆரியர் என்று ஒரு இனம் இந்தியாவில் நுழைந்தது என்று ஒரு சில சரித்திர ஆசிரியர்கள் சொல்ல அப்படி நடக்கவில்லை என்று வேறு சிலர் அடித்துச் கொள்கிறார்கள். இருதரப்பாருமே, புத்த பொருள் ஆராச்சியில் கிடைத்த விஷயங்களைத் தாங்கள் வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவரவர்கள் மனநிலைக்கு ஏற்றார் போல நாமும் இதில் ஒவ்வொரு தரப்பு வாதத்தை ஏற்கிறோம். இதில் எது உண்மை என்று உறுதியிட்டு சொல்லக் கூடிய அளவுக்கு நமக்கு என்ன ஆராய்ச்சித் தகுதி இருக்கிறது? நம்புகிறோம் அவ்வளவுதான்.

மூலம்: சோவின் மகாபாரதம் பேசுகிறது.

Read More
Keerthivasan

மகாபாரதம் பேசுகிறது - என் பார்வை - 01


தொடங்கும் முன்

சிறு வயது முதல் சோவின் எழுத்துக்களால் கவர்ந்து இழுக்கப்பட்ட பலரில் நானும் ஒருவன். அவர் கைவண்ணத்தில் உருவான மகாபாரதம் பேசுகிறது என்ற நூலை சில வருடங்கள் முன்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு எளிமையாக சொல்ல முடியுமா என்று நினைத்து நான் அதிசயத்த ஒரு புத்தகம் அது.

புத்தகத்தின் ஆரம்பத்திலேயே வாத பிரதிவாதங்கள் எப்படி எல்லாம் இருக்குமோ அதற்கு எல்லாம் பதில் கொடுத்துவிட்டு ஆரம்பித்திருப்பது இந்த புத்தகத்தின் நடுநிலைத்தன்மையை எடுத்துரைக்கும்.

மொத்த புத்தகத்தையும் உங்களோடு பகிர முடியாது என்றாலும் நான் படித்து ரசித்த பலவற்றை இன்று முதல் மகாபாரதம் பேசுகிறது என்ற தலைப்பிலேயே பகிர நினைக்கிறேன்.

ஒருமுறை படித்து அதை நியாபகப்படுத்தி எழுதும் திறனெல்லாம் எனக்கில்லை என்பதால் புத்தகத்தை வாங்கி ஒரு REFERENCEஆகா வைத்து என் எண்ணங்களையும் அதில் சேர்த்து பகிர நினைக்கிறேன்.

வியாச பாரதம் இந்த நூலுக்கு அடிப்படை அது போல என் இந்த தொடர் பதிவுக்கு மகாபாரதம் பேசுகிறது அடிப்படை அவ்வளவே.

இனி கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்போம். இந்த புத்தகத்தின் சிறப்பு அம்சமான சோவின் அறிமுக உரைநடையை அப்படியே தருகிறேன். அவரை போல சுவாரஸ்யமாக என்னால் கொடுக்க முடியுமா என தெரியாத காரணத்தால் அதில் பெரிய மாற்றம் இல்லாமல் (சில இடங்களில் மட்டும்) உங்களோடு பகிர்கிறேன்.

வியாசரையும் வணங்கி இந்த பதிவை தொடங்குகிறேன். இதை விடாமல் எழுதும் சூழலை அந்த வியாசரும் அவருக்கு உதவிய விநாயக பெருமானும் எனக்கு அருள வேண்டும்.

அன்புடன் கீர்த்தி...
Read More

Thursday, December 28, 2017

Keerthivasan

2G ஊழல் வழக்கு - அனைவரும் விடுதலை.

2G ஊழல் வழக்கு - அனைவரும் விடுதலை.

எந்த ஒரு தீர்ப்பு நீதிமன்றம் விசாரணை செய்து வெளியிட்டாலும் அதனை மதிக்கும் பக்குவத்திற்கு மக்கள் வரவேண்டும். உயர் நீதிமன்றம் , ராணுவம் , பசுமை தீர்ப்பாயம் , பாராளுமன்றம் , தேர்தல் ஆணையம் என்று அரசின் உயர்வான அனைத்து அமைப்புகளையும் நாம் மதித்து நடந்து கொள்வது மிக அவசியமான ஒன்று.

அந்த வகையில் நான் தீர்ப்பை தற்காலிகமாக ஏற்றுகொள்கிறேன். ஆனால் தீர்ப்பை மேல்முறையீடு செய்து குற்றம் நிருபிக்க முயற்சி எடுக்கப்படவேண்டும்.

மற்றபடி இந்த தீர்ப்பை திமுக, காங்கிரஸ் தங்கள் வெற்றியாக எடுத்து கொள்ளலாம். காங்கிரஸ் - திமுக ஆட்சி இருக்கும் போது கடைசி 5வருட ஆட்சியில் நாட்டு நலத்திட்ட விசயத்திலா வேலை பார்த்தார்கள்???? செய்த ஊழல்களுக்கு இருந்த ஆதாரங்களை தேடி அழிப்பது தான் முழு நேரம் வேலை பார்த்தார்கள். எனவே அந்த வகையில் தீர்ப்பை தாராளமாக தங்கள் வெற்றியாக திமுக - காங்கிரஸ் கொண்டாடலாம்.

ஆனால் நாடும் , நாட்டு மக்களும் இதை நம்பபோவது இல்லை. தகுந்த ஆதாரங்கள் இல்லை , காங்கிரஸ் ஆட்சியில் ஆதாரங்களை அழித்துவிட்டு சென்றுள்ள வகையில் தான் கனிமொழி , ராசா அவர் கூட்டம் தப்பியுள்ளது என்பது தான் என்னை பொறுத்தவரை உண்மை. பிஜேபி இதில் மன்னிப்பு கேட்க அவசியமே இல்லை.. ஏன் என்றால் பிஜேபி இந்த ஊழல்விவகரம் , முறைக்கேடு விஷயத்தை கிளப்பியது தவறு என்றால் எதற்கு 2012 ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு உரிமங்களை உச்ச நீதிமன்றம் ஏன் ரத்து செய்ய வேண்டும்????

ரத்து செய்துவிட்டு 2014ல் மீண்டும் ஏலம் விட்ட போது அரசுக்கு Rs. 61,162 கோடி லாபம் எப்படி கிடைத்தது????? அப்போ தவறு நடந்தது அப்பட்டமான ஒன்று.

எனவே குஸ்பு முதல் ராகுல் வரை இதில் மகிழ்ச்சி கொள்ள என்ன இருக்கு??? வெக்கம் கேட்ட கூட்டம்.


எனவே

"ஊழலே நடக்கவில்லை என்று கூறவில்லை; தகுந்த ஆதாரம் இல்லை என்று தான் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள்".

பிஜேபி இந்த விவகாரத்தை எழுப்பியது - நீதிமன்றம் சென்றது அனைத்துமே சரி. {இன்னொரு விஷயம் 2014ல் ஏப்ரல் மாதம் இந்த வழக்குக்கு குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தார்கள். அந்த மாதம் தான் நாடாளுமன்றம் தேர்தல் வந்தது. அதாவது திமுக-காங்கிரஸ் சேர்ந்து ஆதாரம் அழித்து அந்த வழக்கை இல்லாமல் செய்தது தான் அவர்கள் ஆட்சியில் இருந்து செய்த கடைசியாக பணி. மோடி ஆட்சிக்கு வருவது அதன் பின் தான். இப்படி வழக்கை தந்திரமாக நாசம் செய்துவிட்டு போன காங்கிரஸ் - திமுக இன்று வாய்மை , நேர்மை என்று பேசுவது கொஞ்சம் கூட கூச்சம் இல்லாத கூட்டம்.}

{இன்னொரு பக்கம் கம்யூனிஸ்ட் நக்சல் அமைப்பினர் இந்தியாவை விமர்சிக்க கிடைத்துவிட்டது இந்த தீர்ப்பு. இனி வலைத்தளம் முழுவதும் இந்தியாவை கீழ்த்தரமாக தாழ்த்தி விமர்சித்து மிமீஸ் பரப்பும் வேலையை கொண்டாட்டமாக ஆரம்பித்துவிடுவார். அப்படியே மோடியையும் வழக்கு தீர்ப்பில் சேர்த்து விமர்சிக்கவும். நாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் அவரை கோர்த்து விட்டு பேசியே வந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லை என்றால் தூக்கம் வராது} . எது எப்படியோ....

"விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் தி.மு.க.வை விஞ்ச யாரும் இல்லை" என்று சர்க்காரியா கமிஷன் 1976களில் சொன்ன கூற்று 41வருடங்கள் கழித்து மீண்டும் நிரூபிக்கபட்டுள்ளது.

-மாரிதாஸ்
Read More
Keerthivasan

சேலம் உருக்காலை salem steel plant (ssp) தனியார் மயமாக்கல்

சேலம் உருக்காலை salem steel plant (ssp) தனியார் மயமாக்கும் நடவடிக்கையை பிஜேபி, மோடி அரசு ஏன் எடுக்கவேண்டும்? பிஜேபி இப்படி தனியார் மயம் என்று செயல்படுவது சரியா? {கேள்வி: அருண்}


மாணவர்கள் பிளிஸ் கொஞ்சம் இந்திய பொருளாதாரத்தை புரிந்து கொள்ளுங்கள். அது மிக அவசியமான ஒன்று உங்களுக்கு என்று கூறி இந்த பதிவை தொடர்கிறேன்.

இந்திய பொருளாதரம் எப்படி வடிவம் பெற்றது என்று முதலில் புரிந்து கொள்ளுங்கள் , பின்னர் அதன் வளர்சி ஏன் மற்ற நாடுகளை விட முக்கியமாக சீனா போன்றவை விட பின் தயங்கியது என்பதற்கு காரணமும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். அது முதல் அவசியம், அப்போது தான் இந்த விதம் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் நாம் புரிந்துகொள்வது எளிது.

நேரு சுதந்திர இந்தியாவில் எப்படி உற்பத்தி துறையை, சேவை துறையை வடிவமைத்தார் என்றால் - நாட்டில் உள்ள பெரும் வளங்கள் எல்லாம் அரசு நடத்தும் - மற்றவை தனியாருடன் சேர்ந்து அரசு செய்யும்.

அதாவது ரயில்வே , தூர்தர்சன் , நிலக்கரி , துறைமுகங்கள், எரிவாயு , மிம்சாரம் , விமான போக்குவரத்து , பேப்பர் , காப்பர் , டெலிகாம் , அலுமினியம் ஆலை, ஸ்டீல் ஆலைகள், துறைமுகங்கள் என்று இயற்க்கை வளங்கள் , பெரும் சேவைகள் எல்லாமே அரசிடம் இருந்தது. இவைகளை கொண்டு உருவான சுமார் 320 நிறுவனங்கள் அரசிடம் Central Public Sector Enterprises கீழ் இயங்குகின்றன.

indian railway, AIR INDIA LTD, COAL INDIA LTD, GAIL (INDIA) LTD,FOOD CORP OF INDIA, HEAVY ENGINEERING CORP LTD, NATIONAL ALUMINIUM CO.LTD இப்படி 64 பெரும் நிறுவனங்களும் - BHARAT DYNAMICS LTD.,HINDUSTAN SHIPYARD LTD,HMT BEARINGS LTD என்று இரண்டாம் மூன்றாம் தர நிறுவனங்கள் சுமார் 256 நிறுவனங்கள் அனைத்துமே இந்திய அரசின் கீழ் இயங்குகின்றன. அதாவது வளம் கொட்டும் லாபம் தரும் அத்தனை துறைகளையும் அரசிடம் சென்று சேர்ந்தன. இதன் மூலம் நவீன சோசியலிசம் சிந்தனையுடன் 1950களில் தேசம் நகர தொடங்கின. முதல் பத்தாண்டுகளில் HMT(Hindustan Machine Tools Limited) போன்ற நிறுவனகள் இந்த தேசம் ஒரு கோவில் என்றால் இவை கோவில் கலசங்கள் என்று கூறும் அளவுக்கும் அரசுக்கு வருமானம் ஈட்டி கொடுத்தன. ஆனால் பிற்பாடு இந்தகா வளர்ச்சி சரியாய் தொடங்கி ஒரு மந்த நிலையை கடந்த 50வருடம் மேலாக நிலவுகிறது.

ஆனால் இந்தியாவின் உற்பத்தி துறையில் தனியார் கம்பெனிகள் கடந்த 40வருடங்களில் முன்னேறி சாதித்ததை விட 70வருடங்கள் மேல் இயங்கும் இந்த வளமான அரசு நிறுவனங்கள் சாதித்தது மிக மிக குறைவு. இத்தனைக்கும் அனைத்து வளங்களையும் கையில் வைத்து கொண்டு ஏன் எந்த நிலை????

இந்தியாவில் அனைத்து பெரும் வங்கிகளையும்(Public Sector Banks மொத்தம் 21) கையில் வைத்திருந்த அரசு ஊழியர்கள் வங்கியை நடத்திய லட்சணத்தால் தான் இன்று சுமார் 8லட்சம் கோடி வாராகடனை கணக்கு காட்டி வங்கிகளை, நாட்டை திவால் ஆகும் நிலைக்கு தள்ளியுள்ளனர். ஆனால் தங்களுக்கு வருமானம் போதவில்லை என்று ஒரு பக்கம் போராட்டம் நடத்துவது - இன்னொரு பக்கம் எவன் வீட்டு சொத்து எப்படி போனா என்ன என்ற வகையில் லஞ்சம் வாங்கி வாங்கி இந்த அனைத்து பெரும் அரசு நிறுவனங்களையும் நாசம் செய்தது வேறு யாரும் இல்லை இந்த அரசு ஊழியர்கள் தான். அவர்களுடன் கைகோர்த்த அரசியல்வாதிகள்.

இதனால் அரசு எடுத்து செல்லமுடியாத துறைகளில் தனியார் அனுமதி வழங்கும் வேலையும் அரசு செய்தது.
------------------------------------------------------
இன்று நீங்கள் கேட்ட SAIL:

சரி அந்த வகையில் இன்று SAIL(Steel Authority of India Ltd) இந்த இரும்பு ஆலையை பற்றி கொஞ்சம் பார்க்கலாம். 1954ல் இருந்து இயங்கும் இந்த நிறுவனம். இதன் கீழ் வரும் முக்கியமான 8 உருக்காலைகள்

Bhilai Steel Plant,Durgapur Steel Plant,Rourkela Steel Plant,Visvesvaraya Iron & Steel Plant,Salem Steel Plant,Chandrapur Ferro Alloy Plant,Bokaro Steel Plant,IISCO Steel Plant

இந்த ஆலைகள் மூலம் வெளியாகும் பொருட்கள் என்று பார்த்தால் ரயில் தண்டவாளங்கள் -ரயில் பேட்டிகள் நட்டுகுகள் , கப்பல்கட்ட தேவையான steel Plates- கார் , ஏசி, வாஷிங் மெசின், பீரோ ,கட்டில் என்று வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்க தேவையான cold rolled steel- வீடு, பாலம், பெரும் கட்டுமான பணிகளுக்கு தேவையான TMT , Bars,Rods - கேஸ் சிலிண்டர்கள் , எண்ணேய் சேமிப்பு கிடங்குகள் , எரிபொருட்கள் கொண்டு செல்லபடும் வாகனங்கள் என்று பல தயாரிக்க தேவையான Hot Rolled Steels- விண்வெளி ராக்கெட் , ராணுவம் , விமானங்கள் தேவைப்படும் Special Steels என்று உங்களை சுற்றி உள்ள உலகத்தை பாருங்கள் அனைத்துக்கும் தேவையான ஸ்டீல் உற்பத்தி இங்கே தான் நடக்கிறது. ஆக இது எவ்வளவு முக்கியமான துறை என்பது உங்களுக்கு புரிகிறதா?

இதன் தேவை மிக அதிகம். தேவைக்கு தகுந்த உற்பத்தி நாம் பெருக்க வேண்டும். உண்மையில் ஏற்றுமதி செய்வதை விடவும் இறக்குமதி ஆகாத வண்ணம் நாம் நமக்கு தேவையான அளவாது இந்த ஸ்டீல் தேவையை பூர்த்திசெய்துகொள்ள வேண்டும். இதை அடிப்படையில் புரிந்து கொள்ளுங்கள். அதாவது நம் உள்நாட்டின் தேவைக்கு தகுந்த ஸ்டீல் நமக்கு இங்கே கிடைக்கவேண்டும்.

Essar Steel, Bhushan Steel, Monnet Ispat, Electrosteel Steel, JSPL இவை தனியார் உற்பத்தி நிறுவனங்கள்.

------------------------------------------------------

இந்த நிறுவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கியமான விவரங்கள் உங்களுக்கு :

1.2004ல் இந்த நிறுவனத்தை விரிவுபடுத்துவதன் மூலம் வரும் காலங்களுக்கு தேவையான உற்பத்தி திறனை கூட்ட 25,000கோடியில் expansion programme அறிவிக்கபட்டது. 2000, 2001, 2002களில் மிக பெரிய நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்களில் முதலில் இருப்பது இந்த SAIL தான், நஷ்டம் -1,698.85 , -1,696.37 அது கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்ய 2007, 2006 களில் 4,012.97 கோடி , 6,202.29 கோடி லாபம் ஈட்டியது. சென்றவருடம் -4,137.26 நஷ்டம்.
விஷயம் இது தான் இங்கே மிக அதிகப்பதியான தேவை இருக்கிறது - ஆனால் நிறுவனம் லாபகரமாக இயங்கவும் இல்லை - பெரிய அளவில் வளர்சியும் இல்லை.

2.iron & steel industry பொறுத்தவரை இந்தியாவின் ஆண்டு உற்பத்தி திறன் 2000களில் 26.9 million metric tons உற்பத்தி செய்த இந்தியா - 2007ல் 53.5MMT , 2013ல் 81.2MMT , 2016ல் 95.6MMT மொத்த உற்பத்தி திறனை அடைகிறது. ஆனால் இதை தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து மொத்தமாக நாட்டின் உற்பத்தி என்று கொள்ளவும். (2016ல் நாட்டின் ஸ்டீல் உற்பத்தியில் நிறுவனங்களின் பங்களிப்பு TATA Steel Group 95.6 mmt , JSW Steel Limited 14.9, SAIL 14.4mmt , Essar Steel Group 7.5mmt, JSPL 3.5mt)

3.இந்திய வங்கிகள் வாராகடனாக இருக்கும் கடனில் இந்த ஸ்டீல் நிறுவனங்களுக்கு கொடுத்த கடன்கள் தான் மிக அதிகம். அதன் மதிப்பு மட்டும் சுமார் ₹1,48,289கோடி. இந்த கடனை திரும்ப செலுத்தாத சூழல் கடந்த 10ஆண்டுகளில் உருவாகியுள்ளது.

4.சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் விலை இந்தியாவில் உற்பத்தியாவதை விட மிக குறைவு என்பதால் அதற்கு இறக்குமதி தேவை அதிகம் ஆகிவிடுகிறது. எளிமையாக கூறினால் 900 sq ft அளவில் வீடு கட்டுமானம் செய்தால் அதற்கு சுமார் 4000கிலோ ஸ்டீல் தேவை என்றால் - இந்திய உற்பத்தியாகும் ஸ்டீல் விட சீனாவில் உற்பத்தியாகும் ஸ்டீல் கொண்டு கட்டுமானம் செய்ய உங்களுக்கு சுமார் 60,000ரூபாய் குறைவாக செலவாகும் நிலை. இதனால் இறக்குமதி அதிகரிக்கிறது.

5.இந்திய நிறுவனங்கள் பெரும் சவாலி சந்திக்கக் - அரசிடம் இறக்குமதி வரியை அதிகபடுத்த கேட்டுகொள்ளபடுகிறது. அதன் படி அதிகபட்ச மதிப்பான 25%இருக்குமதி வரி விதித்தும் கூட இந்த சவாலை அரசால் எதிர்கொள்ள முடியவில்லை. அதே நேரம் நாட்டின் தேவையும் உள்ளது என்பதால் இது ஒரு சிக்கலான விவகாரம். இன்னும் அதிகம் வரி கூட்டவும் முடியாது - அது WTO மீறும் செயலாகும்.

ஆக மோடி பதவிக்கும் வரும்போது இருந்த பிரச்சனை ?

வாங்கிய கடனை கொடுக்க வில்லை என்று ஸ்டீல் நிறுவனங்கள் மீது வங்கிகள் புகார் சொல்ல ; ஸ்டீல் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி ஆகும் செலவினம் கூடுவது முதல் இறக்குமதி ஆகும் சீனாவின் ஸ்டீல் போட்டியால் உருவான மந்தநிலையை கணக்கில் காட்ட ; இன்னொரு பக்கம் SAIL உற்பத்தி எதிர்பார்த்த வளர்ச்சி இல்லாது நிற்க , மற்றொரு பக்கம் automobile, அடிப்படை கட்டுமான நிறுவனகள், உள் நாட்டு இராணுவ உற்பத்தி , electrical machinery, புதிய ரயில் உற்பத்தி, renewable, thermal powerஎன்று அனைத்து விதமான உள்நாட்டு உற்பத்திக்கும் Make in India திட்டம் கைகொடுக்கலாம் - ஆனால் அவைகளுக்கு தேவையான ஸ்டீல்?????

2015 ஏப்ரல் மாதம் ஒரிசாவில் உள்ள Rourkela Steel Plant (RSP) உருக்கு ஆலைக்கு சென்ற பிரதமர் மோடி அவர்கள் இப்படி கூறினார் "அமெரிக்காவை விட அதிகம் நாம் ஸ்டீல் உற்பத்தி செய்கிறோம். ஆனால் சீனாவை விட மிகவும் பின்தங்கியுள்ளோம். Make in india திட்டம் நடைமுறைக்கு இருக்கும் இந்த நேரம் நாம் அதிகம் இதில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது".

என்று பெரும் சவாலை எதிர்கொள்ளும் நிலையில் பிரதமராக உங்களை நீங்களே நினைத்து கொண்டு எப்படி தீர்வு காணலாம் என்று சிந்திக்கவும். உண்மையில் மோடி நல்ல நிர்வாகி. தமிழகத்தில் தான் வேறுவிதமாக திராவிட, கம்யூனிஸ்ட் , திக , விசி இன்னும் மதம் மாற்றும் அமைப்புகளால் தவறாக பிரச்சாரம் செய்யபடுகிறது.

------------------------------------------------------
இந்த நிலையில் தான் மோடி தலைமையில் ஆனா அரசு - Bhadrawati, Durgapur உருக்கு ஆலைகளுடன் சேலம் உருக்கு ஆலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவு எடுக்கிறார். எதனால் ????

Crude Steel உற்பத்தியை கூட்டுவதற்காக 2006-2007களில் அன்று இருந்த மன்மோகன் அரசு ஏறக்குறைய 25,000கோடி முதலீட்டில் விரிவாக்கம் பணிக்கு செலவு செய்து - அனைத்து நிலையிலும் உற்பத்தி திறனை கூட்டுவதற்கு முடிவு செய்தது. அதன் மூலம் SAIL உற்பத்தி திறன் 21.4 mtt ஆக உயரும் என்று அன்று பெருமையாக SAIL நிர்வாகிகள் கூறினார். ஆனால் என்ன நடந்தது??? முதலீடுகள் கிடைத்தும் உற்பத்தி கூடியதா?

2016ல் SAIL உற்பத்தி 14.9mmt - இது 2006ல் எவ்வளவு தெரியுமா? 13.5mmt. கூறுங்கள் என்ன இப்போ மேற்கொண்டு முதலீடு செய்ததால் உற்பத்தி கூடிவிட்டது???? என்ன ஆனது முதலீடுகள்???? இந்த லட்சணத்தில் 2020ல் SAIL உற்பத்தி 60 million tons இருக்கும் என்றும் கூறினார். இதுலாம் காதில் சுற்றும் வேலை. அன்று நிர்வாகம் சரியாக நடந்திருக்கும் என்றால் உண்மையில் நாட்டின் மொத்த உற்பத்தி 180mmt தொட்டிருக்கும்.

ஆனால் இன்றைய உற்பத்தி 95.6MMT மட்டுமே. இப்படி இருந்தால் எப்படி இறக்குமதி குறையும்?? எப்படி உள்நாட்டு உற்பத்தி அதிகம் ஆகும்??? எப்படி வாங்கிய கடனை நிறுவனங்கள் திருப்பி செலுத்தும் நிலை உருவாகும்???? மொத்தமும் நாசம் தான் ஆகும். காங்கிரஸ் தன நிர்வாக திறமை இன்மையை ஒத்துகொள்ளவே மாட்டார்கள்.. செய்வது எல்லாம் செய்ய வேண்டியது. இன்று அனைத்தையும் மோடி தான் காரணம் என்று கூச்சல் போட வேண்டியது. இருக்கவே இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் , தி இந்து , ndtv போன்றவர்கள் கூச்சல் போட.

இதில் இந்த கூத்தை கேளுங்கள்... 2015ல் CBI 13 SAIL உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்கிறது. காரணாம் பணிக்கு ஆட்கள் எடுப்பதில் ஊழல் முறைகேடு. இன்னொரு பக்கம் இந்த விரிவாக்கம் செய்வதற்கு அரசு கொடுத்த முதலீட்டில் ஊழல். சொல்லவே வேண்டாம் நம்ம அரசு ஊழியர்கள் லட்சணத்தை. கொஞ்சம் கூட கூச்சம் இல்லாத கூட்டம் அரசு ஊழியர்கள் தான். (சில நேர்மையானவர்கள் தவிர)

இந்த சூழலில் SAIL நஷ்டத்தில் எந்த எந்த units முக்கியமாக பெரும் நஷ்டம் வர காரணம் என்று பார்த்தால் Alloy Steels Plant (ASP), Salem Steel Plant (SSP) and Visvesvaraya Iron and Steel Plant (VISP) இந்த மூன்று இடங்களிலும் நஷ்டம் தொடர்கிறது. அதில் இந்த சேலம் உருக்காலை கடந்த 5வருடத்தில் தொடர் நஷ்டம் மட்டும் அல்ல போட்ட முதலீடும் வீண்.

எனவே அரசு இதனை disinvestment என்ற பொருளாதார காரணங்களால் வேறு வழியில்லாமல் விற்கிறது. இதில் என்ன தவறு இருக்கமுடியும்?

1.உற்பத்தியும் கூட்ட மாட்டோம்
2.லாபமும் கிடையாது
3.வருடம் வருடம் நஷ்டம் கூடிகொண்டே போகும்
4.ஊழலும் செய்வோம்..

தொழில் சங்கங்கள் வைத்து கொண்டு நாடு , விவாகம் எதுவும் அக்கறை இன்று அரசை மிரட்டி சம்பளம் வாழ்க்கையை நகர்த்தும் இந்த அரசு ஊழியர்கள் வைத்து எந்த துறை உருப்படும். அதுவும்

இது வெறும் disinvestment strategy தான். எனவே நீங்கள் நினைப்பது போல வளத்தை அப்படியே தனியாருக்கு தாரை வார்ப்பது அல்ல.

ஆனா அரசே நடத்தனும் நிறுவனத்தை???? என்ன நியாயம் இது. அப்படி என்ன வேண்டி இருக்கு அரசு நடத்த???? இப்படி Telecom industry தனி ஆளாக இருந்த BSNL ஆட்டம் தனியார் வந்த பின் எப்படி மாறி நாட்டுக்கு எவ்வளவு லாபகரமாக மாறியது என்று கொஞ்சம் மேற்கொண்டு படியுங்கள் புரியும்.

அரசுக்கு முறையான வளர்சியும் லாபமும் வேண்டும். தவிர உற்பத்தி அதிகமாகவும் வேண்டும் என்னும் பொது அதை தனியார் நிறுவனங்கள் செய்யும் என்றால் கொடுப்பதில் என்ன தவறு ???? அரசு எடுத்தாலும் ஊழியர்கள் கொண்டு தான் வேலை வாங்கும் - தனியாரும் இதே மக்களை கொண்டு தானே வேலை வாங்க போகிறார்கள். தனியார் என்றாலே எதோ தவறு என்பது போல ஒரு முட்டாள்தனம் எபப்டியோ நாடு முழுவதும் பரவிவிட்டது. உடனே அரசு ஊழியர்களை அதிகம் சட்ட திட்டங்களை கடுமையாக ஆக்கி நடத்த வேண்டும் என்று சிலர் கூறுவார். ஆனால் அதிக கெடுபிடி என்றால் அரசு வேலையே நடக்காது என்பது தான் அரசு துறையை பொறுத்தவரை உண்மை.
-------------------------------------------------------
இறுதியாக :

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் 17,900 கோடி லாபம் தரும் ONGC,10399.03 கோடி லாபம் தரும் Indian Oil Corporation Limited (IOCL),10470.53 கோடி லாபம் தரும் NTPC Limited என்று இந்தியாவில் உள்ள இந்த அரசு நிறுவனங்களை விற்கும் எண்ணம் இல்லை.

எடுத்துக்காட்டுக்கு BSNL, தூர்தர்சன், விமானபோக்குவரத்து போன்றவைகளில் தனியார் வந்த பின் நல்ல முன்னேற்றம் தானே!! அரசுக்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது.... முதலில் BSNL இயங்கிய லட்சனம் அனைவரும் அறிவர். 2001களில் இந்த நிறுவனம் கொடுத்த லாபம் 6,312கோடி. அரசுக்கு இது வருமானமே. ஆனால் BSNL அரசு ஊழியர்கள் இதன் முக்கியத்துவம் தெரிந்து காலம் அது - அடுத்து நடந்தது எல்லாமே கற்பழிப்பு தான். 2002-03 ஆண்டுகளில் இந்த நிருவனம் 76% வருமான இழப்பை சந்தித்து வெறும் 1,444 கோடி லாபம் மட்டுமே கொடுத்தது.

தனியார் பங்களிப்பை அரசு அனுமதி அளித்த பின் மக்களுக்கு நல்ல சேவையும் கிடைத்தது - போட்டி காரணமாக குறைந்த விலையில் சேவை கிடைக்க - இன்னொரு பக்கம் நாட்டுக்கு சுமார் US$ 24.033 பில்லியன் - இந்திய மதிப்பில் சுமார் 1,56,200 கோடி அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது. அது தவிர 44,342 கோடி இந்த ஆண்டு வருமானம் மட்டும். இது தவிர ஸ்பெக்ரம் ஏலத்தின் மூலம் மட்டும் Rs 64,000கோடி வருமானம் கிடைத்தது அரசுக்கு. 22 லட்சம் மக்கள் நேரடியாக வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இது தவிர மறைமுக வேலைவாய்பும் இந்த ஒரே முடிவால் உருவாகிறது. இதை சாதித்தது தனியார் பங்களிப்பால் தான் ஒழிய அரசு BSNL மட்டும் என்று இருந்தீர் என்றால் இந்நேரம் மக்கள் பைத்தியம் பிடித்திருக்கும் அவர்கள் கொடுத்த சேவையில்.

ஆக தனியார் ஒரு துறையில் வருவது என்பது தவறே கிடையாது. அடிப்படையில் இங்கே தனியார் என்றாலே தவறு என்று ஒரு முட்டாள் தனமான போக்கு சினிமாத்தனமாக உருவாக்கி வருவது மாணவர்களை நிச்சயம் கெடுத்து நாசம் தான் ஆக்க போகிறது.

பலநேரம் நாம் வசதியாக அரசியல்வாதிகளை மட்டும் குறை கூறுகிறோம் ஆனால் உண்மையான நாட்டை பிடித்த வியாதி அரசு ஊழியர்கள் தான். வெறும் ஜாதி வருமான சான்றிதழ் வாங்கும் பொது வாங்கும் லஞ்சம் தான் நமக்கு அதிகம் தெரியும் - ஆனால் இந்த உற்பத்தி துறைகளில் அரசு அதிகாரிகள் காட்டிய கடமையில் மொத்த வளமும் அரசு நடத்துகிறது, அரசு நடத்துகிறது என்ற பெயரில் அரசு ஊழியர்கள் குடும்பம் தான் தின்று கொழுத்தது. இன்றும் அனைத்துமே அரசு நடத்த வேண்டும் என்று கூறும் முட்டாள்கள் உண்டு.. அது ஒரு தவறான கொள்கை முடிவு என்று சீனா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளே திருத்தி கொண்ட பின் இங்கே இருக்கும் கம்யூனிஸ்ட் ஊடகங்கள் மொத்த சமூகத்தையும் தவறாக வழிநடத்துவது தான் உண்மை.

அதற்காக அனைத்து அரசு ஊழியரையும் நான் குறை கூறவில்லை - பொதுவாக இந்தியாவில் அரசு ஊழியர்கள் தான் நாட்டின் சாபம்.
சினிமா , கம்யூனிஸ்ட் இந்த இரண்டையும் விட்டு கொஞ்சம் மக்கள் விலகி இருப்பது தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.

- மாரிதாஸ்
Read More
Keerthivasan

ஏன் அரசு தேவைப்படுகிறது? எதற்கு அரசாங்கம்? எப்படி அரசு உருவாகியது?

ஏன் அரசு தேவைப்படுகிறது? எதற்கு அரசாங்கம்? எப்படி அரசு உருவாகியது?

அரசு என்ற ஒரு அமைப்பால் தான் நாம் மற்ற விலங்குகளிடம் இருந்து வேறுபடுகிறோம். வலியது எளியதை தின்னும் எனும் காட்டுமிராண்டி வாழ்க்கையிலேயே இருந்து வெளியே வந்தது தான் அரசு எனும் கோட்பாடு.

முதலிலே எப்படி ஆரம்பித்தது? உறவினர்களை மட்டும் நம்புவதாக. அது சாதியாக உருப்பெற்றது. சொந்த சாதிக்காரனை மட்டும் காப்பாத்துறது.
பின்பு மதம் அல்லது கொள்கை என ஆனது. இதை நம்புவதால் நம்புவும் ஆட்களுக்கு மட்டும் என. சொந்த மதத்துக்காரன மட்டும் காப்பாத்துறது.

இதெல்லாம் கூட்டமான முறைகள் எனவே தனிமனிதனுக்கான கருத்துக்கோ உரிமைக்கோ எல்லாம் இடமில்லை. ஒரு சாதிக்காரன் தப்பு செஞ்சால் ஒன்னு அந்த சாதியே அவனை தண்டிக்கனும் இல்லாட்டி ஒட்டுமொத்த சாதியே விலக்கி வைக்கப்படும் என்றான நிலைகள். தனிமனிதன் தனியாக செயல்படமுடியாத நிலைகள்.

அரசமைப்பு அரசன் என்றொருவன் ஆட்சி செய்த போது இந்த பிரச்சினை இருக்கவில்லை. ஏன்னா அரசனிடம் முறையிடலாம் அவன் தண்டிப்பான். நீதி வழங்குவான்.

போரினாலும் கொள்ளையாலும் கொடூரன்கள் படையெடுத்ததாலும் அரசனே இல்லாமல் போனாதாலும், அப்படி வந்த அரசனே காமக்கொடூரன்களாக இருந்ததாலுமே இந்தியாவிலே சாதி என்பது இன்று வரை நீதி வழங்கும் முறையாக மக்களை பாதுகாக்கும் முறையாக இருக்கிறது?

இன்றைக்கு ஒரு பிரச்சினை என்றால் போலீஸுக்கு போகிறோமா அல்லது உறவினர்கள், நண்பர்களிடம் உதவி கேட்கிறோமா? ஏன் சாதி இன்னமும் இருக்கிறது என்பதற்கான பதில் இங்கேயே இருக்கிறது.

அதை தாண்டி தனிமனித உரிமை, சம உரிமை என எல்லாம் வந்தது அதற்கான தேவை வந்தபொழுது தான். அது ஒன்றும் வானத்திலே இருந்து குதித்துவிடவில்லை.

வெள்ளையர்களுக்கு கொள்ளையடிக்க நாடுகளும் அதிலே அடிமை வேலை செய்ய அடிமைகளும் தேவைப்பட்டபோதெல்லாம் அவர்கள் சமத்துவம், சகோரத்துவம் பேசவில்லை. இதை ஞாபகம் கொள்ளுங்கள்.

அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெபர்சன் அடிமைகள் வைத்திருந்தார். சாதியை ஒழித்து எல்லோருக்கும் நல்வழி காட்டியதாக பீற்றிக்கொள்ளும் ஆங்கிலேயயே வெள்ளையன்களோ அடிமை முறையை ஒழிக்கமுடியாது ஏனெனென்றால் அது நல்ல வியாபாரம் பெருத்த நட்டம் ஏற்படும் என ஆங்கிலேயே பாராளுமன்றத்திலேயே பேசினார்கள்.

அடிமை முறையை ஒழித்தபின்பும் உடனே எல்லோருக்கும் சம உரிமை என கொடுத்துவிடவில்லை.

ஒரு இந்தியனுக்கு வெள்ளையன் அளவு அறிவு இல்லை எனவே இந்தியர்களே நாட்டை ஆள முடியாது என ஆங்கிலேயே நாடாளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சில் எனும் கொடூரன் இந்தியர்கள் எல்லோருக்கும் கிரிமினல்கள் நாட்டை கொள்ளையடிப்பார்கள் என சொன்னான்.

அமெரிக்க உச்சநீதிமன்றமே ஓரு கருப்பன் வெள்ளையனுக்கு சமமில்லை என தீர்ப்பு சொன்னது. 1960கள் வரை கருப்பர்களும் வெள்ளையர்களும் ஒரே பள்ளியிலே சேர்ந்து படிக்கமுடியாது. ஒரு உணவகத்திலே சேர்ந்து உணவருந்த முடியாது.

விஞ்ஞானம் முன்னேற முன்னேற வேலை செய்ய அடிமைகள் தேவையில்லை என்றான போது தான் நிலமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. கப்பலை நீராவியால் ஓட்டலாம் அடிமைகளை வைத்து துடுப்பு போடவேண்டியதில்லை என கண்டுபிடித்த பின்பு தான் ஆப்பிரிக்கர்களை அடிமையாக பிடிப்பதை நிறுத்தினார்கள்.

இதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்? சாதி என்பதும் அடிமை முறை என சொல்லவருகிறேனா?

இல்லை. சாதி என்பது அடிமை முறையை தாண்டிய சம நிலைமுறை. ஒரு சாதியை அடிமைப்படுத்த முயன்றால் மற்ற சாதிகள் ஒத்துக்கொள்ளாது. வெள்ளையன்கள் போல மற்றவர்களை போய் அடிமைப்படுத்தினால் தான் உண்டு. அதற்கு இங்கே தேவையில்லை ஏன்னா ஏற்கனவே உணவு, உடை, இருப்பிடம் எல்லாம் நன்றாகவே இருக்கிறது.

இந்த இடத்திலே கண்டுபிடிப்புகளின் மீதான உரிமை, சொத்துரிமை இன்னபிற எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இது அரசமைப்பாக மாறுவதற்குள் கொள்ளையன்களின் படையெடுப்பு ஆரம்பித்துவிட்டது. 1200 வருட கொலை, கொள்ளையை விட்டு அப்பாடா என இருப்பதற்குள்

காங்கிரஸ் களவாணீகள் திரும்பவும் கொள்ளையை ஆரம்பித்துவிட்டன.

ஆனால் இது அனைத்துக்கும் காரணம், பார்ப்பான் - இந்து மதம் - சாதி. அப்பத்தானே இன்னுமொரு ஆயிரம் வருசத்துக்கு கொள்ளையடிக்கமுடியும்.

சாதி எப்படி ஒழியும் என கேட்பவர்களுக்கு என்னுடைய பதில் இது தான்.

என்றைக்கு உதவி என்றால் நண்பர்கள், உறவினர்கள் என போவதை விட அரசிடம் போகலாம் அரசு எல்லோருக்கும் உதவி செய்யும் என்ற நிலை வருமோ அன்று சாதி தேவையில்லாமல் போகும். அது இந்த ஊரிலே பிறந்தேன் என்பது போல ஒரு அடையாளமாக இருக்கும்.

சும்மா கலப்பு திருமண்ம், மதம் மாறுதல் என்றால் எல்லாம் சாதி ஒழியாது.

சாதியும் தேசியமும் எப்படி ஒன்றாக இருக்கின்றன என முன்பு எழுதிய பதிவு.

-
சாதியும் தேசியமும்
சாதி பற்றிய புரிதல்களில் அது வெறுமனே பார்பனர்கள் திட்டமிட்டு கொண்டுவந்ததாக சொல்லப்படும் கட்டுக்கதைகளே அதிகம் ஆனால் உண்மையில் சாதி என்பது என்ன பற்றிய விவாதங்களோ புரிதல்களோ தமிழில் இல்லாமல் இருக்கிறன. மேற்கொண்டு சாதி ஏன் இன்னமும் இருக்கிறது என்ற கேள்விக்கும் யாரிடமும் விடையில்லை.

சாதி என்பது என்ன? அது ஒரு அரசியல் அதிகாரம் கொண்ட அரசமைப்பு. இன்றைக்கு அரசாங்கம் செய்யும் அனைத்து வேலைகளையும் ஒரு சில வேலைகள் தவிர இன்னமும் சாதிகள் செய்து கொண்டு தான் இருக்கிறன. வரி விதிப்பது என்பது அரசு செய்கிறது, சாதிகளிலும் கோவில்களுக்காக அல்லது மற்றைய வேலைகளுக்காக ஒரு குடும்பத்தினர் இவ்வளவு தரவேண்டும் என வரிவிதிப்பது உண்டு. கூடவே யாரிடம் வரிவிதிக்கவேண்டும் யாரிடம் வரி விதிக்ககூடாது என்ற கட்டுப்பாடுகளையும் உடையது. ஒரு சாதியின் உறுப்பினர்களுக்கு இடையே வரும் பிரச்சினைகளையோ அல்லது ஒரு சாதி உறுப்பினருக்கும் இன்னோர் சாதி உறுப்பினருக்கும் வரும் பிரச்சினைகளையோ பஞ்சாயத்து மூலம் தீர்க்கும் வழிமுறைகளும் கூடவே சாதிக்கு என கட்டுப்பாடுகளையும் கட்டுமானங்களையும் கொண்டது. அதை மீறுபவர்களுக்கு தண்டனைகளையும் அளிக்கும் அதிகாரத்தையும் கொண்டது. சாதியின் மிக முக்கியமான அம்சம் யார் யாரெல்லாம் அதன் உறுப்பினர்கள் யார் யாரெல்லாம் அதன் உறுப்பினர் ஆகாமல் போகிறார்கள் என தீர்மானிக்கும் விதிகளே.

ஆக சாதி ஒரு அரசமைப்பு என கொண்டால் வேறு எதெல்லாம் அரசமைப்பு கொண்டவையாக இருக்கிறன? மதரீதியான அமைப்புகளை சொல்லலாம். கிறிஸ்துவ சர்ச்சுகள், முஸ்லீம் ஜமாத்துகள், சீக்கிய பிரபந்தக்கமிட்டிகள், பார்சி அமைப்புகள் என பெரும்பாலான மத அமைப்புகள் அரசியல்ரீதியான அதிகாரம் கொண்டவையாகவே இருக்கிறன. சாதியையும் மத அமைப்பையும் தாண்டி 19 அல்லது 20 ஆம் நூற்றாண்டில் தோன்றி வந்த கருதுகோளே தேசியம் என்பது.

தேசியம் என்பது நிலத்தை அடிப்படையாக கொண்ட அமைப்பு. ஒரு நாட்டின் எல்லைகள் புவியியல் ரீதியாக வரையறுக்கப்படுகிறன, அந்த எல்லைக்குள் யார் இருக்கலாம் யார் இருக்கமுடியாது, யார் வரலாம் யார் போகலாம் என்ற கட்டுப்பாடுகளை தேசிய அரசு விதிக்கிறது. யாரெல்லாம் அந்த தேசியத்தில் உறுப்பினர், புதிதாக யாரெல்லாம் உறுப்பினர் ஆக முடியும் எனவும் கட்டுப்பாடுகள் உண்டு. பெரும்பாலான நாடுகள் அந்த நாட்டில் பிறந்தவர்களை உடனடியாக உறுப்பினராக ஏற்றுக்கொள்கின்றன.

இந்த இடத்தில் ஒரு கேள்வி கேட்கலாம், மன்னராட்சி முறையை விட்டாச்சே அதுதானே மிக பரவலான ஒரு ஆட்சி முறை என. ஆமாம் அது பரவியிருந்த ஆட்சி முறை தான் ஆனால் அது சாதி அடிப்படையில் ஆனது தான். ஒரு பரம்பரையில் பிறந்தவர்கள் மட்டும் தானே வழி வழியாக அரசாள முடியும், மற்ற யாரும் எவ்வளவு தான் திறமை இருந்தாலும் ஆக முடியாது அல்லவா? இந்தியாவிலும் சரி மற்ற நாடுகளிலும் சரி ஒரு குறிப்பிட்ட சாதியினர் தங்களுக்கு ஒருவரை அரசனாக ஏற்றுக்கொள்வார்கள் பின்னர் அவர் மற்றைய நாடுகளை கைப்பற்றுவார் பேரரசராக ஆவார். இந்த இடத்தில் சாதி என்பதை இனக்குழு, சமூகம், பரம்பரை என என்ன சொன்னாலும் எதெல்லாம் பிறப்பை மட்டும் தகுதியாக வைக்கிறதோ அதை சாதி என்றே கொள்கிறேன்.

இந்தியாவில் முன்பு ஒரு மத்திய ஆட்சி இல்லை அதனால் இந்தியாவே இல்லை என சொல்லும் ஆட்கள் மத்திய ஆட்சி இல்லாமல் போயியும் எப்படி அந்நியர்களால் இந்தியாவை முழுமையாக அடிமைப்படுத்த முடியாமல் போயிற்று என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடிவதில்லை. ஏன் அடிமைப்படுத்த முடியவில்லை என்றால் இங்கு சாதி எனும் அரசமைப்பு அதுவும் பல்வேறு சாதிகளின் அரசமைப்பு இருந்தது. கொரில்லா போர் போல பல சாதிகளில் தாக்குதல்களை சமாளிக்க இயலவில்லை. இதற்கு மராத்தியர்கள், சீக்கியர்கள்,ராஜபுத்திரர்கள் என பல்வேறு உதாரணங்கள் உண்டு.

இன்றைக்கு சாதி எனும் கருதுகோளை விட்டுட்டு மொழி அடிப்படையிலான தேசியம் என்பதையெல்லாம் முன்வைக்கிறார்கள், ஒரு அமைப்பின் அடிப்படையே அதில் யாரெல்லாம் இருக்கமுடியும் இருக்க முடியாது என்ற அடிப்படை விதிதான். மொழி என்பது கற்றுக்கொள்வதாக இருக்கும் போது இந்த கட்டுப்பாட்டை விதிக்கமுடியாது என்பதாலே மொழிவாரி தேசியங்கள் அடிபட்டு போகின்றன. தெலுங்கானாவும் வளைகுடா நாடுகளும் இதற்கு சான்று.

இறுதியாக சாதி என்பதற்கும் தேசியம் என்பதற்கு பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை. இரண்டுமே அரசமைப்புக்கள் மட்டுமே. இதிலே ஒன்று சரி இன்னோன்று தவறு என சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

- Raja Sankar
Read More

Thursday, October 5, 2017

Keerthivasan

முருகன் தமிழர்கள் மட்டும் வணங்கும் கடவுளா?


 Pehowa, Haryana, Kartikeya Temple
தமிழ் கடவுள் முருகனை இந்த தமிழ் நாட்டை தாண்டி எவனும் கும்பிட மாட்டான் , நாங்கள் எதற்கு அவர்கள் கடவுளை வணங்க வேண்டும்? நாங்க ஹிந்துகள் இல்லை என்ற நாம் தமிழர் கட்சி பேச்சாளர்கள் வைக்கும் குற்றசாட்டுக்கு உங்கள் பதில்?{கேள்வி: கௌதம்}

கதறவிட்ட சீமான் ; அம்பலபடுத்திய திருமுருகன் என்று youtube போன்ற தளங்களில் விளம்பரம் தேடி கொள்ளும் கிருஸ்தவர்கள் கொஞ்சம் மற்ற மத உள் விவகாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்வேன்.

தமிழ் நாட்டில் , இன்னும் சொல்ல போனால் இந்தியாவிலேயே ஒரு வடிகட்டின முட்டாள் அரசியல்வாதி என்றால் அது நிச்சயம் இந்த சீமான் என்ற செபாஸ்டீன் தான் என்பேன். பொருளாதாரம் பேச சொன்னால் ஆடு மாடு மேய்தல் அரசு வேலை என்று பேசுவது ஆரம்பித்து வரலாறு இவர் மூளைக்கு என்ன தோணுதோ அது தான் வரலாறு என்று தேனாம்பேட்டை சிக்னலில் மேடையை போட்டு ஏக வசனத்தில் உணர்சி பொங்க நரம்புகள் புடைக்க பேசிவிட்டால் அது வரலாறு ஆகாது.

அறிவு இருக்கிறவன் கொஞ்சமாது தான் நினைப்பது சரியா என்று விவரம் தேடுவான். ஆனால் அந்த குறைந்த பட்ச தன்மை கூட இந்த முட்டாளுக்கு இருப்பதை நான் பார்த்ததே இல்லை. வாயில் வந்த வசனத்தை பேசிவிட்டு பின்னால் மண்டையை சொரிவது இவர் வழக்கம்.
----------------------------------------------

முதலில் சீமான் முருகன் கோவில் விவகாரம்:

-பழனி முருகன் கோவில் எந்த அளவு பழமையானதோ அதே அளவு பழமையான கோவில் தான் ஹிரியானா மாநிலத்தில் உள்ள Pehowa என்னும் இடத்தில் இருக்கும் கார்த்திகேயன் கோவில். இரண்டும் ஏறக்குறைய 5ஆம் நூற்றாண்டை தொடும் அளவு பழமையானவை. நான் சென்றுவந்த வரை Pehowa இன்னும் பழமையானதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஹிமாச்சல் பிரதேஷ் தர்மசாலவில் இருக்கும் மியுசியம் சென்று வரவும் , அங்கே பல ஆதாரங்கள் கிடைக்கும்.

பஞ்சாப் , ஹிமாச்சல் , குஜராத் என்று அனைத்து இடங்களிலும் காத்திகேயன் வழிபாடு உண்டு. என்ன முருகன் என்று சொன்னால் உடனே அவர்களுக்கு பெயர் குழப்பம் வரும் கார்த்திகேயா , செந்தில் என்று கூறினால் புரிந்து கொள்வர்.

-சிவ பக்தர்களுக்கும் - இமய மலைக்கும் உள்ள தொடர்பை இந்த உலகமே அறியும்.

எனவே சிவனையும் முருகனையும் வச்சு ஹிந்துகளை குழப்பலாம், பிரிவினை பேசலாம் என்று திரியும் சீமான் போன்ற தெய்வநாயகம் வழி வந்த கிருஸ்தவ அடிமைகள் கொஞ்சம் ஹிந்துக்களில் உள் விவகாரத்தில் வராமால் இருப்பது நல்லது.

இந்தியாவில் எந்த மொழியின் இலக்கியம் தேடினாலும் அது 90% ஹிந்துகளின் மத வழிபாடு , ஹிந்து மத கடவுள்களை போற்றி தான் இருக்கும். இந்த நாடு இந்த மக்கள் இந்த நாட்டில் உள்ள மொழிகள் இந்த நாட்டில் உள்ள பல்லாரியிரம் நம்பிக்கைகள் அனைத்தும் நீக்கமற ஹிந்து தெய்வங்கள் கலந்து நிற்கும். இதில் இருந்து எவனாலும் இந்த மண்ணின் இந்த ஆன்மாவை பிரிக்கவே முடியாது.

பிரச்சனை வட மாநிலங்களில் முகாலாயர் காலத்தில் சுமார் 50,000கோவில்கள் வரை இடிக்கபட்டது தான். அதனால் அங்கே பல கோவில்கள் இன்று இல்லை.



யார் ஹிந்து? எது ஹிந்து மதம்????

-இந்துகள் என்பது ஒரு குறிப்பிட்டு காட்டிவிட கூடிய மதம் அல்ல. அது இந்த மண்ணை புனிதமாக்கும் ஒரு கலாச்சாரம். இன்று நாம் குறிப்பிட்டு காட்டும் இந்துமத கட்டமைப்பை உருவாக்கியவர்கள் என்று யாரையும் குறிப்பிட்டு கூற முடியாது. சில நூறு ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள், சமய பெரியவர்கள் என்று கூறலாம். எனவே சுருக்கமாக கூறினால் பல்லுருவ வழிபாடு கொண்டவர்கள் ஹிந்துகள்.. (குறிப்பு : ரோம், எகிப்த், அரபியர்கள் என்று எல்லோரும் பல்லுருவ வழிபாடு தான் கொண்டிருந்தனர். மேற்கத்திய நாடுகளில் கிருஷ்து வந்து சென்று 300 ஆண்டுகள் ஏதோ ஒருகாரணத்தால் பெண் கடவுள்களை வணங்குவதை பெரிய அளவில் எதிர்ப்பு உருவாகி அது சாத்தானை வணங்கும் கூட்டமாக காட்டபட்டு முற்றிலும் அழிக்கபட்டனர்.. ஏறக்குறைய 30லட்சம் மக்கள் இறந்தனர் என்பது வரலாறு. இதே போல் அரபு தேசம் முழுவதும் இஸ்லாம். அதே போல் எல்லா இடங்களிலும் பல்லுருவ வழிபாடு முழுமையாக அழிந்தது... ஆசியாவில் ஹிந்துகளை தவிர. இன்றும் பெண் கடவுள்களாய் வணங்கும் மிக பழமையான மதம் இதுவே.}

2)மிக முக்கியமான விசயம்

ஏறக்குறைய 3000 வருடம் முன்னர் தெற்காசியா முழுவதும் பரவி இருந்து இந்த மக்கள் ஒரு பக்கம் காளி அம்மன் , துர்க்கை அம்மன் என்று பெண் கடவுள்கள் வழிபாடு இதற்கு பெயர் "சாக்தம்", இன்னொரு பக்கம் சிவன் ஆதியும் அந்தமுமாக அவரை முதற்கடவுளாக கொண்டு ஒரு வழிபாடு இது "சைவம்", இன்னொருபக்கம் விஷ்ணு அவர் தம் அவதாரமாக கொண்டு வழிபாட்டுமுறைகள் இது "வைணவம்" , இன்னொரு பக்கம் முருகன் முதல்கடவுளாக கொண்ட "கௌமாரம்" , இடையில் அனைத்துக்கும் மூலகடவுளாக கணபதி முன்னிறுத்தி ஒரு சமய வழிபட அது "காணாபத்தியம்". இது போதாதென்று சூரியனே அனைத்துக்கும் காரண கர்த்தா இந்த பூமியில் உயிர்கள் பிழைத்து வாழ, எனவே சூரியவழிபாடு அது "சௌரம்".

இப்படி 6 பெரும் பிரிவாக இந்த தேசத்தில் நின்றது இந்த மதவழிபாடுகள். (சைவம்,வைணவம்,சாக்தம்,கௌமாரம்,சௌரம்,காணாபத்தியம்.)

இந்த பிரிவும் தாங்கள் வழிபடும் முறை தான் சிறந்தது என்ற மனபான்மையும் இவர்கள் இடையே ஏறக்குறைய 2000 வருடம்முன்னர் பிரச்சனை வெடிக்கிறது. இது தான் இந்த சமயம் சந்தித்த முதல் பெரிய பிரச்சனை.{இரண்டாவது பிரச்சனை ஜாதிய பிரிவினை}

-தவிர அய்யனார் , கருப்பு, நல்கதேஸ்வரி, மீரா என்று சில நூறு தேவதைகள் , வாழ்ந்து இறந்தவ நல்ல மனிதர்கள் போற்றி வழிபாடுகள்... அது போதாது என்று வீட்டு சாமி , காவல் சாமி , சித்தர்கள், ரிஷிகள் வழிபாடு என்று மிக பெரிய அளவு பிரிவுகளாக இருந்த பல்லுருவ வழிபாடு கொண்ட சமூகமாகமாக விளங்கியது... மேற்கூறிய அனைத்தும் தனி தனியே சடங்குகள் , வழிபடும் முறைகள் என்று தனிதுவம் பெறவே அதுவே பிரச்சனையை வழிவகை செய்தது. {தமிழகத்தில் அய்யனார் , பாண்டி என்றால் அதே போல மேற்குவங்காளத்தில் நல்கதேஸ்வரி என்று இந்தியா முழுவதும் தேவதைகள் வழிபாடு உண்டு.}

இப்போ இதனை ஒன்றுபடுத்த வேதம் நன்கு தெளிவுபெற்ற ஆன்மீக பெரியவர்கள் களம்காண்கிறார்கள். அதாவது இந்த 6 பெரிய மத பிரிவுகளை ஒன்றினைக்க பலவழிமுறைகள் தேடி ஒன்றினைத்து ஒற்றுமையை கொண்டுவருகிறார்கள்.. (இருந்தும் மோதல்கள் இருந்தே வந்தன என்பது மிக முக்கியம். நன்கு கவனித்தால் அனைத்து இடத்திலும் இந்த புத்திசாலிதனமான இணைப்பு அப்படமாகவே தெரியும்.)

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அனைத்தின் பின்னாலும் இந்த மக்களை ஒன்றிணைக்கும் முயற்சி தெரியும். பண்டிகைகள் பல வந்ததே இதன் காரணமாக தான்.

இந்த மிக பெரிய வேலையை முடிக்கவே 1000 வருடம் மேல் போராட வேண்டியதாகிட்டது இந்து சமய பெரியவர்களுக்கு. ஆதிசங்கரர்,நம்மாழ்வார் , அபினாவ், அவ்வையார், காளிதாசர், காரைக்கால் அம்மையார், மங்கயர்கரசியர், நாயன்மார்கள் என்று அறத்தை முன்னிறுத்தி சமூகத்தை ஒன்றுபடுத்தினர். யாரும் பகை அல்லது பிரிவினையை ஆதரித்து பேசவில்லை.

மிக மிக முக்கியம் வேறு எந்த நாட்டிலும் ஒரு மதம் வரும் போது அங்கே முன்னர் இருந்த வழிப்பாட்டை அழித்து விட்டு ஒரு முகபடுத்தி ஆன்மிகம் முன்வைத்தனர், ஆனால் இங்கே இந்தியாவில் எந்த மதத்தையும் நம்பிக்கையையும் அழிக்காமல் ஒன்றுபடுத்தினார். இது தான் இந்த மண்ணின் கலாச்சாரம். இயேசு வந்தால் அவரையும் அனுமதிப்போம் - சில ஆயிரம் சித்தர்கள் இருக்கிறார்கள் அவரும் இருந்துவிட்டு போகட்டும். அவர் சொன்ன நல்ல கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க என்ன தப்பு இருக்கு?

பிரச்சனை- அவர் சொன்னதை கேட்க வேண்டும் என்றால் - நாங்கள் எங்கள் இந்த கலாச்சாரத்தை விட வேண்டும் , பெயரை மாற்ற வேண்டும் , பல ஆயிரம் காலமாக இருந்து வந்த இந்த நாட்டை, மண்ணை புனிதமாக கருதாமல் ஜெருசலேம் எங்களுக்கு புனித மண்ணாக இருக்க வேண்டும் என்று சொல்லும் பொது தான் பிரச்சனை எழுகிறது.

இங்கே மதம் கட்டாயபடித்த படவில்லை... மிக மிக முக்கியம். ஏன் என்றால் இந்த மதம் நாத்திகர்களையும் கூட அனுமதித்தது. நாத்திகம் தவறாக சொல்லவில்லை மனதிற்கு நேர்மையாக அறத்துடன் வாழ்தால் அதுவே சாலசிறந்தது தான். தினசரி தேவைக்கு கடவுளை வணங்கும் மக்களையும் அனைத்து கொண்டு - உருவ வழிபாடு விட்டு இயற்கையில் இறைவனை தேடிய வரை அனைவரையும் இணைத்து கொண்ட ஹிந்து மததை அழிக்க நினைப்பது என்ன ஒரு கேவலமான புத்தி?.

3.யாரும் கீதை படிக்கவில்லை?

இந்த தேசம் முழுவதும் சமய பெரியவர்கள் பயணம் செய்தனர், அப்படி செல்லும் இடங்களில் அந்த அந்த வட்டார மொழிகளை கற்று அதன் மூலமே வேதம் வாய்வழியாக போதித்தனர்.. அதாவது வாழ்வின் அறம் எது என்பதை போதித்தனர்.. காரணம் ஒற்றுமையாக, அறத்துடன் வாழ்வு இருக்கவேண்டி.
"திருவள்ளுவர் தொட்டு ஒளவை ஆரம்பித்து எல்லோருமே உயிர்களை கொன்று உணவாக உண்பதை முழுமையாக எதிர்த்தனர். இந்தியா முழுவதுமாக இந்த பிரதிபலிப்பை எளிதில் காணலாம். இவர்கள் எல்லோரும் என்ன ஹிந்துதுவாவாதிகளா? ஏன் என்றால் வாய் வழி கற்பிக்கபட்ட வேதமானது அதயே தான் கூறுகிறது. "

"பல மன்னர்கள் ஆட்சி தான். ஆனால் அனைவரும் நன்கு கவனித்தால் பொருளாதார விதி ஒரே போல் இருக்கும். அதாவது வரிவசூல் ஆரம்பித்து, நாட்டை நடத்தி செல்வது வரை அனைவரும் பொதுவாக கொண்ட விதி அர்த்தசாஸ்திரம் கூறியுள்ள வழிமுறையின் பிரதிபலிப்பு தெரியும்."

எனவே கீதை படிக்க விடவில்லை என்ற கூறுவது முட்டாள் தனம். கீதை சொன்ன தத்துவத்தை கொண்டு சேர்த்தார்கள். கீதையை சேர்த்தாலும் ஒன்று தான் அது சொல்லும் நல் அறத்தை சேர்த்தாலும் ஒன்று தான். இடையில் வந்த இந்த ஜாதிய ஏற்ற தாழ்வு தான் இவர்களை பிரித்து நாசம் செய்தது தவிர வேத காலத்தில் அனைவருமே வேதம் கற்றனர். அதற்கு பல உதாரணங்கள் உண்டு. வேத வியாசர் தொட்டு ஜபாலி ரிஷி வரை பலர் எடுத்துகாட்டு உண்டு.

எனவே ஹிந்து என்பது ஒருவர் உருவாக்கி, கட்சி போல கொள்கைகள் கொண்டு மதம் மாற்ற உலகம் முழுவதும் போய் வாருங்கள் , மற்ற மதங்களை அழியுங்கள் என்று கூறிய மதம் அல்ல. அனைத்தையும் தன் உள்ளே இழுத்து கொள்ளும் ஒரு திறந்த ஆன்மீக தேடல் கொண்ட மிக எளிமையான வாழ்வு முறை தான் இந்த மதம்.

இன்னொரு விஷயம் புத்தர்- ஹிந்து இல்லை என்று எப்படி ஏன் பிரித்தார்கள் என்று தெரியவில்லை??? அதுவே தவறு என்பது என் தனி கருத்து. ஒரு ஹிந்து அரசர் ஆன்மிகம் தேடல் என்பது மிக இயற்கையான ஒன்று, அவருக்கு வேதம் தெரியும். அவர் என்றுமே வேததை நிராகரிக்கவில்லை என்னும் போது மக்களுக்கு ஆன்மீக தேடலின் வழியை காட்ட முற்பட்டவரை தனியா இந்த மண்ணில் இருந்து பிரித்த மேற்கத்திய சிந்தனை என்னால் ஏற்க முடிவது இல்லை..

உலகத்திற்கே soulology கொடுத்தது இந்த மண். இந்த மண்ணின் புனிதம் புரியாமல் பிதற்றுவது வெக்ககேடு. நான் ஆன்மீக வாதி இல்லை. நான் கொண்ட புரிதலை உங்களுடன் பகீர்ந்தேன்.
------------------------------------------

இறுதியாக :

சீமான் போன்ற கிருஷ்டவர்கள் அவர் மாமியார் என்ன சொன்னாலும் வேதம் என்று நினைப்பதை விட்டு விட்டு - கிருஸ்தவ மதம் மாற்றும் கூட்டங்கள் சொல்லும் "திருவள்ளுவர் கிருஸ்தவர் , முருகன் கிருஸ்தவர்" என்ற கேவலமான பல்லவியை இனி பாடவேண்டாம் என்று கேட்டுகொள்வேன். இது நிச்சயம் ஹிந்து - கிருஸ்தவ மதத்திற்கு இடையே மிக பெரிய மத மோதலை தமிழகத்தில் உருவாக்கும்.

மாற்று மத உள் விவகாரத்தில் வருவதை சீமான் நிறுத்தி கொள்ள வேண்டும்.

புனித பூமி என்று வட மாநில மக்கள் தெற்கே திருப்பதி , ராமேஸ்வரம் தேடி வருகிறார்கள்... தென் மாநில மக்கள் ஆன்மிகம் தேடி காசி , கங்கை, வைஷ்ணவி தேவி என்று வடக்கு நோக்கி செல்ல ஹிந்துகள் அனைவருக்கும் இந்த மொத்த நாடும் புனித பூமி.. சரி தானே? ஒரு ஹிந்து அமெரிக்காவில் இருந்தாலும் , ஆஸ்திரேலிய சென்று குடியேறினாலும் அவனுக்கு ஆன்மீக தேடல் இந்த மண்ணில் தான் இருக்கும். அவனுக்கு புனிதம் இந்த நாடு.

எப்படி ஆப்ரகாம் வழிதோன்றல்களால் உருவான மதங்களுக்கு பாலஸ்தீனம் , காசா , ஜெருசலேம் தானே புனித பூமி அது போல. ஆக ஆப்ரகாம் மதங்களில் சீமானுக்கு பிரச்சனை இல்லை - ஆனால் முருகன் வழிபாடு பிரிவினை தேடுகிறார்கள் என்றால் என்ன ஒரு கீழ்த்தரமான ஜென்மம் இந்த சீமான்?

யார் ஹிந்து என்று எளிமையான விளக்கம் கேட்டால்? இந்த இந்தியாவை புனிதமாக கருதும் யாரும் ஹிந்து தான். அனைத்து வழிப்பட்டு முறைகளையும் மதித்து நடந்து கொள்ளும் குணம் ஹிந்து. BJP சொல்வது இது தான் மதம் அல்ல விஷயம் இந்த மண் , அதற்கான புனிதம் அதுவே முக்கியம். அதனால் தான் சூபி இஸ்லாம் மக்களுக்கும் பிஜேபிக்கும் பிரச்சனை வருவதே இல்லை. ஆனால் ஜாகீர் நாயக் போன்ற சவூதி அரபிய கலாசாரத்தை இந்தியாவில் பரப்ப விரும்பும் வகாபிச இஸ்லாம் பரப்பும் நபர்களுக்கும் பிஜேபிக்கும் ஆகவே ஆகாது. (2016 சூபிகள் மாநாட்டை தொடக்கி வைத்தவர் மோடி என்பது நினைவில் இருக்கட்டும்)

சீமான் என்ற செபாஸ்டீன் ஒரு முட்டாள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

-மாரிதாஸ்
Read More