Monday, June 22, 2015

Keerthivasan

சைவ சித்தாந்த கேள்வி பதில்கள் - 1

சைவ சித்தாந்த கேள்வி பதில்கள் - 1

முகனூலில் திரு சரவணன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் வினா விடை பதிவுகளின் தொகுப்பு

 

1. பெரிய புராணத்தில் "உலகெலாம்" என்ற சொல் எத்தனை முறை வருகிறது? அது ஏன்?

விடை : சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் சொல்லும் 14 உலகங்களை குறிக்கும் வகையிலும், நடராஜப்பெருமான் எடுத்துக் கொடுத்த வகையில் 1 ம் ஆக, 15 இடங்களில் "உலகெலாம்" என்ற சொல் வருகிறது.





2. திருமந்திரம் எத்தனை தந்திரங்களை கொண்டது?

விடை :  9 தந்திரங்கள்.



3. "திருவாரூர் பெருமானே நமக்கு புறகு" என்று அவரை வணங்க மறுத்த நாயனார் யார்? என்ன காரணம்?

விடை : அடியார்களை வணங்காது இறைவனை வணங்க சென்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு, அருள் செய்த காரணத்தால் அந்த இறைவனும் நமக்கு புறகு.


 4. சிவபெருமானுக்கு தாழம்பூ வைத்து வழிபாடு நடக்கும் ஒரே கோயில் எது?

விடை : திருஉத்தரகோசமங்கை.


5. அனைத்து ஆகமங்களையும் கற்றறிந்தவர் என்று போற்றப்பட்டவர் யார்?

விடை : அருணந்தி சிவாசாரியார்.


6. தமிழில் தொல்காப்பியத்திற்கு மாற்றாக உருவாகி, நாளடைவில் வழக்கொழிந்து போன இலக்கண நூல் எது?.

விடை : வீர சோழியம்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :