சைவ சித்தாந்த கேள்வி பதில்கள் - 1
முகனூலில் திரு சரவணன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் வினா விடை பதிவுகளின் தொகுப்பு
1. பெரிய புராணத்தில் "உலகெலாம்" என்ற சொல் எத்தனை முறை வருகிறது? அது ஏன்?
விடை : சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் சொல்லும் 14 உலகங்களை குறிக்கும் வகையிலும், நடராஜப்பெருமான் எடுத்துக் கொடுத்த வகையில் 1 ம் ஆக, 15 இடங்களில் "உலகெலாம்" என்ற சொல் வருகிறது.2. திருமந்திரம் எத்தனை தந்திரங்களை கொண்டது?
விடை : 9 தந்திரங்கள்.3. "திருவாரூர் பெருமானே நமக்கு புறகு" என்று அவரை வணங்க மறுத்த நாயனார் யார்? என்ன காரணம்?
விடை : அடியார்களை வணங்காது இறைவனை வணங்க சென்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு, அருள் செய்த காரணத்தால் அந்த இறைவனும் நமக்கு புறகு.
4. சிவபெருமானுக்கு தாழம்பூ வைத்து வழிபாடு நடக்கும் ஒரே கோயில் எது?
விடை : திருஉத்தரகோசமங்கை.
5. அனைத்து ஆகமங்களையும் கற்றறிந்தவர் என்று போற்றப்பட்டவர் யார்?
விடை : அருணந்தி சிவாசாரியார்.
6. தமிழில் தொல்காப்பியத்திற்கு மாற்றாக உருவாகி, நாளடைவில் வழக்கொழிந்து போன இலக்கண நூல் எது?.
விடை : வீர சோழியம்.