நினைத்தேன் பகிர்கிறேன் - காமமும் கலாச்சார உடையும்...
எப்போதேல்லாம் உடையை பற்றி பேசுகிறோமோ
அப்போதெல்லாம் தவறாமல் இடம் பெறும் ஒரு கேள்வி 5 வயது சிறுமி எந்த உடையால்
கற்பழிக்கப்பட்டால்? அவள் என்ன பாவம் செய்தால் சும்மா பெண்களை குறை சொல்வதை
நிறுத்துங்கள் உங்கள் பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள்...
மேலே சொன்ன கேள்விக்கான பதிலை ஒரு பெண்ணான
டாக்டர் ஷாலினி என்கிற மனோதத்துவ மற்றும் இதில் நிபுணர் தரும் பதிலை இங்கு
கொடுக்கிறேன்...
ஷாலினி: நமது கலாச்சாரமான உடையில் செல்லும்
பெண்கள் சொல்வது அதில் இடை தெரியவில்லையா என்று... இடை தெரிகிறதே என்று மார்பகத்தை
காட்டும் உடைகளும் அங்களில் ஒட்டி அப்பட்டமாக காட்டும் உடைகளை அணிவது சரியா?
அலுவலகத்தில் யார் மீதோ இருக்கும் கோவத்தை வீட்டில் சம்பந்தமில்லாதவரிடம் எதிர்க்க
தகுதியில்லாத ஒருவரிடம் நாம் காட்டுகிறோம் அதே மனோ நிலையில்தான் ஒரு பெண்ணின்
அங்களில் ஏற்படும் எண்ணம் அதை நிறைவேற்ற முடியாத சூழலில் எதிர்க்க வழியில்லாத
அப்பாவி சிறுமிகளை பாதிக்கிறது. அதாவது ஒரு பெண் செய்த தவறுக்கு வேறு பெண் பலி.
இதில் இருக்கும் அர்த்தம் மிக அபத்தம் என்று
பலர் வாதிட கூடும் அதற்க்கு அந்த டாக்டர் சொல்லும் எடுத்துக்காட்டை கவனிக்க.
எதிர்க்கவே முடியாத ஒருவரிடம் ஏற்படும் கோவம் அடுத்தவர் மேலே அதாவது யார்
அப்பாவியோ எதிர்க்கவே திராணியில்லாதவரோ அவர் மீது அது திணிக்கப்படுகிறது. இந்த சூழலுக்கு
அவர் காரணமில்லை. சம்பந்தபட்டவரை எதிர்க்க துப்பில்லாமல் அப்பாவியிடம் இதை
வெளிபடுத்துவது என்பது கண்ணுக்கு தெரியும் ஒரு விசயம். இதே தான் இந்த
சம்பவங்களுக்கும் அடிப்படை என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார்.
என்னைவிட படிக்கும் உங்களை விட (ஒருவேளை இதை
படித்தீர்களானால் ;) ) இந்த துறையில் இருக்கும் ஒரு மருத்துவர் அதுவும் பெண்
சொல்வதை கூட நம்மால் சிந்திக்க முடியாது பிறகு? உடனே கொடி பிடிக்கனும், கோஷம்
போடனும், ஆணாதிக்கவாதி என்று தூற்றனும். இன்று மணிமேகலை போன்ற பெண்ணியவாதிகளை
பார்த்து பெண்களே முகம் சுளிக்கும் நிலை வந்ததற்கு கலாச்சாரத்தை கை கழுவுவதே
என்றால் ஏற்றுக் கொள்ளவா போகிறீர்கள்?
என்றும் அன்புடன்
கீர்த்திவாசன்