Saturday, January 24, 2015

Keerthivasan

ஞான ஆரண்யம் 1 - சற்காரிய வாதம்

சற்காரிய வாதம் : சற்காரிய வாதம் என்பது உள்ளதே தோன்றும், இல்லாது தோன்றாது என்னும் கொள்கையாகும்.

சத்=உள்ளது; காரியம்- தோன்றுவது.

உள்ளது தோன்றும் என்பதன் பொருள், முன்பு சூக்கும நிலையில் நுட்பமாய் விளங்காது நின்ற பொருள் பின் தூல நிலையில் பருமையாய்ப் புலப்படும்படி தோன்றி நிற்கும் என்பதாகும்.

எள்ளில் எண்ணெய் முன்பே நுட்பமாய் அடங்கியிருக்கிறது. எள்ளை ஆட்டும் பொழுது அது பருமையாய் விளங்கித் தோன்றுகிறது.
முன்பே சூக்குமமாய் இல்லாத பொருள் பின் எக்காலத்திலும் எவ்வகையிலும் விளங்கித் தோன்றாது.

முயலின் தலையிலும் பசுவினது கன்றின் தலையிலும் அவை பிறந்த போது கொம்பு இல்லை. ஆயினும் பசுக்கன்றின் தலையில் முன்பே கொம்பு சூக்குமமாய் இருந்தது. முயலின் தலையில் அஃது அவ்வாறு இல்லை. அதனாலேயே கன்றின் தலையில் பின்னர்க்கொம்பு தோன்றுகிறது. முயலுக்குக் கொம்பு என்றும் தோன்றுவதில்லை. இதனால், இல்லாதது எக்காலத்தும் தோன்றுவதில்லை; உள்ளதுதான் தோன்றும் என்பது புலனாகும்.
உள்பொருள்களுக்கு இரண்டு நிலைகள் உண்டு என்பதை அறியலாம். ஒன்று, நுட்பமாய்ப் புலப்படாமல் அடங்கியிருத்தல்.

இது காரண நிலை எனப்படும். மற்றது, பருமையாய் விளங்கித் தோன்றுதல். இது காரிய நிலை எனப்படும்.

ஒரு பொருள் காரண நிலையிலிருந்து காரிய நிலைக்கு வருதலே தோற்றம் எனப்படும். பின், காரிய நிலையிலிருந்து மீளக் காரண நிலையை அடைதலே அழிவு எனப்படும்.

எனவே பொருள் என்பது எக்காலத்தும் உள்ளதேயாகும். புலப்படாத அருவ நிலையிலிருந்து புலப்படும் உருவ நிலைக்கு வரும்போது தோன்றியது என்று கூறுகிறோம். அவ்வளவே.

இதுவே சற்காரிய வாதம் எனப்படுவது. சைவ சித்தாந்தம் இதன் அடிப்படையில்தான் அமைந்துள்ளது.

- கிருஷ்ணபரமாத்மா...
ஞான ஆரண்யம்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :