மஹாபாரதத்தின் விஞ்ஞான மகத்துவங்கள் பாகம் 7
மஹாபாரத்தை நாம் படிக்கும் போது அதில் மிக அதிநவீன, அதிபயங்கரமான ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதை பார்க்கலாம். அந்த ஆயுதங்களின் செயலாற்றலையும், அதை குறித்த வர்ணனையும் படிக்கையில் இவை வெறும் கற்பனையானவை என்று நம்மால் நிச்சயமாய் நிராகரிக்க முடியாது. இத்தகைய ஆயுதங்கள் பூமியில் தயாரிக்க பட்டதற்கான தடயங்கள் இல்லை, இவை பிரபஞ்ச சக்திகளால்தான் தந்திருக்க பட வேண்டும் என்பதை சென்ற பதிவில் பார்த்தோம்.
பல வகையான அஸ்திரங்களும் அதை செலுத்தும் கருவிகளும் மஹாபாரத்தில் சொல்லப்பட்டுள்ளன. இந்த அஸ்திரங்களை செலுத்தும் போது 'மந்த்ரா" எனும் கடவு சொல்லை ஏவுபவர் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த கடவு சொல், நாம் நவீன கணினி இயலில் பயன்படுத்தும் மறையாக்கம் (encrypted) செய்யப்பட்ட அமைப்பை விட மேம்பட்டதா, நவீனமானதாய் இருந்திருக்க வேண்டும். இவை "டெலிபதி" எனப்படும் எண்ணங்கள் மூலமாக தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட ஆற்றல் தன்மையை உண்டாக்குவதாக இருக்கலாம். நாம் இன்று விண்கலங்கள் மூலமாக இந்த பூமியை சுற்றி ஜி.பி.எஸ் எனப்படும் தொலை தொடர்பு வசதியை வைத்திருப்பது போல், நம்மை விட பல கோடி ஆண்டுகள் மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டுள்ள பிரபஞ்ச சக்திகள், அப்படி ஒரு மேம்பட்ட தொலைதொடர்பு வசதியை வைத்திருக்க வேண்டும். மேலும் உயிரியல் ரீதியாக ஒருவரின் மரபனு மூலக்கூறுகளை அடையாளம் கண்டு தாக்கும் தொழில்நுட்பமும் அவர்கள் வசம் இருந்திருக்க வேண்டும்.
சில அஸ்திரங்கள் ஏவப்பட்டால் சென்று பின் செலுத்தியவரிடமே திரும்ப வந்து சேர்கிறது. இதற்கு மிகச் சிறந்த தொழில்நுட்பம் இருந்தால்தான் சாத்தியம். அமேரிக்க மற்றும் ரஷ்யர்களிடம் இந்த மீண்டும் பயன்படுத்த கூடிய (Reusable) விண்கலங்களை நாம் பார்க்கிறோம். மஹாபாரதம் இதை ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தரித்துள்ளது.
மேலும் ஒரு அஸ்திரம் என்பது இன்று நாம் பயன்படுத்தும் ஏவுகனைகள் மட்டுமே என்று நினைத்து விட முடியாது. அவை மிகவும் மேம்பட்டவை. மேலும் அவை மிகச் சக்தி வாயந்த லேசர் கதிர்களாகவோ, காமா கதிர்களாகவோ கூட இருந்திருக்க வாய்ப்புள்ளது. அஸ்திரங்கள் தாக்குவதற்கு மட்டும் இல்லாமல், தற்காப்பிற்கும் பயன்படுகிறது. இது ஒரு வகையில் வல்லரசுகள் தீட்டிய "டெஸ்லா ஷீல்ட்" எனப்படும் அதிநவீன யுத்தங்களில் பயன்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை போல் செயல்பாடுகளை கொண்டதாக இருக்க வாய்ப்புள்ளது. "டெஸ்லா ஷீல்ட்" எனும் இந்த திட்டத்தின் படி, உள்ளே வரும் பல ஏவுகனைகளை, ஒரு பெரும் மின்சார கதிரின் மூலமாக ஆதாரமில்லாமல் அழித்து விடலாம்.
மஹாபாரத போரில் பல கோடி மக்கள் எப்படி வெறும் பதினெட்டு நாட்களில் இறந்திருக்க கூடும் என்று பலர் வியந்திருக்கலாம். மிக சக்தி வாய்ந்த ஆயுதங்களின் பயன்பாடு இல்லாமல் இது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைய அணு ஆயுதங்களை விட மஹாபாரதத்தில் மிக சக்திவாய்ந்த ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டதற்கான சாத்திய கூறுகள் அதிகம். மஹாபாரதத்தில் அணு ஆயுதங்களா ? என்று பலர் இதை சந்தேகிக்கலாம். ஆனால் இதை புகழ்பெற்ற விஞ்ஞானியும், அணு இயல் மேதையுமான, திரு ஓப்பன் ஹேமரே முன்மொழிந்திருக்கிறார் என்றால் ஆச்சரியம் தானே ?
நம் முன்னோர்களின் அதி நவீன விஞ்ஞானத்தை நாம் சொன்னால் ஒத்துக் கொள்ளாத பலர், நம்மை சாராத ஒரு அமேரிக்க விஞ்ஞானி சொல்கையில் வாய் பிளப்பார்களே ?
அவர் என்ன சொன்னார் என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
நன்றி: https://www.facebook.com/enlightened.master.3