இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு என்பது இன்றைய வேலை வாய்ப்புகள்
அதிகம் இருக்கும் நிலையில், பின் தங்கியவர்களை மேலும் பின் தங்க செய்கிறது.
அவர்களின் தரத்தை வெகுவாக குறைக்கிறது. முன்னேறிய சமூகங்களோ, இட
ஒதுக்கீடு இல்லாத நிலையில், அதிகமாக போராட வேண்டி இருக்கிறது.
இந்த போராட்டத்தின் விளைவாக அவர்கள் மேலும் செம்மை அடைகிறார்கள். அதனால்
அவர்கள் மேலும் முன்னேறுகிறார்கள். உலகலாவிய வேலை வாய்ப்புகளும்
கிடைக்கும் இன்றைய நிலையில், இட ஒதுக்கீடு எனும் சலுகைக்கு ஆசைப்பட்டு
உழைப்பும், தரமும் குறைந்து போகிறது.
இட ஒதுக்கீடு சாதிகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது. அதிலும் இட ஒதுக்கீட்டின் அமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லாதது போல் அரசியல் சார்ந்ததாகவும், ஓட்டு வங்கியின் அடிப்படையாகவும் இருக்கிறது.
தவிர சாதியை அழிப்பது என்று நினைப்பது இன்றைய நிலையில் இயலாத ஒன்று. அப்படி முனைவதால் அதன் கட்டுகள் மேலும் இறுக வாய்ப்பிறுக்குகிறது. சாதியை ஒழிப்பதற்கு பதிலாக சாதி வேற்றுமைகளை நாம் ஒழிக்க முயல வேண்டும். அதற்கு ஒரே வழி "ஹிந்து" என்கிற அடையாளத்தை முன்னிலைப் படுத்துவதுதான்.
ஜாதி பெயரை மாற்றி இட ஒதுக்கீடு கோரும் பலரை பார்த்திருக்கிறேன். அதே போல் ஜாதி பெயரை மாற்றி சொல்லி அது வெளி சமூகத்தில் தங்களை உயர்த்தி கொள்வதாய் நினைப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.
எத்தனை மானங்கெட்டதனம் இது ? என்ன பிழைப்பு இது ?
ஒவ்வொரு ஜாதி கட்சிகளும் தங்களை இன்னும் தாழ்ந்தவனாக காட்ட வேண்டும் என்றும் சலுகைகள் பெற வேண்டும் என்றும் முயல்கின்றன.
கூலி வேலைக்கு கூட இன்று 500 ரூபாய் கிடைக்கும் பட்சத்தில், குழந்தைகளை நல்ல பள்ளிக் கூடங்களில் சேர்ப்பது என்பது ஒன்றும் இயலாதது அல்ல. நம் குழந்தைகளுக்கு போராடும் குணத்தை படிப்பில் கொண்டு வர நாம் முயல வேண்டும், ஆனால், பொது சொத்துக்களை சேதாரம் செய்து போராடும் குணத்தைதான் நாம் வளர்த்து வருகிறோம்.
முடிந்தவரை யாரிடமும் உங்கள் ஜாதியை முன்னிலை படுத்தாதீர்கள்.
இன்றைய சூழ்நிலையில் ஒருவரின் குணங்களுக்கு அவரின் சுற்றுப்புறமும், படிப்பும், குடும்பமும், பழக்க வழக்கங்களும் தான் காரணமாக இருக்கிறது. ஜாதிகள் நிச்சயமாக காரணம் இல்லை. இது நமக்குள் பதிந்துள்ள ஒரு வன்மம், நமக்கு ஒருவரை பிடிக்காத நேரங்களில் அவரின் ஜாதி தோண்டி எடுக்கப்பட்டு அடையாளம் காணப்படுகிறது.
உங்கள் ஜாதிக்கு இட ஒதுக்கீடு இருக்கும் பட்சத்தில் மட்டும் உங்கள் ஜாதியை அடையாளத்துக்காக கொடுங்கள். நீங்கள் பொருளாதாரத்தில் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதை கோராதீர்கள். அது பொருளாதாரத்தில் தாழ்ந்த வேறு ஒருவருக்கு பயன்படட்டும்.
இட ஒதுக்கீடு சாதிகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது. அதிலும் இட ஒதுக்கீட்டின் அமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லாதது போல் அரசியல் சார்ந்ததாகவும், ஓட்டு வங்கியின் அடிப்படையாகவும் இருக்கிறது.
தவிர சாதியை அழிப்பது என்று நினைப்பது இன்றைய நிலையில் இயலாத ஒன்று. அப்படி முனைவதால் அதன் கட்டுகள் மேலும் இறுக வாய்ப்பிறுக்குகிறது. சாதியை ஒழிப்பதற்கு பதிலாக சாதி வேற்றுமைகளை நாம் ஒழிக்க முயல வேண்டும். அதற்கு ஒரே வழி "ஹிந்து" என்கிற அடையாளத்தை முன்னிலைப் படுத்துவதுதான்.
ஜாதி பெயரை மாற்றி இட ஒதுக்கீடு கோரும் பலரை பார்த்திருக்கிறேன். அதே போல் ஜாதி பெயரை மாற்றி சொல்லி அது வெளி சமூகத்தில் தங்களை உயர்த்தி கொள்வதாய் நினைப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.
எத்தனை மானங்கெட்டதனம் இது ? என்ன பிழைப்பு இது ?
ஒவ்வொரு ஜாதி கட்சிகளும் தங்களை இன்னும் தாழ்ந்தவனாக காட்ட வேண்டும் என்றும் சலுகைகள் பெற வேண்டும் என்றும் முயல்கின்றன.
கூலி வேலைக்கு கூட இன்று 500 ரூபாய் கிடைக்கும் பட்சத்தில், குழந்தைகளை நல்ல பள்ளிக் கூடங்களில் சேர்ப்பது என்பது ஒன்றும் இயலாதது அல்ல. நம் குழந்தைகளுக்கு போராடும் குணத்தை படிப்பில் கொண்டு வர நாம் முயல வேண்டும், ஆனால், பொது சொத்துக்களை சேதாரம் செய்து போராடும் குணத்தைதான் நாம் வளர்த்து வருகிறோம்.
முடிந்தவரை யாரிடமும் உங்கள் ஜாதியை முன்னிலை படுத்தாதீர்கள்.
இன்றைய சூழ்நிலையில் ஒருவரின் குணங்களுக்கு அவரின் சுற்றுப்புறமும், படிப்பும், குடும்பமும், பழக்க வழக்கங்களும் தான் காரணமாக இருக்கிறது. ஜாதிகள் நிச்சயமாக காரணம் இல்லை. இது நமக்குள் பதிந்துள்ள ஒரு வன்மம், நமக்கு ஒருவரை பிடிக்காத நேரங்களில் அவரின் ஜாதி தோண்டி எடுக்கப்பட்டு அடையாளம் காணப்படுகிறது.
உங்கள் ஜாதிக்கு இட ஒதுக்கீடு இருக்கும் பட்சத்தில் மட்டும் உங்கள் ஜாதியை அடையாளத்துக்காக கொடுங்கள். நீங்கள் பொருளாதாரத்தில் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதை கோராதீர்கள். அது பொருளாதாரத்தில் தாழ்ந்த வேறு ஒருவருக்கு பயன்படட்டும்.