Tuesday, October 15, 2013

Keerthivasan

பகவத்கீதா

உடலுக்கு ஏற்படும் குளிர் வெப்பம் ,இன்பம் துன்பம் இவைகளை பொறுத்துக்கொள்

பகவத்கீதா 2.14-2.15

 

அர்ஜுனா பொறிகளும் புலன்களும் இணைவதால் குளிர்,வெப்பம்,இன்பம் துன்பம் இவைகளை உணரமுடிகிறது.இவைகள் இயல்பானது.இதை பொறுத்துக்கொள்(2.14)

கண்,காது,நாக்கு,மூக்கு,தோல் இவைகள் ஐந்துபொறிகள்.
இந்த 5 பொறிகளுக்கும் தனித்தனி மூளைநரம்புமையங்கள் உள்ளன அவைகள் 5 புலன்கள்.

ஒருவனுக்கு கண் இருக்கலாம்.ஆனால் அந்த கண் மூளையோடு இணைக்கப்படும் நரம்புமண்டலம் வேலை செய்யாவிட்டால்,அவனால் பார்க்க முடியாது.அதே போல் ஒவ்வொரு பொறிக்கும் பின்னால் தனித்தனி மூளைமையங்கள் உள்ளன.

இந்த பொறிகளுடன் புலன்கள் இணைவதால் தான் ஒரு பொருளை பார்க்க முடிகிறது,கேட்க முடிகிறது,உணரமுடிகிறது.

வானத்திலிருந்து ஒரு கடவுள் சூடான காற்றை அனுப்புகிறார்,அதனால் வெப்பம் உருவாகிறது என்றோ,ஒரு சாத்தான் இருந்துகொண்டு சூட்டை உருவாக்குகிறான் என்ற கட்டுக்கதைகளோ இங்கு இல்லை.

வெப்பம்,குளிர்,இன்ப,துன்பம் இவைகள் இயல்பானது. இவைகளை பொறுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு பொறுத்துக்கொள்ளும் போது திதிக்ஷை அல்லது பொறை என்ற பண்புநலன் உருவாகிறது.

சூட்டிலிருந்து தப்பிப்பதற்காக ஏ.சி அறைகளில் தங்குகிறோம்.இதனால் உடல் மேலும் பலவீனப்படுகிறது.இயற்கையை அனுசரித்து செல்லும் இயல்பை அந்த உடல் இழந்துவிடுகிறது.

அன்டார்டிகா போன்ற குளிர் தேசங்களிலும்,பாலைவன பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் உடல் இயற்கையை அனுசரித்து செல்லும் படி அமைகிறது.

இந்த இயற்கை மாற்றங்களை பொறுத்துக்கொண்டு,இதனால் வரும் இன்ப துன்பங்களை சமமாக நினைப்பவன் தீரன்.அவன் சாகாநிலையை அடைய தகுதியானவனாகிறான்.(2.15)

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :