ஆதிசங்கரரின் - பஜகோவிந்தம் !
நான்காவது ஸ்லோகம் - வாழ்க்கையே நிலையில்லாதது !
நளிநீ தளகத ஜலம் அதிதரளம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம் |
வித்தி வ்யாத்யபிமாந க்ரஸ்தம்
லோகம் ஸோகஹதம் ச ஸமஸ்தம் ||
நளிநீ தளகத ஜலம் - தாமரை இலைமீதுள்ள தண்ணீர்
அதிதரளம் - மிகவும் சஞ்சலமானது
ஜீவிதம் - வாழ்க்கையானது
அதிசய சபலம் - மிகவும் சஞ்சலமானது
வ்யாத்யபிமாந க்ரஸ்தம் - நோய் , கர்வம் என்பவைகளால் விழுங்கப்பட்டதாகவும்
ஸோகஹதம் ச - வருத்தத்தால் தாக்கப்பட்டதாகவும்
தாமரை இலைமீது ஒட்டாமல் அசைந்தோடிக் கொண்டிருக்கும் நீர் போல மனித வாழ்க்கை நிலையற்றது . உலகில் எங்குப் பார்த்தாலும் நோயும் செருக்கும்தான் காணப்படுகிறது . எவனும் தான் சுகமாக இருப்பதாக நினைப்பதில்லை . எனவே நிலையற்ற இந்த உலக வாழ்க்கைக்காக அலையாதே .
இங்கு சங்கரர் பொதுவாக வாழ்க்கையின் தன்மையைக் கூறுகிறார் . தாமரை இலையின் மேலுள்ளத் நீர்த்துளியானது துள்ளி , அதிர்ந்து , நிலையற்று அலைவது போல் மனிதனின் உள்ளம் அலைபாய்கிறது . சபலமே அதன் நிரந்தரப் பான்மை . நோயால் பீடிக்கப்பட்ட உடலும் , பற்றுகளால் பீடிக்கப்பட்ட மனமும் எல்லா வகையிலும் துயரத்தில் மூழ்கி நிற்கிறது .
பற்றுகளாலும் அபிமானத்தாலும் நாம் அடைவது சுகம் போல் காட்டினாலும் உண்மையில் சுகமன்று. கவலையும் துயரமுமே ! இவற்றிலிருந்து நீங்கி பகவானை சரணடைவோமாக என்பது சங்கரர் வாதம் .
தொகுப்பு Prema Seetaraman
நான்காவது ஸ்லோகம் - வாழ்க்கையே நிலையில்லாதது !
நளிநீ தளகத ஜலம் அதிதரளம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம் |
வித்தி வ்யாத்யபிமாந க்ரஸ்தம்
லோகம் ஸோகஹதம் ச ஸமஸ்தம் ||
நளிநீ தளகத ஜலம் - தாமரை இலைமீதுள்ள தண்ணீர்
அதிதரளம் - மிகவும் சஞ்சலமானது
ஜீவிதம் - வாழ்க்கையானது
அதிசய சபலம் - மிகவும் சஞ்சலமானது
வ்யாத்யபிமாந க்ரஸ்தம் - நோய் , கர்வம் என்பவைகளால் விழுங்கப்பட்டதாகவும்
ஸோகஹதம் ச - வருத்தத்தால் தாக்கப்பட்டதாகவும்
தாமரை இலைமீது ஒட்டாமல் அசைந்தோடிக் கொண்டிருக்கும் நீர் போல மனித வாழ்க்கை நிலையற்றது . உலகில் எங்குப் பார்த்தாலும் நோயும் செருக்கும்தான் காணப்படுகிறது . எவனும் தான் சுகமாக இருப்பதாக நினைப்பதில்லை . எனவே நிலையற்ற இந்த உலக வாழ்க்கைக்காக அலையாதே .
இங்கு சங்கரர் பொதுவாக வாழ்க்கையின் தன்மையைக் கூறுகிறார் . தாமரை இலையின் மேலுள்ளத் நீர்த்துளியானது துள்ளி , அதிர்ந்து , நிலையற்று அலைவது போல் மனிதனின் உள்ளம் அலைபாய்கிறது . சபலமே அதன் நிரந்தரப் பான்மை . நோயால் பீடிக்கப்பட்ட உடலும் , பற்றுகளால் பீடிக்கப்பட்ட மனமும் எல்லா வகையிலும் துயரத்தில் மூழ்கி நிற்கிறது .
பற்றுகளாலும் அபிமானத்தாலும் நாம் அடைவது சுகம் போல் காட்டினாலும் உண்மையில் சுகமன்று. கவலையும் துயரமுமே ! இவற்றிலிருந்து நீங்கி பகவானை சரணடைவோமாக என்பது சங்கரர் வாதம் .
தொகுப்பு Prema Seetaraman