நினைத்தேன் பகிர்கிறேன் - பலவீனம்
கர்ணன் கௌரவர்களுக்காக தேசம் முழுவதும் தன் படைகளை கொண்டு பிடித்தான்
இதன் மூலம் கௌரவர்களுக்கு செல்வமும் பலமும் சேற்பது அவன் நோக்கம் ஆனால்
பாண்டவர்கள்?
திவ்ய அஸ்திரங்களை பெறும் நோக்கத்தோடு அதில் மட்டும் கவனம்
செலுத்தினான் அர்ஜீனன்
தன் சகோதரன் அனுமனை சந்தித்து தன் வலிமை அதிகம் பெற ஆசிபெற்றான்
ஒருவேளை மறுபடியும் ஒருமுறை பகடை விளையாடும் தருணம் ஏற்படுமாயின்
அதில் தான் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்க்காக அதை முறையாக காந்தர்வாவிடமும்,
சித்ரசேனாவிடமும் பயின்றான் அதோடு ரிஷிகளையும் முனிவர்களையும் சந்தித்து போதனைகளை
பெற்று தன்னை மெறுகேற்றிக் கொண்டான்...
எதற்க்கு இந்த கதை? கர்ணன் பலத்தை பெருக்க செய்த காரியம் பல இழப்புகளை
உள்ளடக்கியது. வேறு ஒரு நாட்டின் செல்வத்தை அபகரிக்க அவன் கொண்ட போரில் கௌரவர்கள்
ஏற்கனவே கொண்டிருந்த செல்வங்களையும் படை பலத்தையும் வீணடித்தான் ஆனால் பாண்டவர்கள்
இருப்பதை இழக்காமல் தங்களை மேலும் மெறுகேற்றிக் கொண்டார்கள்
உங்கள் பலவீனம் என்ன என்பதை அறிந்து அதை பலமாக மாற்ற முயற்ச்சியுங்கள்