எல்லாரும் இறைவனை அடைய வேண்டும் என்ற நோக்கில்... தியானம் மற்றும் யோகா என்ற பெயரில் எதை எதையோ செய்து கொண்டு இருகின்றனர். செய்வது நல்லதா இல்லையா என்பது இல்லை அது என்ன எத்தனாவது நிலை என்று கூட அறியாமல் செய்பவர்களே இங்கு அதிகம்.
இது எங்கிருந்து ஆரம்பிகிறது என்று பாப்போம்......ஆன்மிகத்தில் இதனைஞானிகள் நான்கு வகைகளாக பிரிகின்றனர்.
ஆம்.....
அவைகள் சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம்
இவைகள் ஒவ்வொன்றும் நான்கு நிலைகளாக பிரிகின்றன.........
சரியையில் சரியை,
சரியையில் கிரியை,
சரியையில் யோகம்,
சரியையில் ஞானம்.
கிரியையில் சரியை,
கிரியையில் கிரியை,
கிரியையில் யோகம்,
கிரியையில் ஞானம்.
யோகத்தில் சரியை
யோகத்தில் கிரியை
யோகத்தில் யோகம்
யோகத்தில் ஞானம்
ஞானத்தில் சரியை
ஞானத்தில் கிரியை
ஞானத்தில் யோகம்
ஞானத்தில் ஞானம்
சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் என்ற ஒவ்வொரு நான்கு நிலையம் என்ன?
சரியை என்பது.....சுத்தமாக இருப்பது மற்றும் ஆலயங்களுக்கு செல்வது.
கிரியை என்பது..... பூசை மற்றும் சில மந்திரங்கள் சொல்வது மேலும் கையினால் சில முத்திரைகள் போன்றவற்றை செய்வது.
யோகம் என்பது..... உடலால் செய்யும் சில யோகா முறைகள் அதாவது ஆசனங்கள் செய்வது.
ஞானம் என்பது.....முதல் மூன்றிலும் செய்வது என்ன வினையை தரும் மேலும் இதை செய்வதன் மூலம் என்ன பயன் என்று உணர்ந்து செய்வது. சுருக்கமாக சொல்வதானால் எது உயர்ந்தது மற்றும் முடிவானது என்பதை தெரிந்து செய்வது.
ஆனால் இப்படி ஆரம்பித்து 16 நிலைகளும் கடபதற்கு எதனை பிறவிகள்நமக்கு வேண்டுமோ என நமக்கு தெரியாது.
ஆக்கம்: கிருஷ்ண பரமாத்மா