கடமைகள் நிலையான முக்திக்காக பலன்களை எதிர்பாராது, அவற்றை தியாகம் செய்து ஆற்ற வேண்டும் எனில், ஏன் வேதம் போன்ற நூல்கள் உல்க இன்பங்கள், சுகங்களைப் பெற வழிகளைக் கூறுகின்றன?
பெரும்பான்மையான மக்கள் தெளிவு பெறவில்லை, ஞானத்தைப் பெற்றிருக்கவில்லை! புலன், உலகியல் இன்பங்களில் மூழ்கித் திளைத்திருப்பவர்களுக்கு திடீரென கடமை, கடமையின் பலன்களை தியாகம் செய்து பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது மிகவும் சிரமம்.
அவ்வகையானவர்களுக்கு கடமையின் தத்துவத்தையும் தியாக குணத்தையும் வளர்க்க பயன்படும் இடைப்பட்ட ஒரு கருவியாக இருப்பதே இந்நூல்களில் உள்ள முறைகள்.
வேதத்தில் உள்ள கருத்துக்களை எவ்வாறு ஒருவர் உள்வாங்கி செயலாற்ற வேண்டும்?
வேதங்களில் உள்ள கருத்துக்களை அப்படியே உள்வாங்கி, இப்பிறப்பு, மறுபிறப்பிற்காக, உலகியல் மற்றும் புலன் இன்பங்களுக்காக பின்பற்றுவது நிலையான பலன்களைத் தராது. அவை தற்காலிக பலன்களை மட்டுமே நல்கும்!
மலரைப் பறித்து உண்ண முற்படுவது உசிதமா, இல்லை காத்திருந்து பழமான உடன் உண்ண முற்படுவது உசிதமா?
இனிமையான பழத்தை உண்ணவே அனைவரும் விரும்புவர், உடனே உண்ண வேண்டும் என்ற எண்ணம் கொண்டு மலரைக் கடித்து உண்ணுதல் மூடத்தனமாகும். காவியங்களில் கூறியுள்ளபடி கடமைகள் அனைத்தையும் செவ்வனே செய்து இறைவனுக்கு அர்ப்பணித்தலே வேதங்களின் மூல குறிக்கோள்.
தன் கடமையை செவ்வனே ஆற்றுபவனை பரமாத்மா நிலையான முக்தி என்னும் பாதையில் இட்டுச் செல்கிறார்.
ஆக்கம்: விஷ்வலிங்க சூர்யா
பெரும்பான்மையான மக்கள் தெளிவு பெறவில்லை, ஞானத்தைப் பெற்றிருக்கவில்லை! புலன், உலகியல் இன்பங்களில் மூழ்கித் திளைத்திருப்பவர்களுக்கு திடீரென கடமை, கடமையின் பலன்களை தியாகம் செய்து பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது மிகவும் சிரமம்.
அவ்வகையானவர்களுக்கு கடமையின் தத்துவத்தையும் தியாக குணத்தையும் வளர்க்க பயன்படும் இடைப்பட்ட ஒரு கருவியாக இருப்பதே இந்நூல்களில் உள்ள முறைகள்.
வேதத்தில் உள்ள கருத்துக்களை எவ்வாறு ஒருவர் உள்வாங்கி செயலாற்ற வேண்டும்?
வேதங்களில் உள்ள கருத்துக்களை அப்படியே உள்வாங்கி, இப்பிறப்பு, மறுபிறப்பிற்காக, உலகியல் மற்றும் புலன் இன்பங்களுக்காக பின்பற்றுவது நிலையான பலன்களைத் தராது. அவை தற்காலிக பலன்களை மட்டுமே நல்கும்!
மலரைப் பறித்து உண்ண முற்படுவது உசிதமா, இல்லை காத்திருந்து பழமான உடன் உண்ண முற்படுவது உசிதமா?
இனிமையான பழத்தை உண்ணவே அனைவரும் விரும்புவர், உடனே உண்ண வேண்டும் என்ற எண்ணம் கொண்டு மலரைக் கடித்து உண்ணுதல் மூடத்தனமாகும். காவியங்களில் கூறியுள்ளபடி கடமைகள் அனைத்தையும் செவ்வனே செய்து இறைவனுக்கு அர்ப்பணித்தலே வேதங்களின் மூல குறிக்கோள்.
தன் கடமையை செவ்வனே ஆற்றுபவனை பரமாத்மா நிலையான முக்தி என்னும் பாதையில் இட்டுச் செல்கிறார்.
ஆக்கம்: விஷ்வலிங்க சூர்யா