கற்றறிந்த ஆன்மீக அறிவை ஒருவர் எப்போது இழக்கிறார்?
ஆசை அல்லது காமம் ஒரு மனிதனை ஆனிமீகப் பாதையில் பயணிப்பதைத் தடுக்கிறது. நெருப்பு எரிவதை புகை சூழ்ந்து தடுக்கிறது, அழுக்கு படிந்த கண்ணாடி அதன் பிரதிபலிப்பு தன்மையைக் குறைக்கிறது, கருவை கருப்பை சூழ்ந்து தன்னுள்ளேயே வைத்திருக்கிறது. அதைப் போல சரி - தவறு எதுவென்று மனிதனின் சிந்திக்கும் திறனை, ஆசை சூழ்ந்து மட்டுப்படுத்துகிறது.
இந்த மூன்று எடுத்துக் காட்டுகளும் மூன்று விதமான மனிதர்கள் கொண்டிருக்கும் ஆசைகளுடன் ஒப்பிடலாம்.
அதாவது, நெருப்பைச் சூழ்ந்திருக்கும் புகையை சற்று வேகமான காற்று அப்புறப்படுத்தி தீ எரிவதற்கு வழி வகுக்கும், அதைப் போல சிறப்பான மனிதர்கள் எளிதாக ஆசையை அடக்கி நல்வழிப்படலாம்.
தூசு படிந்த கண்ணாடியைச் சுத்தப்படுத்த சற்று முயற்சி அவசியம், அதைப் போல சாதாரண நிலையில் உள்ள மனிதர்கள் சற்று அதிகமான முயற்சியினால் ஆசையினை அடக்கி நல்வழிப்படலாம்.
கீழான நிலையில் இருக்கும் மக்களோ ஆசையை அடக்குவது கடினம். ஒரு கருவானது கருப்பையிலிந்து தப்பிக்க இயலாது. அதைப் போல் தான் இந்த நிலை மக்களும்.
இந்த மூன்று நிலைகளில் உள்ள மக்களும் இறைவனை தியானிப்பது மூலமாக ஆசை அல்லது காமத்தினை கட்டுக்குள் கொண்டு வர இயலும்.
தவறான பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒருவர் எதோ ஒரு வகையில் இறை பக்தியை வளர்த்துக் கொண்டால் என்ன நடக்கும்?
இறைவனின் மேல் அவர் மனத்தைத் திருப்பியவுடன் அவர் தனது தவறான பழக்கவழக்கங்களில் இருந்து மெது மெதுவாக திருந்தத் தொடங்குகிறார். பரமாத்மாவிடம் மனதைச் செலுத்துவதன் மூலம் மனத்தில் உள்ள எதிர்மறை, தீய எண்னங்களில் இருந்து மாற்றம் கிடைத்து நல்ல எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். இதனால் நல்ல எண்னங்கள் பெற்று சாத்வீக எண்ணம் நிரம்பி நல்ல செயல்களைச் செய்பவராகிறார். அதனால் அவரது வாழ்வும் சோபிக்கிறது.
ஆக்கம்: விஷ்வலிங்க சூர்யா
ஆசை அல்லது காமம் ஒரு மனிதனை ஆனிமீகப் பாதையில் பயணிப்பதைத் தடுக்கிறது. நெருப்பு எரிவதை புகை சூழ்ந்து தடுக்கிறது, அழுக்கு படிந்த கண்ணாடி அதன் பிரதிபலிப்பு தன்மையைக் குறைக்கிறது, கருவை கருப்பை சூழ்ந்து தன்னுள்ளேயே வைத்திருக்கிறது. அதைப் போல சரி - தவறு எதுவென்று மனிதனின் சிந்திக்கும் திறனை, ஆசை சூழ்ந்து மட்டுப்படுத்துகிறது.
இந்த மூன்று எடுத்துக் காட்டுகளும் மூன்று விதமான மனிதர்கள் கொண்டிருக்கும் ஆசைகளுடன் ஒப்பிடலாம்.
அதாவது, நெருப்பைச் சூழ்ந்திருக்கும் புகையை சற்று வேகமான காற்று அப்புறப்படுத்தி தீ எரிவதற்கு வழி வகுக்கும், அதைப் போல சிறப்பான மனிதர்கள் எளிதாக ஆசையை அடக்கி நல்வழிப்படலாம்.
தூசு படிந்த கண்ணாடியைச் சுத்தப்படுத்த சற்று முயற்சி அவசியம், அதைப் போல சாதாரண நிலையில் உள்ள மனிதர்கள் சற்று அதிகமான முயற்சியினால் ஆசையினை அடக்கி நல்வழிப்படலாம்.
கீழான நிலையில் இருக்கும் மக்களோ ஆசையை அடக்குவது கடினம். ஒரு கருவானது கருப்பையிலிந்து தப்பிக்க இயலாது. அதைப் போல் தான் இந்த நிலை மக்களும்.
இந்த மூன்று நிலைகளில் உள்ள மக்களும் இறைவனை தியானிப்பது மூலமாக ஆசை அல்லது காமத்தினை கட்டுக்குள் கொண்டு வர இயலும்.
தவறான பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒருவர் எதோ ஒரு வகையில் இறை பக்தியை வளர்த்துக் கொண்டால் என்ன நடக்கும்?
இறைவனின் மேல் அவர் மனத்தைத் திருப்பியவுடன் அவர் தனது தவறான பழக்கவழக்கங்களில் இருந்து மெது மெதுவாக திருந்தத் தொடங்குகிறார். பரமாத்மாவிடம் மனதைச் செலுத்துவதன் மூலம் மனத்தில் உள்ள எதிர்மறை, தீய எண்னங்களில் இருந்து மாற்றம் கிடைத்து நல்ல எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். இதனால் நல்ல எண்னங்கள் பெற்று சாத்வீக எண்ணம் நிரம்பி நல்ல செயல்களைச் செய்பவராகிறார். அதனால் அவரது வாழ்வும் சோபிக்கிறது.
ஆக்கம்: விஷ்வலிங்க சூர்யா