Monday, January 12, 2015

Keerthivasan

கீதையின் முத்துக்கள் - 7

குற்றமான செயல்கள் ஒருவர் செய்யக் கூடாது என்ற எண்ணம் கொண்டிருந்தாலும் என்ன காரணத்தினால் அவர் தவறிழைக்க நேர்கிறது?

காரணம்: ஆசை.

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சல்யம் ஆகிய ஆறுகுணங்கள் மனிதனுக்குச் சத்ருக்கள் ஆகும். தமிழில் ஆசை அல்லது பேராசை, கோபம், பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, ஏற்றதாழ்வு மனப்பான்மை, வஞ்சகம் என்று பொருள் கொள்ளலாம். இந்த ஆறில் தலையான சத்ரு ஆசையே!

தவறை திரும்பத் திரும்பச் செய்யாமல் இருக்க ஆசையை ஒழிக்க அல்லது அடக்க வேண்டும். படித்தவர்கள், சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட ஆசையை ஆடக்க இயலாது அவமானப் பட நேர்கிறது.

ஆசை நிரந்தரமாகப் பூர்த்தி அடைவதில்லை என்றும். உதாரணமாக விலை உயர்ந்த ஆடை ஒன்றினை வாங்கி அணிய விரும்புபவர் அதை வாங்கி உடுத்திய பிறகும் அதனால் நிரந்தரமாக சமாதானம் அடைவதில்லை. சிறிது நாள் கழித்து அவ்வாசை மீண்டும் தலை தூக்கும்.

இது மண்ணாசை, பணம், சொத்து, உணவு, பெண்ணாசை என்று சகலத்திற்கும் பொருந்தும்.

ஆக்கம்: விஷ்வலிங்க சூர்யா

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :