வேதங்களின் சாரமாக உள்ள தத்துவப்
பொக்கிஷமாக உபநிஷதங்கள் சொல்லப்படுகின்றன! ஆனால் உபநிஷதங்களைப் படித்துப் பார்க்கிற
பொழுது அவைகளுக்கு என்று தனிப்பட்ட ஒரு தன்மை இருப்பது தெரிய வரும் !!
வேதங்களில் கடவுளரைப் பற்றி,
விஞ்ஞானம் பற்றி, மந்திரங்கள் பற்றி, இயற்கையைப் பற்றி ஏன் மருத்துவம் பற்றிக் கூட இப்படிப் பலப்பல வர்ணனைகளும்
நிறைந்திருக்கும்! ஆனால் உபநிஷதங்கள் அப்படியல்ல!! அவை தத்துவார்த்த ரீதியில்
ஞானம் பெற முயலும் முக்தியடைய விழையும் மனிதனுக்கு செல்ல வேண்டிய
பாதையைக் காட்டும் கருத்துப் பெட்டகமாகவே உள்ளன!!
எண்ணிக்கையில் 108 உபநிஷதங்கள்
இருப்பதாகக் கணக்கில் கொள்ளப்பட்டாலும் கூட
14 உபநிஷதங்களே அவற்றில் சிறப்பாகக் கொள்ளப்படுகின்றன!
இதன் காரணம் வெளிப்படை ! இவற்றில் உள்ள தத்துவச் செறிவு தான் அதன் காரணம்
என்று கொள்ளலாம்! இன்னமும் அவற்றில் 10
உபநிஷதங்களுக்கு மட்டுமே ஆதிசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார்! அந்தப் பத்து உபநிஷதங்களுமே மிகச்
சிறந்த தத்துவ செறிவுள்ள நூல்கள் தாம்!!
அவை ஈசாவாஸ்ய. கேன, கட, பிரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்ரீய, சாந்தோக்ய மற்றும்
ப்ரஹதாரண்ய உபநிஷதங்கள் ஆகும்!!
ஆக்கம்: துரோணாச்சாரியார்