Saturday, May 23, 2015

Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 9 – ஹிந்து மதம் ‘காம சாஸ்திரமா?’

ஒரு தத்வார்த்த பயணம் – 9 – ஹிந்து மதம் ‘காம சாஸ்திரமா?’

ஹிந்து மதம் ‘காம சாஸ்திரமா?’



ஹிந்து மதமே ஒரு காமசாஸ்திரமாக வேற்று மதத்தவர்களாலும், போலிப் பகுத்தறிவாளர்களாலும் வர்ணிக்கப்படுகிறது! இது உண்மையா என்பது பற்றிக் காண்போம்!!

         ஹிந்து ஆலய கோபுரங்களில் காமசாஸ்திரத்தை எடுத்துச் சொல்லும் சிலைகள் உள்ளனவே?? சரி ஏன் அவை உள்ளன?? கோவிலுக்குள் செல்லும் முன்னால் ஒருவன் கோபுரத்துக்குள் நுழையும் முன்பே அந்தக் காம உணர்வையெல்லாம் துடைத்து விட்டு உள்ளே நுழைய வேண்டும் என்பதையே அது மறைமுகமாக வலியுறுத்துகிறது!!

       மாற்றபடி புராணக்கதைகள் எல்லாமே காமம் கலந்து உள்ளதாக பொய்யாக வர்ணிக்கப்படுகிறது!! பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ ஆரம்பிக்கும் பொழுதிலிருந்தே ஹிந்து மதத்தில் காமம் என்பது இருபாலருக்கும் உள்ள ஒரு அணுக்க உணர்வாகவே சொல்லப்படுகிறது!! அதே போல காமம் என்பது அக்காலங்களில் வாரிசு உருவாக்க என்கிற நோக்கத்துக்கு மட்டுமே பயன்பட்டது!! 

  இப்போது இது சம்பந்தப்பட்ட ஒரு கதையை சொல்கிறேன்!! பிரளயம் முடிந்து பிரபஞ்சம் இயங்க ஆரம்பித்த நேரம்!! பரப்ரம்மம் பல்வேறு கோள்களையும், பிரஜாபதிகளையும் உருவாக்கி முடித்திருந்தார்!! அந்நிலையில் பூமியில் உயிரினம் உருவாக வேண்டிய சூழல் வந்ததை உணர்ந்த அவர் பிரம்மனிடம் சொல்லவும் பிரம்மப் பிரஜாபதி முதலில் மனு என்கிற ஆணையும் பின்னர் சத்ரூபா என்னும் பெண்ணையும் படைத்தார்!! அவர் எதிரில் இருவரும்அவரை வணங்கி  நின்றிருந்தனர்!! அவர்களுக்கு தாங்கள் யார் ஏன் இங்கே நிற்கிறோம் என்பதெல்லாம் புரியவேயில்லை!! அப்போது பிரம்மா கூறினார் :

      மனு, சத்ரூபா உங்கள் இருவரையும் நான் இப்போது ஒரு முக்கிய செயலின் பொருட்டுப் படைத்திருக்கிறேன்!! அதை நான் இப்போது விவரிக்கிறேன் நன்கு கேட்டுக் கொள்ளுங்கள்!! இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள பூமி என்கிற கிரகத்தில் உயிரினங்களைப் பெருக்கும் முகமாகவே நான் உங்களைப் படைத்தேன்!! மனு நீ ஆணினம் எனப்படுவாய்!! சத்ரூபா பெண்ணினம் எனப்படுவாள்!! உங்கள் இருவரையும் இப்போது பூமிக்கு அனுப்பி வைப்பேன்!! அங்கு நீங்கள் ஒரு ஆற்றிலிருந்து எழுவீர்கள்!! எழுந்த பின்னால் உங்கள் இருவருக்கும் காமம் என்னும் பரஸ்பர ஈர்ப்பு சக்தி உண்டாகும்!! அதன் மூலம் நீங்கள் இணைவீர்கள்!! சந்தோஷமும் அடைவீர்கள்!! அந்த நிகழ்வின் மூலம் இன்னொன்றும் நடக்கும்!! உங்கள் வாரிசாக உங்களை விட சிறிய அளவுள்ள குழந்தை சத்ரூபாவின் வயிற்றில் கருவாக உதிக்கும். அது பத்து மாதங்கள் அவள் வயிற்றிலேயே வளர்ந்து பின்னால் வெளியில் வரும்!! அது உங்கள் வம்சத்தை வளர்க்க ஆரம்பிக்கும்!! அதன் மூலம் நீங்கள் பல குழந்தைகளைப் பெற்று பூமியில் மக்கள் பெருக்கத்தை உருவாக்க வேண்டும்!! நீங்கள் இருவரும் பெறப் போகும் காமம் என்கிற உணர்வு சந்தோஷம் அளிப்பதாக இருந்தாலும் கூட அதை அதிகமாக அனுபவிக்காமல் வாரிசுகளைப் பெரும் முகமாகவே அளவுடன் பயன்படுத்தி இருவரும் இணைந்து அன்புடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறேன்!! இப்படி சொன்ன பிரம்மாவின் காலில் மனுவும் சத்ரூபாவும் விழுந்து வணங்கினர்!! பின்னர் அவர்கள் விழித்துப் பார்த்த போது ஒரு ஆற்றில் இருந்து எழுந்தனர்!! பிரம்மா சொன்ன விஷயங்களை மேற்கொண்டு அவர்கள் உலகத்தில் மக்கள் பெருக்கத்தை உண்டாக்கினர்!!
 
இப்போது சொல்லுங்கள் ஹிந்து மதம் காம மதமா?
 
தொடரும்
 

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :