Wednesday, July 17, 2013

Keerthivasan

போலி மத சார்பின்மையும் வாக்கு வங்கி அரசியலும்

போலி மத சார்பின்மையும் வாக்கு வங்கி அரசியலும்.

-----------------------------------------------------------------------------
இல்லாததற்கு "இருப்பு" என்பது இல்லை. இருப்பதற்கு "இல்லாமை" என்பதும் இல்லை. உண்மையறிந்தவர்கே இவ்விரண்டின் முடிவு விளங்கும். - கீதை 2:16.

இது கீதைக் கண்ணனின் கீதை மொழி."விவேக பாரதி" என்னும் மாத இதழின் உள்பக்க முன் அட்டையில் இவ்வரிகள் ஜொலித்தன. "இந்து தீவிரவாதம்." பற்றி கட்டுரை எழுத தகவல்களை தேடிக் கொண்டிருந்த எனக்கு, கீதையின் இவ்வரிகளும் ஒரு தகவலாகவே தோன்றியது.

ஆம்! "எப்பொழுதுமே இந்துக்களுக்கும், இந்து சித்தாந்தங்களுக்கும் எதிராகவே செயல்பட வேண்டும்" என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் உலாவும் போலி மதசார்பற்ற நடு நிலைவாதிகள், கீதையின் 2:16 சுலோகத்திற்கு எதிராக செயல்பட வேண்டும், என்று தீர்மானித்துவிட்டது போல,

இருப்பு இல்லாத "இந்து தீவிரவாதத்தை" - இருப்பதாகவும்;
இருப்பு உள்ள "இஸ்லாமிய, கிறிஸ்தவ, கம்யூனிச தீவிரவாதங்களை" - இருப்பு இல்லாதது போலவும் உளறுகின்றனர்.

இவர்கள் இருப்பதாக கூறும் "இந்து தீவிரவாதம்" என்ற ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா? "இந்து தீவிரவாதம்" என்ற ஒற்றை வரியில் ஒழிந்து கிடக்கும் அரசியல்கள் என்ன? என்பதை நோக்கியே நாம் பயணம் செய்யப் போகிறோம்.

பொதுவாகவே, நம் நாட்டில் எழுதப்படாத நியதி ஒன்று உள்ளது. அது என்னவென்றால், "ஒரே நொடியில் நீங்கள் *மதசார்பற்றவராகவும், சிறுபான்மை மக்களின் நண்பனாகவும்* புகழப்பட வேண்டுமா?" ------>

என்ன விஷ்யம் என்றாலும் சரி, எப்படிபட்ட விஷ்யம் என்றாலும் சரி. ஏன், இஸ்லாமியர்க்கு இருமல் எடுத்தாலும் சரி, RSSஐயும், இந்துத்வாவையும் வாயிக்கு வந்தபடி திட்டுங்கள். அதன் Final Touchஆக, நரேந்திர மோடியை ஹிட்லருடன் ஒப்பிடுங்ள்! அடுத்த நோடியே, நீங்கள் மதசார்பற்றவராக மாறிவிடுவீர்கள்!

இந்த எழுதப்படாத நியதியின் அரசியல் ஆதாய தொடர்ச்சியாக தான், "BJP மற்றும் RSS, தீவிரவாத பயிற்சி முகாம்களை நடத்துகின்றன என்றும், அரசு இந்த இயக்கங்களின் தீவிரவாத நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்" உள்துறை அமைச்சர் ஷிண்டே 20/1/2013 அன்று, காங்கிரஸ் கட்சியின் ஜெய்பூர் சிந்தனை(?) கூட்டத்தில் கூறினார்.

இதே போல, 25-8-2010ல் அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், "காவி தீவிரவாத விஷ்யத்தில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்." என்று DGP மாநாட்டில் கூறினார்.

"இந்து தீவிரவாதம்" என்ற சொல்லாடலை உருவாக்குவதன் மூலமும், RSS - BJPஐ இந்து தீவிரவாதிகள் என்று பச்சைக் குத்துவதன் மூலமும் காங்கிரஸ் அடையும் அரசியல் ஆதாயங்கள் பல.

2010ல் சிதம்பரம் உபயோகித்த "காவி தீவிரவாதம்" மற்றும் 2013ல் ஷிண்டே உபயோகித்த "இந்து தீவிரவாதம்" ஆகிய சொற்கள் வெவ்வேறு ஆண்டுகளில் உபயோகப்படுத்தப்பட்டு இருந்தாலும், இவற்றின் பின்னணியில் இருப்பது, "திசை திருப்பும் அரசியல் Theory" தான்.

உதாரணமாக, 2010ல் சிதம்பரம் "காவி தீவிரவாதம்" என்ற சொற்களை உதிர்த்த சமயத்தில் தான், 2G ஊழல், காமண் வேல்த் விளையாட்டு ஊழல் என்று பல ஊழல் சூழலி சிக்கி காங்கிரஸ் அரசு தவித்து வந்தது.

காங்கிரஸ் அரசு நிகழ்த்திய இந்த ஊழல்கள் மூலம், உலக அளவில் பாரத தேசம் தலை குனியவும் நேரிட்டது. மக்களின் பொதுப் பார்வையில் இருந்து இந்த ஊழல்களை விலக்கவும், மீடியாக்களின் விவாத கவணத்தை திசை திருப்பவும், சிறுபான்மை மதத்தவரை திருப்திபடுத்தவும் தான், "காவி தீவிரவாதம்" என்று சிதம்பரம் உளறினார்.

இதே வரிசையில் தான், 2013ல் தற்போதைய உள்துறை அமைச்சரான ஷிண்டேவும் "இந்து தீவிரவாதம்" என்ற சொல்லாடலை, "திசை திருப்பும் அரசியல் Theory"யில் அடிப்படையில் உபயோகித்தார்.

"பாகிஸ்தானிய ஜிகாதி வெறி மிருகங்கள், நம் நாட்டின் ராணுவ வீரர்களை கொன்று, தலையை எடுத்து சென்றதை, காங்கிரஸ் அரசு கை கட்டி வேடிக்கைப் பார்த்த பிரச்சனை;

டெல்லி பாலியல் வன்முறைகள்; அதை தொடர்ந்து நடந்த போராட்டங்கள்; உச்சநீதிமன்றம், மத்திய அரசின் மீது ஊழல் புகார்களில் அடிக்கடி வைக்கும் குட்டு", என்று பல பிரச்சனைகளால் காங்கிரஸ் கட்சியும்; ஆட்சியும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சமயத்தில் தான், ஷிண்டே "இந்து பயக்கரவாதம்" என்று சிதம்பரம் பாணியிலேயே பூச்சாண்டி காட்டினார்.

இந்துக்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதன் மூலம் காங்கிரஸ் ஒரே கல்லில்(சொல்லில்) இரண்டு மாங்காய் அடிக்கிறது.

* ஒன்று ---> பாரத தேச மக்களாகிய நாம், ஒரு புது பிரச்சனை வந்ததும், ஏற்கனவே இருக்கும் பழைய பிரச்சனையை மறந்துவிடுவோம். இது நமக்கே தெரியும்! இதை பயன்படுத்தி தான், "இந்து தீவிரவாதம்" என்ற பூதம் இருப்பதாக கூறி, பல ஊழல் பூதங்களை மறைக்கிறது. மறக்க வைக்கிறது.

* இரண்டு ---> ஓட்டுக்காக சிறுபான்மையினரின் காலில் விழக்கூட தயங்காத இவர்கள், இந்துக்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதன் மூலம், சிறுபான்மை மதத்தவரை திருப்தியடைய செய்து, தங்களை அவர்களின் ரட்சகர்களாக காட்டி, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஓட்டு வங்கிகளை பலப்படுத்திக் கொள்வர்.

இதற்கு முன்பு கூட, அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராடிய போது, அவரின் போராட்டத்தை மழுங்கடிக்கவும், மக்களின் "அன்னா ஹசாரே" தாக்கத்தை தணிய வைக்கவும், "ஹசாரே ஒரு RSS Agent, RSS முகமூடி" என்று கூறி, காங்கிரஸ் மக்களை திசைத் திருப்ப முயன்றது.

பிரதமருக்கு எதிராக நிலக்கரி ஊழல் விவகாரம் பெருக்கெடுத்த போது, FDI மற்றும் Petrol விலை ஏற்றம் மூலம் எப்படி சாமர்த்தியமாக, காங்கிரஸ் நிலக்கரி ஊழலை மக்கள் பார்வையில் இருந்து மழுங்கடித்தது என்பதையும் நாம் நம் கண்களால் கண்டுள்ளோம்.

அதே போலத் தான், இந்த "இந்து தீவிரவாத" விவகாரமும். காங்கிரஸ் தனது முழு அரசியல் லாபத்திற்காக மண்ணின் மைந்தர்களான இந்துக்களையே தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. போலி மதசார்பற்றவர்களும், கம்யூனிஸ்ட்களும், மிஷனரிகளும், ஜிகாதிய அமைப்புக்களும் அதை முன்னெடுத்து செல்கிறது.

ஷிண்டேவின் பேச்சுக்களை உன்னிப்பாக கவனித்தாலே, "இந்து தீவிரவாதம்" என்ற கண்டுபிடிப்பு எத்தனைய பொய் தன்மையுடனும், அரசியல் லாபத்திற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரியும்.

ஷிண்டே, "BJP மற்றும் RSS, தீவிரவாத பயிற்சி முகாம்களை நடத்துவதாகவும், இந்து தீவிரவாதம் குறித்தான ஆதாரங்கள் உள்ளதாகவும்" கூறுகிறார்.

சரி, ஒரு உள்துறை அமைச்சர் பொய் சொல்வாரா? மாட்டார் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், BJP மற்றும் RSS இந்து தீவிரவாதத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருந்தும், ஏன் இவ்விரு இயக்கங்களையும் தடை செய்யவில்லை?

இந்து தீவிரவாதம் இருக்கிறது என்று ஷிண்டேவும், மத்திய அரசின் பிற அமைச்சர்களும் கூறுகின்றனர். ஆனால், இதுவரை நம் மத்திய அரசால் 34 தீவிரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது.

இவற்றில், 13 இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள், 4 பஞ்சாபிய பிரிவினை தீவிரவாத இயக்கங்கள், 10 வடகிழக்கு பிரிவினை தீவிரவாத இயக்கங்கள்(இவற்றில் கிறிஸ்தவ தீவிரவாதமும் அடங்கும்),

3 கம்யூனிச தீவிரவாத இயக்கங்கள், LTTE, 2 தமிழக பிரிவினை தீவிரவாத இயக்கங்கள் மற்றும் ஒரு சாதி அமைப்பு ஆகியவையே தடை செய்யப்பட்டுள்ளதே தவிர, இன்று வரைக்கும் ஒரு இந்து இயக்கத்தை கூட, தீவிரவாத இயக்கம் என்று கூறி தடை செய்யப்படவில்லை.

அப்படியானால், "இந்து தீவிரவாதம்" எங்கே இருக்கிறது?

இந்து தீவிரவாத முகாம்கள் நடப்பதாக ஷிண்டே கூறுகிறார். ஆனால், "இந்த முகாம்கள் எங்கே நடை பெறுகிறது? யாரால் பயிற்சி அளிக்கப்படுகிறது? எத்தனை பேர் பயிற்சி பெறுகின்றனர்? பயிற்சி பெற்றுள்ளனர்? இதன் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?" என்ற விவரங்களை ஷிண்டே ஏன் வெளியிடவில்லை?

ஆதாரம் இருப்பதாக கூறித்தானே BJP - RSS மீது குற்றம் சுமத்தினார்? ஆனால், அது சம்பந்தமான அடிப்படை கேள்விகளுக்கு கூட, ஷிண்டேவின் ஆதார காகிதங்களில் பதில் இல்லாமல் பொய்விட்டதா? அப்படியானால், "இந்து தீவிரவாதம்" பொய்த்து விட்டது என்று தானே அர்த்தமாகிறது?

ஷிண்டேவின் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், "RSS மற்றும் BJPயின் தீவிரவாத நடவடிக்கைகளை உன்னிப்பாக அரசு கவனித்து வருகிறதாம்!!!". ஆனால், அது எப்படிப்பட்ட கவனிப்பு என்று தெரியவில்லை. ஒரு வேளை நம் "பிரம்மை" மந்திரி மன்மோகன் சிங் போல, கவனித்துக் கொண்டே...... இருப்பாரோ?

மேலும் ஒரு நகைச்சுவை. எந்த கட்சிகள் எல்லாம் இன்று "இந்து தீவிரவாதம்" பற்றி பேசுகிறது என்று கவனித்தீர்களா?

எந்த கட்சிகள் எல்லாம் தங்கள் ஓட்டு வங்கியை பாதுகாத்துக் கொள்ள, "இஸ்லாமிய தீவிரவாதம்" என்று சொல்ல அஞ்சுகிறதோ, அந்த கட்சிகள் தான் இன்று "இந்து தீவிரவாதம்" என்று சொல்கிறது.

எந்த கட்சிகள் எல்லாம் "தீவிரவாதத்திற்கு மதம் இல்லை" என்று குருட்டுத் தனமாக கூறியதோ, அந்த கட்சிகள் தான் இன்று "இந்து தீவிரவாதம்" என்று கூறுகிறது.

எந்த கட்சிகள் எல்லாம் "தீவிரவாதத்திற்கு நிறம் இல்லை" என்று சப்பைக் கட்டு கட்டியதோ, அந்த கட்சிகள் தான் இன்று "காவி தீவிரவாதம்" என்று நிறக் குருடர்களாக உளறுகின்றனர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :