Friday, January 10, 2014

Keerthivasan

ஆர்ய படையெடுப்பு‬ - 1 (The Invastion of the Aryans)

பாரத வேதங்களில் கூறப்படும் "ஆரிய" என்பது ஒரு வெள்ளை இனத்தைக் குறிக்கும் சொல் என முதலில் கூறியவர் ப்ரடெரிக் மாக்ஸ்மில்லியன் முல்லர் என்னும் ஜெர்மானி சமஸ்கிருத அறிஞராவார்.

மேலும் அவர்: ஆரியர்கள் பாரதத்திற்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்றும் வேதத்தின் காலம் கிமு 1200 என்றும் அவர் கூற்று.




# தனது வாழ்க்கையில் மாக்ஸ்முல்லர் ஒரு முறை கூட பாரதம் வந்ததில்லை...

அபே துபாய்ஸ் எனும் கிறிஸ்தவ போதகர் "இந்துக்களின் பழக்க வழக்கங்கள்" எனும் நூலை எழுதினார். அதில் நோவாவின் பிரளயத்திற்கு பிறகு நோவாவின் சந்ததிகளில் ஒரு கிளையினர் இந்தியாவில் குடியேறியதாக எழுதினார்.

மார்க்ஸ் முல்லர் அந்த நூலுக்கான முன்னுரையை எழுதினார். அதில் அபே துபாயிஸின் இப்பார்வை ஆதார பூர்வமானது என கூறினார். மாக்ஸின் இந்த நம்பிக்கை அவர் வேதங்களின் காலம் கிமு 1200 எனக் கருதுவதில் முக்கிய பங்கு வகித்தது (அதாவது ஆதார பூர்வமானது என்று நம்பிய ஒரு நூலை தான் அவர் நம்பினார்)

# இன்று ஆராய்ச்சியாளர்கள் விவிலியத்தின் பிரளய கதையை மறுக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் உருவான சுமேரிய புராணக்கதையின் தழுவலே பைபிளில் உள்ளது என கருதுகின்றனர்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :