குரு பரம்பரை - முன்னுரை
ஆனால், குரு என்பவர் எங்கே வருகிறார்? பள்ளியிலும் கல்லூரியிலும் நமக்கு கணிதமும், இயற்பியலும், வேதியியலும், சரித்திரமும், பூகோளமும் சொல்லிக்கொடுப்பவர் மட்டும் தான் குருவா? அப்படி என்றால் நாம் கல்வி முடிந்த பிறகு வரும் வாழ்க்கைக்கு அவர் தேவை இல்லையே. அப்படி என்றால் ஏன் குரு என்று ஒருவரை நம் வாழ்க்கையில் சேர்த்தார்கள்?
அதற்கு பதில் குரு என்பவர் நமக்கு லௌகீக வாழ்க்கை மட்டுமின்றி நம்மை நாமே அறிவதற்கு உதவும் ஆன்மீக வாழ்க்கையை நமக்கு சொல்லி தருகிறவர். பிறப்பு - இறப்பு என்கிற மீளா சுழற்ச்சியில் இருந்து நம்மை விடுவிப்பவர்.
மனிதர்களாக பிறக்கும் எல்லோருக்கும் குரு ஆகும் தகுதி இருப்பதில்லை. முற்பிறவியில் தெய்வத்தன்மையுடன் வாழ்ந்து எதோ தவிர்க்க முடியாத காரணங்களால் பூமியில் பிறவி எடுத்த சில புண்ணிய ஆத்மாக்கள் தான் குருவாக வருவார்கள். அவர்களில் ஸ்ரீ ராகவேந்திரர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி போன்றவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள்.
ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்து, பலருக்கும் தெரியாமல் இருக்கும் சந்நியாசிகள், ஸ்வாமிகள், பலர் இருக்கிறார்கள்.அவர்களை பற்றி இனி வரும் பதிவுகளில் சொல்கிறேன்.
விவேக ஜோதி