Monday, December 22, 2014

Keerthivasan

நினைத்தேன் பகிர்கிறேன் - ஆரம்பநிலையிலேயே ஓலமிட வேண்டுமா?



எந்த ஒரு இந்து மதம் சம்பந்தப்பட்ட விவாதத்திற்கும் முதலில் எழும் கேள்வி ஏக இறைவனில்லை ஏகப்பட்ட இறைவன் என்பதே. இந்த கேள்வியை எழுப்பினாலே தான் ஒரு மிகச் சிறந்த அறிவாளி என்று மனதில் நினைத்துக் கொள்பவர்களும் பலர்...

ஒருவனே இறைவன் என்பதை இந்துமதம் மறுக்கவில்லை மாறாக இதை வலியுறுத்துகிறது. ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருப்பவன் இறைவன் என்பதை வலியுறுத்துவது அல்ல இந்து மதம், மாறாக உன் ஆன்மாவை அறிந்துக் கொள் அதுவே இறைவன் என்கிறது.

ஒருவருக்கு ரஜினி ஒருவருக்கு கமல் ஒருவருக்கு விஜய் பிடிக்கும் ஆனால் அவர்கள் அனைவரும் மனிதர்கள் தானே? அதே போல இறைவன் என்பது ஒருவனை குறிப்பதுதான் ஆனால், இறைவனை அவரவருக்கு பிடித்த உருவத்தில் போற்றிடவும் வணங்கிடவும் இந்த மதம் சுதந்திரம் கொடுத்திருக்கிறது. இதனால் யார் கைகாட்டியும் ஒன்றை செய்ய வேண்டியதில்லை. தனக்கு பிடித்ததை செய்ய முழு சுதந்திரம் கொடுத்துள்ளது இந்து மதம்.

யாராலும் உடனே அமர்ந்து தியானத்தில் மூழ்கி பரபிரம்மத்தை புரிந்துக் கொண்டுவிட முடியாது. முதலில் மனதை ஒருநிலைபடுத்த ஒரு இலக்கு (object) வேண்டும். இது இறை வழிப்பாட்டின் ஆரம்ப நிலை இதை கடந்து பல நிலைகள் உண்டு ஆனால், ஆரம்பநிலையிலேயே ஓலமிடுவது இன்று வழக்கமாகி போய்விட்டது.

ஆரம்பநிலையை கடந்து அடுத்த நிலையை அடைந்து பிரம்மத்தை உணருங்கள்...

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :