கட உபநிஷதத் தத்துவங்கள் - 9 - ஐம்புலன்களின் செயல்பாடு
ஐம்புலன்களின் செயல்பாடு பற்றி சென்ற பதிவுகளில் சொல்லியிருந்தேன். ஐம்புலன்களின் செயல்பாடுகள் பெரும்பாலும் எதன் பாற்பட்டதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?? இந்த விஷயத்தை நான் விளக்கமாக சொல்வது இதை சரியான முறையில் புரிந்து கொண்டால் மட்டுமே மனதுக்கும் புத்திக்கும் உள்ள வேறுபாடும் அதைத் தொடர்ந்து வரும் விஷயங்களையும் புரிந்து கொள்ள முடியும் என்பதற்காகவே!
மனதாலும் ஐம்புலன்களை இயக்க முடியும் அதே போல புத்தியாலும் ஐம்புலன்களை இயக்க முடியும்! நான் கேட்பது நம் போன்ற சாதாரண மனிதர்களின் புலன்கள் இயக்கம் எதனால் அதிகமாக இயக்கப்படுகிறது என்பதே. இதன் சரியான பதிலை சொல்வதென்றால் சாதாரண மனிதர்களின் புலன்கள் அதிகளவில் மனதால் இயக்கப்படுகின்றன என்பதே. அதனால்தான் சாதாரண மனிதர்கள் நிறைய உணர்ச்சி வசப்படுகிறார்கள். உணர்ச்சி வயப்படுகிறவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று நன் இங்கே சொல்ல வரவில்லை. ஆனால் உணர்ச்சி வயப்படுகிறவர்கள் பலரும் பல விஷயங்களிலும் தோல்வியே அடைவார்கள். அவர்களின் வாழ்க்கை சூழல் நன்றாக இருக்கலாம் ஆனால் இவர்களாகவே அதைக் கெடுத்துக் கொள்வார்கள்.
இன்னமும் விவாகரத்து ஆகிற நிறைய தம்பதிகளின் செயல்பாடுகளைக் கண்ணுற்றால் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ மனதின் பாற்பட்டே புலன்களை இயக்குபவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்களால் நிதானமாக சிந்தித்து எந்த முடிவையும் எடுக்கவே முடியாது. அதே ஒற்றுமையாகப் பல்லாண்டுகள் வாழக் கூடிய தம்பதிகளை எடுத்துக் கொண்டால் இருவருமே புத்தியின் அடிப்படையில் புலன்களை இயக்குபவர்களாக இருப்பார்கள். அவர்களே வெற்றிகரமான இல்வாழ்க்கையை மேற்கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் அரிதாகவே சண்டை சச்சரவுகள் நேரும். அப்படியே நேர்ந்தாலும் உடனே அவர்கள் அதைத் தீர்த்தும் கொள்வார்கள்.
இன்னமும் புத்தியின் செயல்பாடுகள் பற்றி நிறைய உதாரணங்களைக் கூறலாம். அவை பின்வரும் பதிவுகளில் வரும். சரி இதற்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று நீங்கள் கருதலாம். நிறைய சம்பந்தம் உண்டு.
உண்மையான ஆன்மீகவாதிகள் எல்லாம் புத்தியின் பாற்பட்டே செயல்படக் கூடியவர்கள். அதே போல ஞானியர்கள் எல்லாருமே முழுமையாகவே புத்தியின் பாற்பட்டே செயல்படக் கூடியவர்கள். அவர்கள் மனதின் ஆட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தியவர்களாக இருப்பார்கள். சரி இதனால் என்ன பயன் என்று நினைக்கிறீர்களா?? அவர்களின் ஆன்மீக அல்லது துறவற வாழ்க்கை உண்மையானதாகவும் பொருள் நிறைந்ததாகவும் முக்தியின் பாதையில் அவர்களைக் கொண்டு சேர்க்கக் கூடியதாகவும் இருக்கும். மனிதனின் லட்சியம் முக்தியடைவது என்று வைத்துக் கொண்டால் இது பெரும் பயனில்லையா?? இன்னும் அடுத்த பதிவில் வரும்.
மனதாலும் ஐம்புலன்களை இயக்க முடியும் அதே போல புத்தியாலும் ஐம்புலன்களை இயக்க முடியும்! நான் கேட்பது நம் போன்ற சாதாரண மனிதர்களின் புலன்கள் இயக்கம் எதனால் அதிகமாக இயக்கப்படுகிறது என்பதே. இதன் சரியான பதிலை சொல்வதென்றால் சாதாரண மனிதர்களின் புலன்கள் அதிகளவில் மனதால் இயக்கப்படுகின்றன என்பதே. அதனால்தான் சாதாரண மனிதர்கள் நிறைய உணர்ச்சி வசப்படுகிறார்கள். உணர்ச்சி வயப்படுகிறவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று நன் இங்கே சொல்ல வரவில்லை. ஆனால் உணர்ச்சி வயப்படுகிறவர்கள் பலரும் பல விஷயங்களிலும் தோல்வியே அடைவார்கள். அவர்களின் வாழ்க்கை சூழல் நன்றாக இருக்கலாம் ஆனால் இவர்களாகவே அதைக் கெடுத்துக் கொள்வார்கள்.
இன்னமும் விவாகரத்து ஆகிற நிறைய தம்பதிகளின் செயல்பாடுகளைக் கண்ணுற்றால் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ மனதின் பாற்பட்டே புலன்களை இயக்குபவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்களால் நிதானமாக சிந்தித்து எந்த முடிவையும் எடுக்கவே முடியாது. அதே ஒற்றுமையாகப் பல்லாண்டுகள் வாழக் கூடிய தம்பதிகளை எடுத்துக் கொண்டால் இருவருமே புத்தியின் அடிப்படையில் புலன்களை இயக்குபவர்களாக இருப்பார்கள். அவர்களே வெற்றிகரமான இல்வாழ்க்கையை மேற்கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் அரிதாகவே சண்டை சச்சரவுகள் நேரும். அப்படியே நேர்ந்தாலும் உடனே அவர்கள் அதைத் தீர்த்தும் கொள்வார்கள்.
இன்னமும் புத்தியின் செயல்பாடுகள் பற்றி நிறைய உதாரணங்களைக் கூறலாம். அவை பின்வரும் பதிவுகளில் வரும். சரி இதற்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று நீங்கள் கருதலாம். நிறைய சம்பந்தம் உண்டு.
உண்மையான ஆன்மீகவாதிகள் எல்லாம் புத்தியின் பாற்பட்டே செயல்படக் கூடியவர்கள். அதே போல ஞானியர்கள் எல்லாருமே முழுமையாகவே புத்தியின் பாற்பட்டே செயல்படக் கூடியவர்கள். அவர்கள் மனதின் ஆட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தியவர்களாக இருப்பார்கள். சரி இதனால் என்ன பயன் என்று நினைக்கிறீர்களா?? அவர்களின் ஆன்மீக அல்லது துறவற வாழ்க்கை உண்மையானதாகவும் பொருள் நிறைந்ததாகவும் முக்தியின் பாதையில் அவர்களைக் கொண்டு சேர்க்கக் கூடியதாகவும் இருக்கும். மனிதனின் லட்சியம் முக்தியடைவது என்று வைத்துக் கொண்டால் இது பெரும் பயனில்லையா?? இன்னும் அடுத்த பதிவில் வரும்.
ஆக்கம்: துரோணாச்சாரியார்