Tuesday, May 26, 2015

Keerthivasan

கட உபநிஷதத் தத்துவங்கள் - 10 - புத்தி எழுச்சி பெற்றால்

கட உபநிஷதத் தத்துவங்கள்  - 10 - புத்தி எழுச்சி பெற்றால்




புத்தி எழுச்சி பெறுவதால் உண்டாகும் பயன்களைப் பற்றி சற்றுக் காண்போம். புத்தி எழுச்சி பெறுவது என்றால் என்ன? இந்த விஷயத்தில் மனதின் பங்கு என்ன?

       புத்தி எழுச்சி பெறுவது என்பதை புத்தி விழிப்படைதல் என்று இன்னொரு புறத்தில் சொல்லலாம். இங்கு மனதின் பங்கு மிகக் குறைவாகவே ஆதிக்கம் செலுத்தும். ஆனாலும் மனதின் பங்கு இதில் இல்லாமலே போகவில்லை. அவ்வாறு இல்லாமல் போகவும் முடியாது. ஏனென்றால் நமக்கு உணரும் திறனை அளிப்பது மனம்தான். ஆனால் புத்தி விழிப்படைவது என்பது மனதின் உணரும் திறனுக்கும் அப்பாற்பட்டது. புத்தி விழிப்படையும் நிலை பற்றி சிறு உதாரணங்களை இப்போது கூறுகிறேன். அதன் பின்னர் ஆன்மீக வாழ்வில் அதன் பங்கு பற்றிக் காண்போம்.

      ஒரு பெரும் ஞானி அல்லது தத்துவ ஆசிரியரை எடுத்துக் கொள்ளுங்கள். அவரிடம் ஒரு வகுப்பில் மாணவர்களோ அல்லது பர்வையாளரோ ஒரு கேள்வி கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தி விழிப்படைந்த தத்துவ ஆசிரியர் முதலில் மனதின் மூலம் கேட்கப்படும் கேள்வி என்ன என்பதை உணர்ந்து கொள்வார். இங்குதான் மனதின் பங்கு மிகுந்து உள்ளது. பின்னர் என்ன நடக்கும்?

      அவர் புத்தியின் செயல்பாடு சரியாக இல்லையென்றால் உடனடியாக அம்மாணவனின் கேள்விக்கு ஏதோ ஒரு பதிலைக் கூறுவார். ஆனால் அந்த பதில்கள் சரியாக இல்லாமல் போகலாம். ஏனென்றால் அது மனம் ஒன்றை கேள்வியாக உணர்ந்தவுடன் மனதின் கண நேர சிந்தனையின் மூலமே பதிலிறுக்க முற்படுவதே ஆகும். ஆனால் இதுவே புத்தி எழுச்சியுற்ற நிலையில் உள்ளவர் மாணவரின் கேள்வி குறித்து சிறிது நேரம் சிந்திப்பார். பின்னர் பதிலிறுப்பார். அந்த பதில் மிகச் சரியான பதிலாகவே கண்டிப்பாக இருக்கும். ஒரு ஞானியின் பேட்டியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டால் அவரும் அப்படித்தான் கொஞ்சம் கேள்வியை உள்வாங்கி சிந்தித்து சரியான பதிலைக் கூறுவார். இதில் இன்னொன்றும் உண்டு. புத்தி விழிப்படைந்த நிலையில் உள்ளவர்களுக்கு கேள்வியை உள்வாங்கி பதில் கூறுகிற நேரமானது ஆரம்பத்தில் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் கூட ஒரு கட்டத்தில் அவருடைய இடையறாத பயிற்சியின் காரணமாக கேள்வி கேட்கப்பட்ட சில நொடிகளிலேயே அவரால் சிந்தித்து மிகச் சரியான விடையை அளிக்க முடியும். நம் சாதாரணமாக சில ஞானியர்கள் கேள்விகளுக்கு பதிலிறுக்கும் போது இவ்வாறு பட்டென சரியான பதிலைக் கூறுவதைக் கண்டிருக்க முடியும். ஆனால் புத்தியை விழிப்படையச் செய்யாதவன் எத்தனை நேரம் சிந்தித்தாலும் பதில் சரியாக வராது.

     புத்தி விழிப்படையும் நிலையை அடைந்தவர்கள் தம்முடைய துறைகளில் மிக சிறந்தவர்களாக வெற்றிக் கொடியை நாட்டியவர்களாக இருப்பார்கள். இவர்களில் என் கருத்தின் படி சம்பளத்துக்கு என்று பணியாற்றாமல் ஆத்ம திருப்தியுடன் பணி செய்பவர்களாகவும் இருப்பார்கள். இன்னமும் வேலை என்கிற ஒன்று இல்லாமல் தானாகவே சுயதொழில் செய்யும் பலரும் அதில் மிகப் பெரும் தொழிலதிபர்களாக உள்ளவர்களும் அப்படியே. இவர்களை புத்தி விழிப்படைந்த நிலையில் அதைத் தன வெற்றிக்காக பயன்படுத்திக் கொள்பவர்கள் என்று சொல்லலாம். ஆனால் இதையும் தாண்டி ஒன்றும் உண்டு.

     இசை, ஓவியம், பாடுவது போன்ற கவின்கலைகள், படைப்பாளிகள், தத்துவ ஆசிரியர், ஞானியர், துறவியர் போன்றோருக்கு புத்தி மிகவும் விழிப்படைந்த நிலையில் இருக்கும். அதனாலேயே அவர்களுக்கு செய்யும் எந்தச் செயலும் வெற்றியையே தரும். புத்தியை விழிப்படைய செய்வதன் மூலம் கிடைக்கும் மிகப் பெரும் பலன் இதையெல்லாம் தாண்டிய நிலையில் ஒரு ஆன்மசாதகன் பெறக் கூடிய ஞானமாகத்தான் இருக்க முடியும். இதையே புத்தி விழிப்படைந்த நிலையின் முக்கியப் பலனாகக் கொள்ளலாம். புத்தி விழிப்படைவது எப்படி என்பது குறித்து அடுத்த பதிவில் கூற விழைகிறேன்.


Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :