சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 1
திருச்சிற்றம்பலம்!
சைவ சித்தாந்தத்தில் முதல்வனைப் பதி என்று கூறுவர். பதியே முழுமுதற்கடவுளாகிய சிவபெருமான்.
உயிர் எனும் ஆன்மாவைப் பசு என்று கூறுவர். உடம்பொடு கூடிய உயிர்கள் போக்குவரவு புரிந்து இன்ப துன்பங்களை அனுபவிக்கும் இடம்.
இங்கு உலகம் என்பது நாம் வாழும் பூமியை மட்டுமல்ல, சூரியன்,சந்திரன் நட்சத்திரங்கள் முதலிய அடங்கிய அண்டத்தையும், நாம் கண்டும் கேட்டும் நுகர்ந்தும் உண்டும் தொட்டும் அனுபவிக்கும் சகலபோகப் பொருள்களையும் குறிக்கும்.இவை அனைத்தையும் பாசம் அல்லது தளை என்பர்.
பதி, பசு, பாசம் இம்மூன்றையும் முப்பொருள் என்பர்.
முப்பொருட்களில் பதி பேரறிவு உடையவர்.உயிர் சிற்றறிவு உடையது.பாசம் அல்லது தளை என்று கூறப்படுவன உயிர்களை அடிமைப்படுத்தும் பொருட்களாம் இவை அறிவற்றவை.
தொடர்ந்து எழுதலாம் என்று நினைக்கிறேன்.பதிவின் கருத்துக்களில் தவறு இருப்பின் சிவநேயச்செல்வர்கள் சுட்டிக்காட்டவும்.தொடர்ந்து எழுத இறைஅருள் துணை இருக்க வேண்டுகிறேன்.
திருச்சிற்றம்பலம்!
பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு: Janarthanam Karthik