Saturday, July 11, 2015

Keerthivasan

சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 2


சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 2

திருச்சிற்றம்பலம்.


பதி(கடவுள்)

அவன் எங்கும் வியாபித்து இருப்பவன்.ஒன்றாய் உலகனைத்தும் ஆனவன்.அதற்கு அப்பாலும் உள்ளவன்.எல்லாம் வல்லவன்.தோற்றமும் அழிவும் இன்றி என்றும் உள்ளவன்.தனக்கு ஒரு உவமை இல்லாதவன்.
சைவ சித்தாந்தம் பதிக்கு எட்டு குணங்கள் என்று குறிப்பிடுகிறது.
அவை,

1.தன் விருப்பம் போல் எதையும் செய்பவன்.(சுவதந்திரத்துவம்)
2.ஒரே நேரத்தில் முக்காலத்தையும் அறிபவன்.(நிராமயான்மா)
3.எல்லா அறிவையும் இயல்பாய் உடையவன்.(சர்வஞஞசை)
4.அளவிலா ஆற்றல் பெற்றவன்.(அனந்த சக்தி)
5.வரம்பிலா இன்பம் உடையவன்(திருப்தி)
6.பேரருளாளன்(அனுப்த சக்தி)
7.பாசங்கள்(தளைகள்) சாராதவன்.(அநாதிபோதம்)
8.தூயவன்.(விசுத்ததேகம்)


பதிக்கு
1.உருவம் உண்டு
2.உருவம் இல்லை
3.அருவுருவம்(அடையாளப்படுத்த ஒரு குறி)
என்ற மூன்று கொள்கைகளையும் சைவ சித்தாந்தம் ஏற்றுக்கொள்ளும்.


பசு(உயிர்)
உயிர்கள் எண்ணற்றவை.ஒவ்வொரு உடலிலும் வேறு வேறு உயிர்கள் நிற்கும்.உயிர்களில் ஆண் பெண் வேறுபாடு இல்லை.

ஆதியில் ஓர் உடலைப் பெறுமுன் உயிர்கள் அறிவு,இச்சை,செயல் இன்றி அறியாமையில் மூழ்கித் தனியாக இருக்கும்.இந்நிலையை கேவல நிலை என சைவ சித்தாந்தம் கூறுகிறது.

இறைவனைப் போன்றே உயிரும் தோற்றமும் அழிவும் இல்லாத என்றும் உள்ள பொருளாகும்.

சிற்றறிவு உடைய உயிரின் குணங்கள்:

1. உயிர் எதையும் தானே அறியாது ஐம்பொறிகளின் உதவியால் அறியும்.அதுவும் இறைவன் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவிக்கவே அறியும்.

2. சார்ந்த வண்ணம் ஆதல்.அதாவது உயிர் ஆண் உடலில் ஆண் தன்மை பெறும்.பெண் உடலில் பெண் தன்மை பெறும்.மிருக உடலில் மிருகத்தன்மை பெறும்.மரத்தில் மரத்தன்மை பெறும்.இது போன்று பிற உடல்களிலும் அதனதன் தன்மைகளைப் பெறும்.


உடம்பு(தனு) கீழ்க்கண்ட நான்கு முறைகளில் தோன்றும்.

1. கருப்பை(மனிதர்,மிருகம்)
2. முட்டை(பறவை இனம்)
3. வித்து(தாவர இனம்)
4. வியர்வை(பேன் முதலியன)
சைவ சித்தாந்தத்தின் படி தனுக்களின் பேதங்கள் 84 இலட்சங்களாகும்.


உயிர்கள் அறிவு பெறப் பயன்படும் ஐந்து கருவிகள்.

1. மெய் - சருமம்.
2. வாய் - பேச்சு.
3. மூக்கு - நுகர்வு.
4. செவி - கேள்வி.
5. கண் - பார்வை.


திருச்சிற்றம்பலம்.

பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு: Janarthanam Karthik

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :