Friday, August 21, 2015

Keerthivasan

இதுதான் இந்துமதம் – 17

மூன்று குணங்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் சூழ்ந்து இருக்கின்றன. அவை சத்வ, ரஜோ, தாமஸ என்று அழைக்கப்படுகின்றன. இந்த முக்குணங்கள் இல்லாமல் எதுவுமே இல்லை.

ரஜோ குணம் என்பது அதீத செயலாற்றலை குறிக்கிறது. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஓய்வில்லாத தன்மையை குறிக்கிறது. தமோ குணமோ அதற்கு எதிர்விதமாக செயலற்ற தன்மையை குறிக்கிறது. சத்வ குணமோ இந்த‌ இரண்டுக்கும் நடுவே உள்ள சமன்பாடான தன்மையை குறிக்கிறது.

இந்த மூன்று குணங்களில் எதையும் அவசியமானது, அவசியம் இல்லாதது என்று நாம் பிரித்து விட இயலாது. ஒவ்வொரு குணமும் மற்றதை சார்ந்தே இருக்கின்றன. இந்த மூன்று குணங்களும் ஒரு சக்கரம் போல் நம்முள் ஒன்று மாற்றி மற்றொன்று இயங்கி வருகின்றன.

மதிய நேரம் நன்றாக உணவருந்தி விட்டோம், தமோ குணம் நம்மை மந்த நிலைக்கு எடுத்து செல்கிறது. அந்த நிலையில் செயற்ற நிலையில் இருக்கவே நாம் விரும்புகிறோம். சிறிது நேரத்திற்கு பிறகு ஏதோ ஒன்று நம்மை உந்துகிறது. ஏதோ ஒரு சிறு எண்ண ஓட்டமாக அது இருக்கலாம். நாம் சிந்திக்கிறோம், பலவிதமான சிறிய அல்லது பெரிய ஆசைகள் நம்மை செயல்புரிய உந்துகின்றன‌. ரஜோ குணம் உருப்பெறுகிறது. மாலையில் நல்லதொரு ஆன்மீக சொற்பொழிவை கேட்கிறோம், முகநூலில் நல்லதொரு ஆன்மீகப்பதிவை படிக்கிறோம் சத்வ குணம் எழத் தொடங்குகிறது. பின் மீண்டும் தாமஸ குணம், ரஜோ குணம் இப்படி சென்றுக் கொண்டே இருக்கிறோம்.

விஞ்ஞானம் புறப்பொருள் அனைத்தும் அணுக்களால் கட்டப்பட்டிருக்கின்றன என சொல்கிறது. அந்த அணுக்களின் ஆதாரமாக "ப்ரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்கள்" இருப்பதாக கூறுகிறது. இதை தான் வேதந்தம் சத்வ, ரஜோ, தாமஸ என வேறு பெயர்களில் கூறுகிறது.

சத்வ குணத்தை நாம் "நியூட்ரான்" என கொள்ளலாம். சத்வ குணம் பரிசுத்தத்தையும், ஒளியையும் குறிக்கிறது. அது இந்த பிரபஞ்சத்தின் ஆதாரமான உண்மையை குறிக்கிறது. சத்வ குணத்தால் இந்த பிரபஞ்சம் அனைத்தும் தாங்கப்படுகிறது, ஒன்றினைக்கப் படுகிறது என்கிறது வேதாந்தம். நவீன விஞ்ஞானம் ஒரு அணுவிற்குள்ளும் ஒரு நியூட்ரானே அணுவை ஒன்றினைத்து தாங்கிப் பிடிக்கிறது என்கிறது, (within the nucleus, the neutron holds the atom together)

ரஜோ குணம் செயலாற்றும் தன்மையை குறிக்கிறது. அனைத்தையும் ரஜோ குணமே செயல்பட வைக்கிறது. அனைத்தையும் அது அசையும் தன்மையில் வைக்கிறது. அது போலவே புரோட்டான்கள் "பாசிட்டிவ்" ஆற்றலை வெளிப்படுத்தி எலக்ட்ரான்களை தன்னை சுற்றி இயங்க வைக்கிறது.

தமோ குணம் இருளை குறிக்கிறது ரஜோ குணத்தால் ஏற்படும் ஆசைகளாலும், பற்றினாலும் ஏற்படும் துக்கம், தளர்ச்சி, சோர்வு ஆகியவற்றை இது குறிக்கிறது. அதாவது ப்ரோட்டான்களின் பாதிப்பால் சுழலும் எலக்ட்ரான்களை இது குறிக்கிறது. எலக்ட்ரான்கள் "நெகட்டிவ் சார்ஜ்" உடையவை என்று விஞ்ஞானம் கூறுகிறது.

இது குறித்து மேலும் பார்ப்போம்.

Englightened Master

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :