Friday, October 23, 2015

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 03

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 03

Englightened Master




கிறிஸ்துவம் தோன்றுவதற்கு முன் பழமையான நாடுகளான கிரேக்கம், ரோமாபுரி, எகிப்து, பாக்தாத், பாரசீகம் போன்ற நாடுகளில் பலவிதமான இறை நம்பிக்கைகள் இருந்து வந்தன. இந்தியாவை போலவே அவற்றிலும் வளமான பல தத்துவ கோட்பாடுகளும், தொன்மையான நம்பிக்கைகளும் காணப்பட்டன. இந்த பழமையான நம்பிக்கைகளை "பாகன்' கலாச்சாரம் என்று யூதர்களும், ஆரம்ப கால கிறிஸ்துவர்களும் அழைப்பது உண்டு.. அதாவது நாட்டுப்புறம், கிராமப்புறம், மூட நம்பிக்கைகள் என பலவிதமாக பொருள் தரும் வகையில் "பாகனிஸம்" என்று அவை அழைக்கப்பட்டன. மதமில்லாத இந்து தர்மத்தை எப்படி "இந்துயிஸம்" என்று அழைத்தார்களோ, அது பொலவே தனியொரு மதமில்லாத வழிபாடுகளை, நம்பிக்கைகளை, "பாகனிஸம்" என்று அழைத்தார்கள். கிறிஸ்துவம் ரோமாபுரி நகரங்களில் வேர் விடத் தொடங்கியதும் இந்த நம்பிக்கையாளர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள். ஐரொப்பாவில் பலவிதமான சிலுவை போர்கள் தொடங்கப்பட்டு அவர்கள் வேட்டையாடப் பட்டார்கள்.

சரி அரேபியா ஏழாம் நூற்றாண்டில் எப்படி இருந்தது ?

தண்ணீர் துளியை கூட காண முடியாத ஒரு பிரதேசத்தில் விவசாயம் இருக்குமா ? மெதினாவை தவிர விவசாயம் வேறெங்கும் இல்லாத அந்த பிரதேச‌த்தில் வாழ்வாதாரமே கேள்வி குறியாக இருந்தது. மெக்கா மெதினா மட்டுமே நகரங்களாக இருந்தன. நிலையில்லாத மனற் பரப்பில், தனியொரு இடத்தில் மனிதர்கள் வாழ இயலாது. வேட்டையாடி உண்ண காடுகளும் இல்லை. மீன் பிடித்து வாழ ஆறோ, கடலோ இல்லை. என்னதான் செய்வார்கள் வாழ்வதற்கு ? திருடுவதும், கொள்ளையடிப்பதுமே அவர்களின் தொழிலாக இருந்தது. ஒன்றுபட்டு இருந்தால்தான் ஒரு ஆதிவாசி கூட்டம் மற்ற கூட்டத்தை கொளையடிக்க இயலும், பலைவன சோலைகளை கைப்பற்ற இயலும். மேலும் நாகரீகம் என்பதே இல்லாமல் இருந்த பிரதேசத்தில், பெண் எனப்படுவது காம இச்சையை போக்கும் ஒரு இயந்திரமாகவே கருத‌ப்பட்ட‌து. பெண்னை கண்களில் பார்த்தாலே கவர்ந்து சென்று வன்புணர்வு செய்துவிடும் நிலையே அந்த பாலைவனத்தில் நிறைந்திருந்தது. ஒரு கொள்ளைக்கூட்டம் மற்றொரு கொள்ளைக் கூட்டத்தை சூரையாடும், தோற்ற‌வர்களை கொன்று எஞ்சியவர்களை அடிமையாக வைத்துக் கொள்ளும், பெண்களை கவர்ந்து பலரும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

மெக்காவும், மதினாவும் மட்டுமே நாகரீகம் பெற்ற நகரங்களாக இருந்தன. மெக்காவில் இருந்த‌ காபா என்கிற இடத்தில் அல்லாவுக்கு பழமையான கோவில் ஒன்று இருந்தது. பழமையான‌ நம்பிக்கைப்படி அல்லா மற்றும் அவருடைய "அலத், மனத், அல்-உஜ்ஜா" (Allāt, Manāt and al-‘Uzzá. ) என்கிற‌ மூன்று பெண்கள் மற்றும் இதர கடவுளர்கள் என மொத்தம் 360 சிலைகள் அங்கு நிறுவப்பட்டு மெக்காவை சேர்ந்த மக்களால் வணங்கப்பட்டு வந்தன..

இந்த சூழ்நிலையில் தான் முகம்மது என்பவர் அரேபியாவில் பிறந்தார்.

தொடரும்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :