Monday, October 26, 2015

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 04

Englightened Master

சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த முகம்மது அவர்களை மாமன் தான் வளர்க்கிறார். வியாபாரியாய் தொழில் செய்கிறார். தன்னுடைய நாற்பதுகளில் அவர் அடிக்கடி அங்குள்ள மலைகளுக்கு சென்றதாகவும், பல நாட்கள் அங்குள்ள குகைகளில் அமர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டதாகவும் அவரே குறிப்பிடுகிறார். "கேப்ரியல்" என்கிற தேவதை அங்கு அவரிடம் வந்து "நீ தான் இறைவனின் இறுதித் தூதன்", "கடவுள் ஒன்றுதானே தவிர வேறில்லை", "கடவுளிடம் முழுவதுமாக சரன் அடைவதே ஒரே வழி", "உருவ வழிபாடு செய்வது மிகப்பெரும் குற்றமாகும்" இப்படி பலவற்றை தன்னிடம் உரைத்ததாக முகம்மது குறிப்பிடுகிறார். இப்படி ஒரு தேவதை வந்து உண்மையில் கூறியதா ? என்றால் அதற்கு சாட்சி யாரும் இல்லை, முகம்மது அவர்களின் வார்த்தைகளே அதற்கு சாட்சி என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அதன் பின் சிலர் முகம்மதின் சீடர்களாக மாறுகிறார்கள். அவர்கள் முஸ்லீம்கள் என அழைக்கப்படுகிறார்கள். மெக்காவில் உள்ள குரோஷிய பழங்குடியினர் தங்க‌ளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் முகம்மது பொது ஆண்டு 622ல் தன் சீடர்களுடன் மெதினா செல்கிறார். மெதினாவில் உள்ள பல பழங்குடியினங்களை ஒருங்கினைக்கிறார். மெக்காவில் இருந்து பயனித்து வரும் யாத்ரீகர்களின் கூட்டத்தை பல முறை குறுக்கிட்டு செல்வங்களை கொள்ளை அடிக்கிறார். இதன் மூலம் பெரும் செல்வம் திரட்டப்படுகிறது. இதை வைத்து பத்தாயிரம் பேர் கொண்ட படையை உருவாக்கி மெக்காவின் மேல் போர் தொடுக்கிறார்.

நான்கு திசையில் ஒருங்கினைந்து பாயும் முகம்மதின் முஸ்லிம் படையை மெக்கா வாசிகளால் எதிர் கொள்ள இயலவில்லை. "இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு சரனடைகிறீர்களா அல்லது உயிர் துறக்கிறீர்களா ? " என்று கேட்கிறார் முகம்மது. "மெக்காவில் உள்ள தெய்வங்களால் எங்களை காக்க இயலவில்லை ஆகையால் நங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு சரனடைகிறோம்" என்கிறார்கள் மெக்காவாசிகள்.

அதன் பின் முகம்மது மெக்காவின் காபாவில் உள்ள‌ பாகன் கோவில்களை தாக்குகிறார். மெக்காவின் காபாவில் 360 தெய்வ சிலைகள் இருக்கின்றன. அவை வருடத்தின் ஒவ்வொரு நாளை குறிக்கின்றன (இந்திய பஞ்சாங்கத்தின் படியும் 360 நாட்களே என்பது குறிப்பிடத்தக்கது) முகம்மது அவற்றை சூரையாடுகிறார். அல்லாவின் மூன்று மகளின் ஒருத்தியாக கருஞ்சதுரக் கல்லில் பாகன்களால் வணங்கப்பட்ட அல்லத் (Al-Lat) ஐ மட்டும் உடைக்காமல் வைக்கிறார். அதுதான் இன்று காபா கல்லாக இஸ்லாமியர்களால் பாகன் வழக்கப்படி ஹஜ் மற்றும் உம்ராவின் போது முத்தமிடப்படுகிறது.

முகம்மது அவர்கள் இஸ்லாம் என்று புதிய ஒரு வழிமுறையை உருவாக்கினாலும், அது மிகப்பெரும்பாலும் பாகன்களின் வழிபாட்டு முறைகளையே கொண்டிருந்தது அது குறித்து அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :