Saturday, November 21, 2015

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 13

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 13

Englightened Master

 


முகம்மது அவர்கள் தொடக்கத்தில் மாற்று நம்பிக்கையாளர்களுடன் உடன்படிக்கை ஒப்பந்தம் செய்திருந்தார்.. ஆனால் அவர் பலம் பெற தொடங்கியதும், அல்லாவிடம் இருந்து ஒரு "வஹி" (இறை செய்தி) இறக்கி அதை திருப்ப பெற்றுக் கொள்கிறார். [ குரான் 9:3. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (முஸ்லீம் அல்லாதவர்) செய்திருந்த உடன்படிக்கையை விட்டு நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர் ]

இப்படி பல இடங்களில் இறை செய்திக‌ள் இறங்குகின்றன. உள்ளூர் கோவில்களில் சில ஏமாற்று பேர்வழிகள் சாமி வந்து குறி சொல்வதாய் சொல்லி தங்கள் சொந்த பிரச்னைகளை தீர்த்துக் கொள்வது போல் அல்லவா உள்ளது இது ?

இதோ இந்த‌ வசனத்தில் அல்லா பயங்கரமான கோபத்தோடு கட்டளை இடுவதாக வஹி இறக்குகிறார் முகம்மது

[குரான் 47:4. முஃமின்களே (முஸ்லீம்கள்) நிராகரிப்பவர்களை (இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாதவர்களை) நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து நீங்கள் அவர்களை வென்று விட்டால் அவர்களுடைய கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு உதவியும் செய்யாமல் அவர்களை விட்டு விடுங்கள். அவர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் இது இறை கட்டளையாகும் அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான் ]

மாற்று மதத்தவர்களை வெறித்தனமாக கொல்வதை இறைவனே ஆனையிடுவதாய் இந்த வசனத்தின் மூலம் காட்டுகிறார் முகம்மது. இப்படிப்பட்ட வசனங்கள் மூலமாக மாற்று மதத்தவர்களையும், இஸ்லாமில் நம்பிக்கை இல்லாதவர்களையும் கொலை செய்வதில் தவறே இல்லை என்பது உணர்த்தப்படுகிறது. மேலும் அப்படி கொலை புரிபவர்கள் கொல்லும் போது இறக்க நேர்ந்தால் அவர்களுக்கு அல்லா மறுமையில் முழு பயனையும் தருவான் என்பதாக அதே வசனத்தில் (47:4) தொடர்கிறார் முகம்மது. ["ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்"]

அடுத்து முகம்மது அவர்கள் அல்லாவோடு தன்னையும் சேர்த்து வஹி இறக்கிக் கொள்கிறார். அதாவது முகமதோடு போர் புரிபவர்களும் அல்லாவோடு போர் புரிபவர்களும் வேறு வேறில்லை என்று இந்த வஹியில் காட்டுகிறார் அல்லா. [ 5:33. "அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு" ]

இந்த இறைசெய்திகளால் ஏதும் அறியாத அரேபிய பாலைவன பழங்குடி கூட்டங்களுக்கு ஒரு பெரும் உந்துசக்தி கிடைக்க பெறுகிற‌து. சகிப்புத் தன்மை என்பது சுத்தமாக அற்று போகிற‌து. தன்னுடைய ஒரு நம்பிக்கையை வன்முறையின் மூலமாக மற்ற நம்பிக்கையாளர்களின் மீது தினித்துக் கொள்ளலாம். அதன் மூலம் ஆளுமையையும் பெற்றுக் கொள்ளலாம். இது இறைவனின் ஆனை. இது வன்முறை இல்லை, அப்படியே இறந்தாலும் மறுமையில் பெரும் இன்பங்களை இது கொடுக்கக் கூடியது. இப்படி உறுதியாக நம்ப தொடங்கினார்கள்.

இது காட்டுத் தீ போல பழங்குடியினரிடம் பரவ தொடங்கியது. கரும்பு தின்ன கூலியா ? என்பது போல், பல நாடுகளை சூரையாடி செல்வமும், அழகிகளும் கிடைக்கப்பெற்றால் ? அதை இறைவனும் அங்கீகரித்தால் ? அப்படி செய்ததற்கு மறுமையிலும் இறைவன் பரிசு அளித்தால் ? யார் தான் வேண்டாம் என்பார்கள் ?

இதனால் தான் முகம்மது அவர்களின் மரண‌த்திற்கு பின்னும் முஸ்லீம் படை எல்லா நாடுகளுக்கும் பரவியது. மாற்று மதத்தினரை கொன்று குவித்தது. அடிமை படுத்தியது. வாளாலும், வன்முறையாலும் வளர்ந்தது.

மேலும் தொடரும்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :