Wednesday, September 14, 2016

Keerthivasan

அவுரங்கசீப் எழுதிய உயில்

 

போரில் சூழ்ச்சியாலும் பல ஆயிரம் முகலாயர்கள் சேர்ந்து வெறும் 40 சீக்கியர்களை தாக்கிய போரில் வெற்றி பெற்றார் அவுரங்கசீப். அதன் பின்னர் குரு கோபிந்த சிங்கும் தப்பிக்க வேண்டிய நிலைமை. கடிதத்துக்கு ஒரு பெயர் உள்ளது. ஜாபர்னாமா. போர் பற்றிய விவரங்களை தவிர்க்கிறேன். இந்த கடிதம் அவுரங்கஜீபை அடைந்ததும், இதை படித்த பின்னர் அவரது நிலைமை கவலைக்கிடமானது. பெரும் துன்பம் செய்தேன் என்றார். கடிதத்தில் இருந்த ஆன்மிக பொருள், வீர வாக்கியங்கள் அவரை தாக்கின. தான் பாராளும் வேந்தனல்ல என்று உணர்ந்தார். சில நாட்களில் உடல் தளர்ந்து, மனம் தளர்ந்து இறந்தார்.

நமக்கெல்லாம் அவுரங்கசீப் ஒரு தாலிபானாக, அன்று இருந்த ஒரு ISIS காரனாகத்தான் தெரியும். ஒரு நேர்மையான கடிதத்தை பார்த்த பின்னர், வெறும் கடிதம் மூலமாக வெளிப்படையாக உண்மை ஒரு மனிதரை சந்தித்த பின்னர் அவருக்கு நடந்த ஒரே மாற்றம் மரணம். அதற்கு முன்னர் அவர் தன் வாழ்க்கையி வெறுத்தார். நிலை கொள்ளவில்லை. உயில் எழுதினார். இதை ஹிந்துக்கள் படிக்கவேண்டும். உங்கள் முஸ்லீம் நண்பர்களிடம் பகிர்ந்து படிக்க சொல்லவேண்டும். குரானின் வழிகாட்டுதல் படி வாழ்ந்த ஒரு மனிதன் கடைசியில் உண்மையை எதிர்கொள்ள முடியாமல் எப்படி தவித்தான் என்று மக்கள் உணரட்டும்.

எனக்கு நான் யார் என்று தெரியவில்லை. எங்கிருக்கிறேன், எங்கு செல்லவேண்டும், என்னை போன்ற ஒரு பாவிக்கு என்ன நேரும் என்று தெரியவில்லை. என்னை போல வந்து சென்றுவிட்டார்கள். அல்லா என் மனதில் இருந்தார். நான்தான் அவரை உணராமல் போய்விட்டேன். அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் நான் எப்படி வரவேற்கப்படுவேன் என்று தெரியவில்லை. எனக்கு நல்ல எதிர்காலம் சொர்க்கத்தில் அமையும் என்று நம்பவில்லை. நிறைய பாவங்களை செய்துள்ளேன். என்ன தண்டனை கிடைக்கும் என்று தெரியவில்லை.

நான் இந்த பாரதத்தை ஆண்டேன் என்பதில் ஐயமில்லை. இந்த காலத்தில் என்னால் ஒரு நல்ல காரியம் கூட செய்யவில்லை. என்னுடைய ஆத்மா என்னை சபிக்கிறது. இப்போது வருந்தி என்ன பயன்? என்னுடைய கடைசி காரியத்தை என் மகன் ராஜம் செய்யட்டும். வேறு யாரும் என்னுடலை தீண்ட வேண்டாம்.

குரான் எழுதி, தொப்பி செய்து விற்ற பணம் உள்ளது. அதிலே எனக்கு சவப்பெட்டி வாங்குங்கள். என் பிணத்தை மூட வேண்டாம்.

குரான் விற்ற பணம் ஆயா பேஜிடம் உள்ளது. அதில் ஏழை முஸ்லிம்களுக்கு உணவளியுங்கள்.

என்னுடைய பொருட்களை என் மகனிடம் தந்துவிடுங்கள். அடர்ந்த காட்டில், முகம் ஆகாயத்தை பார்த்தபடி என் பிணத்தை புதையுங்கள். சொர்கத்துக்கு முகம் காட்டி போனவனது பாவம் மன்னிக்கப்படும் என்று படித்திருக்கிறேன்.

தடிமனான மரத்தால் என் சவப்பெட்டியை செய்யுங்கள். விலை உயர்ந்த பொருட்களை அதில் வைக்காதீர்கள். பாதையில் பூக்களை தூவாதீர்கள். என் கல்லறையின் மீது பூக்கள் வைக்கப்படக்கூடாது. இசை கூடாது. நான் அதை வெறுக்கிறேன்.

எந்த ஒரு கட்டிடமும், நினைவுச்சின்னமும் எழுப்பப்படக்கூடாது. வெறுமனே ஒரு மேடையை அமைத்துக்கொள்ளுங்கள்.

என் படை வீரர்களுக்கும், வேலையாட்களுக்கும் சம்பளம் தரவில்லை. கஜானா காலி என்பதை அறிவேன். குறைந்தது என் வேலையாட்களுக்காவது சம்பளத்தை தாருங்கள். நியமட் அலி எனக்காக உண்மையாக உழைத்துள்ளான். என்னையும் கட்டிலையும் தூய்மையாக பார்த்துக்கொண்டான்.

என் நினைவாக மசூதி கூடாது, கல் பதாகை கூடாது. மரங்கள் கூடாது. என் பிணம் மாற நிழலுக்கு அருகதை அற்றது.

என் மகன் ஆஜாம், டில்லியை ஆளட்டும். கம் பக்ஷ் பீஜப்பூர் கோல்கொண்டாவை ஆளட்டும்.

அல்லாஹ் யாரையும் மன்னனாக்க கூடாது. அப்படி ஆகிறவன் துர்பாக்கியசாலி. என் பாவங்களை எந்த கூட்டத்திலும் படிக்காதீர்கள். என் வாழ்க்கை பாடத்தை யாருக்கும் சொல்லவேண்டாம்.

(அவுரங்கசிபின் விருப்பப்படி அவரது கல்லறை செங்கலால் கட்டப்பட்டது. மற்ற ஆசைகளை காற்றில் விட்டுவிட்டார்கள். அங்கு ஒரு மசூதி கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. தொழுகை நடக்கிறது. பாங்கு ஓதுகிறார்கள். வெளியே நின்று பார்க்க முடிகிற இடம் வரை போய் வந்தேன். உள்ளே போகவில்லை, தீட்டு என்பதால்.)

ஒரு பயங்கரவாதியை மன்னனானால் என்ன ஆகும் என்பதை இந்த நாடு அவுரங்கசீப் மூலம் பார்த்துவிட்டது. ஆனால், அப்படிப்பட்ட ஆள், ஒரு சத்தியம் நிறைந்த கடிதத்தை பார்த்து, மனம் வெறுத்து, தன்னையே வெறுத்து, தான் ஒரு மனிதனே அல்ல என்று கூறும் அளவுக்கு என்னென்ன பாவங்கள் செய்திருந்தால், அவை அத்தனையும் நினைவுக்கு வந்து இறக்கும் தருவாயில், அச்சத்தில் நடுங்கி, மனப்பிராந்தியால் கண்ட காட்சிகளெல்லாம் ஓட, வாய்விட்டு அலறி, துடித்து, இருக்கிற உள்ளுறுப்புகள் பழுதாகி இறந்திருப்பான்?

என்னமோ, அப்படியே இருந்துவிடப்போகிறோம் என்று ஆட்டம் போட்ட பலரை பார்த்துவிட்டோம். பல நாடுகளையும் பார்க்கிறோம். கண் முன்னே சிதைந்த சாம்ராஜ்ஜியங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட நாடுகள் என்று பல. எத்தனை பேரை முஸ்லிமாக்கினேன் கிருஸ்தவனாக்கினேன் என்பதெல்லாம் கணக்கே அல்ல. ஸ்வாமி விவேகானந்தர் சொன்னது போல சுயநலமில்லாதது நன்மை. சுயநலமிகுந்தது தீமை. இந்த நோக்கில் அணுகினால் அனைத்தும் தீரும்.

Anand Venkat

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :