பாரத நாட்டில் கடவுள் மறுப்பும் செத்துப் போச்சு. கம்யூனிஸமும் செத்துப் போச்சு.
கடவுள் மறுப்பு இயக்கத்தை ஓர் அரசியல் இயக்கமாக மாற்ற ஈ.வெ.ரா அவர்கள் முயற்சித்தார். ஆனால் அவரது அடிப்பொடிகளே அதை நீர்த்துப் போகச் செய்துவிட்டனர். ஒப்புக்காகப் பகுத்தறிவு பேசினாலும் அவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு விதத்தில் ஆன்மிகத்தில் திளைக்கிறார்கள்.
குறிப்பாக கருணாநிதி அவர்களின் குடும்பத்தில் அவரது மனைவி மற்றும் துணைவியர், அவரது புதல்வி செல்வி, கருணாநிதியின் புதல்வர் ஸ்டாலின், அவரின் மனைவி துர்கா ஆகியோர் கோவில் கோவிலாகச் சென்று கும்பிடுவதும், யாகம் செய்வதுமாக இருக்கின்றனர் என்பதைத் தமிழக மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.
அதே போல இன்று கம்யூனிஸமும் காலாவதி ஆகிவிட்டது.
ஏனென்றால் இன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்களை ஏதோ Proletariat ஆக - ஏழைகள், பாட்டாளிகள், உழைப்பாளிகளாகவும், அப்படிப்பட்ட பிறரது நலனுக்காக வாதாடுபவர்களாகவும் தங்களைச் சித்தரித்துக் கொண்டுள்ளனர்.
ஆனால் இன்று அவர்கள் தான் முழுக்க முழுக்க #பூர்ஷ்வா'க்களாக மாறிப் போயிருக்கிறார்கள். அதாவது அன்னாடங்காய்ச்சிகளாக இருந்தத் தொழிலாளர்களை ஜமீந்தார்களுக்கு எதிராகத் தூண்டி விட்ட கம்யூனிஸ்ட்கள் இன்று அந்த ஜமீந்தார்களையே விழுங்கி ஏப்பம் விடக் கூடிய அளவு மாபெரும் முதலாளித்துவ நிலப் பிரபுக்களாக உருவெடுத்துள்ளனர்.
கேரளத்தில் இருக்கின்ற ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தலைவர்களின் குடும்பத்தினரும் அயல்நாடுகளிலே மிகப் பெரிய அளவிலே தங்களுடைய பெயரிலும், பினாமி பெயரிலும் தொழில் நடத்தி சொத்துக்களைக் குவித்து வருகிறார்கள்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் கேரள சி.பி.எம்- ன் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனுடைய மகன்கள் பினீஷ், பினோய் இருவருமே வெளிநாட்டிலே பெரிய வர்த்தக நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். மகன்களுக்கு மூலதனம் எங்கிருந்து வந்தது? தந்தை தான் தந்தாரா? என்பதெல்லாம் விசாரணைக்கு உரிய விஷயங்கள்.
சி.பி,எம்- ஐச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி.கே.ஸ்ரீமதி இப்பொழுது எம்.பி ஆக இருக்கிறார். இவர் தனது ஆங்கிலப் புலமையை முன்னரே வெளிப்படுத்தி இருந்தால் வெள்ளைக்காரன் சீக்கிரமே நம் நாட்டை விட்டு ஓடியிருப்பான். அவ்வளவு சிறப்பான ஆங்கில அறிவு அவருக்கு. அவரது மகன் சுதிர் நம்பியாரும் வெளிநாட்டிலே தான் வர்த்தகம் செய்து வருகிறார்.
அதே போல கேரளாவின் இன்றைய தொழிற்துறை அமைச்சர் ஈ.பி.ஜெயராஜன்- ன் மகனுக்கும் வெளிநாட்டிலே தான் வியாபாரம்.
அதோடு மட்டுமல்ல இன்றைய முதலமைச்சராக இருக்கக் கூடிய பினரயி விஜயன் அவர்களுக்கு பப்பு போன்ற ஒரு மகன் இருக்கிறார். அவரது பெயர் விவேக் கிரண். 'யூ.ஜி'ல ஃபெயில் ஆனாலும் கூட இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்திலே 'பி.ஜி' கல்வி கற்றார். அவருக்கு எப்படி இடம் கிடைத்தது, இவர் எப்படிப் பணம் அனுப்பினார் என்பதெல்லாம் வெளியே தெரிய வேண்டும்.
அந்நியக் கார்களையும், ப்ராண்டட் உடைகளையும் வாங்கி வெளிநாடுகளிலே வர்த்தகம் செய்து பணத்திலே கொழித்துக் கொண்டிருக்கிற கூட்டமாகத் தான் இன்றைய கம்யூனிஸ்ட்கள் இருக்கின்றனர்.
உலக அளவிலே ஒழிந்து விட்ட கம்யூனிஸத்தின் எச்சமாக இந்தியாவிலே மிஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச கம்யூனிஸ்ட்களின் ஒற்றை ஆட்சியையும் அந்தக் கூட்டம் ஒரேடியாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
ஆகவே இன்று யார் பூர்ஷ்வாக்கள்?
கம்யூனிஸ்ட்டுகள்!!
அதே போல யார் நாத்திகவாதிகள்?
தங்களுடைய குடும்பத்தாரை விட்டு யாகங்களும், யக்ஞங்களும் நடத்துபவர்கள்!!
எனவே இந்நாட்டில் கடவுள் மறுப்பிற்கோ கம்யூனிஸத்திற்கோ இனிமேல் எள்ளளவும் இடம் கிடையாது என்பதை இவர்களே இந்தச் சம்பவங்கள் மூலம் நமக்கு நிரூபிக்கின்றனர்.
இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களை உயர்த்திப் பிடித்த மாயப் பிம்பம் விலகிவிட்டது! நம்மைச் சுற்றி மிச்சமிருக்கும் மாயத்திரையும் அகலும் நாள் வெகு தொலைவில் இல்லை!!
FROM: H Raja's FB POST