Tuesday, August 22, 2017

Keerthivasan

EXCLUSIVE FOR Memes பார்த்து ஷோல்டரை தூக்கும் போராளிஸ்...

நினைத்தேன் பகிர்கிறேன்...




சில வருடங்களாக நம்ம மாநிலத்தில் போராளிகள் அதிகமாகிவிட்டார்கள். எதற்கு ஏன் என்றெல்லாம் தேவையில்லை எதற்கெடுத்தாலும் புரட்சிதான் போராட்டம் தான்.

இதே போராளிகள்தான் கல்யாண் ஜிவல்லரிக்கு எதிராக போராட்டம் புரட்சி என்று காமடி செய்தவர்கள் என்பது ஒருபுறம்...

இங்கு நானோ என்னுடன் ஒரு சில பேரோ உங்களை போல ஒரு Memes பார்த்ததும் பொங்குவதில்லை. அந்த Memes உருவாக்கியது யார் என்பது முதல் அந்த பக்கம் யார் அட்மீன் என்று வரை பார்த்து அதற்கு முந்தைய பதிவுகள் வரை நோண்டி நொங்கெடுத்து ஒரு முடிவுக்கு வந்து சில பல பத்திரிகை லிங்குகளை புரட்டி என பகிரதினப்பட்டுதான் ஒரு பதிவை ஆரம்பிக்கிறோம்.

உங்களை போல் Memes் பார்த்து போராடும் அளவிற்கு நாங்கள் இல்லை அதனால்தான் பார் போற்றிய மெரீனா புரட்சியை ஆரம்பம் முதல் எதிர்த்தோம், பலரை நேரிலும் பதிவிலும் எச்சரித்தோம். காவல்துறை நடவடிக்கைக்கு முந்தைய நாள் இரவு கூட அங்கு பேக்காட்டம் சுற்றிக் கொண்டிருந்த நண்பனை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தேன்.

சில விசயங்களை லாஜிக்கா யோசிக்காம தமிழ்டா பெரியார் மன்னுடா என்று புலம்புவதும் வசனம் பேசுவதும் பேஷனாகிவிட்டது யதார்த்தம் என்ன உண்மையில் சட்டம் என்ன அதிகாரம் யார் கையில்? போராட்டங்களின் செலவுகள் எப்படி சமாளிக்கப்படுகிறது? இந்த போராட்டங்களை புரோமோட் செய்யும் பேஸ்புக் பக்கங்களுக்கு நிதி ஆதாரம் எது என்று யோசிக்க ஆரம்பித்தாலே உங்களுக்கு பல பிரச்சனை புரிய வரும்...

கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் பொய் என்பதை மனதில் நிறுத்தி நீங்கள் ஆதரிக்க நினைக்கும் விசயங்களின் அடிப்படை உண்மைகளை தெரிந்து போராடுங்கள் இல்லையேல் எதிர்காலத்தில் போராட்டம் என்றாலே கேலிக்கூத்தாகிவிடும்...

பிறகு எந்த ஒரு நல்ல நோக்கத்திற்கும் போராட்டமே செய்ய முடியாத காலம் வந்துவிடும் ஏற்கனவே உண்டியல்களின் அளப்பரையால் இப்பவே பாதி போராட்டங்கள் அப்படிதான் இருக்கிறது.

ஜனநாயகத்தில் போராட்டம் என்பது மக்களின் உரிமை அவை கேளிகூத்தாகிவிடாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை...

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :