Tuesday, August 22, 2017

Keerthivasan

அழுவதா? சிரிப்பதா?

நினைத்தேன் பகிர்கிறேன்...




மக்கள் மன்றத்தில் சைமனின் பேச்சை கேட்டு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. உண்மையில் சைமனை சொல்லி குற்றமில்லை. எதுகை மோனையில் ஏற்ற இறக்கத்துடன் யார் "வசனம்" பேசினாலும் கைதட்டும் விசலடிச்சான் குஞ்சுகளைதானே இந்த திராவிட திராபைகள் உருவாக்கி இருக்கிறது?

இரண்டு நாட்கள் முன்பு என் வீட்டின் அருகில் வசிக்கும் தம்பியிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது பேச்சு மத்திய அரசின் பக்கம் திரும்ப "அண்ணா இந்த மோதிய பத்தி மட்டும் பேசாதீங்க" என்றுதான் ஆரம்பித்தானே.

அவன் கவலைக்கு முதல் காரணம் சென்னையில் இருக்கும் நிசான் கார் கம்பெனியில் ஆயிரத்திற்கும் மேலானவர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதுதான். அது எதனால் ஏன் என்பது எனக்கு இன்னும் சரிவர தெரியவில்லை ஆனால் இந்த தம்பியின் காதிற்கு வந்த செய்து GST...

ஆம் நீங்கள் சரியாகத்தான் படித்திருக்கிறிர்கள் இந்த வேலை நீக்கத்திற்கு காரணம் GST என்று சொல்லிருக்கிறார்கள்.

எனக்கு புரியவில்லை இதற்கும் வரி விதிப்பிற்கும் என்ன சம்பந்தம்? ஏன் உளறுகிறான் என மெல்ல அவனுக்கு எடுத்து சொல்லி 3 மணி நேரம் பல விசயங்களில் அவன் கேட்டதிற்கு மொபைலில் ஆதாரங்களை காட்டி அவனுக்கு புரிய வைப்பதற்குள் எனக்கு போதும் போதும் என ஆகிவிட்டது.

நம்ம மாநில நிலைமை இதுதான். அதனால்தானோ என்னவோ "பாண்டே" போல அறிவாளிகள் இருக்கும் சபையில் கூட சைமன் போன்றவர்களால் பொய்யை பரப்ப முடிகிறது. சைமன் முட்டாள் இல்லை இந்த மாநில மக்களின் முட்டாள்தனத்தை தனக்கு முதலீடாக பயன்படுத்த தெரிந்த வியாபாரி...

பாண்டே நினைத்திருந்தால் ஒவ்வொரு பொய்களுக்கும் இடைமறித்து பதில் சொல்லி தெளிவை ஏற்படுத்தியிருக்கலாம். பாவம் நமக்கு என்ன தெரியும் அவருக்கு என்ன கட்டாயமோ அமைதி காக்க...

மாநிலத்தின் நிலையை நினைத்து அழுவதா?
முட்டாலாகிவிட்ட மக்களின் இயலாமையை நினைத்து சிரிப்பதா? ஒன்றும் புரியவில்லை...

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :