Tuesday, August 22, 2017

Keerthivasan

நினைத்தேன் பகிர்கிறேன் - நடுநிலை வகிப்போர்க்கு...

நடுநிலை வகிப்போர்க்கு...


பீமனுக்கும் துரியோதனனுக்கும் கதாயுதம் கற்றுத்தந்த ஆசான் பலராமன்...

துரியோதனின் தொடைக்கு கீழே பீமன் அடித்து வீழ்த்தி விட்டான் என்று அறிந்ததும் கோபத்துடன் பீமனை கொல்ல எத்தனித்தான்...

அப்போது அவனைத் தடுத்த கிருஷ்ணன்...

எங்கே செல்கிறாய் பலராமா..? என்று கேட்க

பலராமன்:
இருவருக்கும் நான்தான் ஆசான் ஆனால் யுத்த தர்மத்தை மீறி பீமன் துரியோதனனை வீழ்த்தி விட்டான்...

அதனால் பீமனை நான்
வீழ்த்துவேன் என்று சீறினானாம்...

கிருஷ்ணன் அதற்கு சிரித்துக் கொண்டே அப்படி செய்ய உனக்கு என்ன உரிமை இருக்கிறது...?

யுத்தம் நடந்த போது ஒன்று தர்மத்தின் பக்கமாக நின்று அர்ஜுனனுக்காக போர் புரிந்திருக்க வேண்டும்...

அல்லது அதர்மத்தின் பக்கமாகவாவது நின்று துரியோதனனுக்காக போர் புரிந்திருக்க வேண்டும்...

ஆனால்,
யார் எக்கேடு கெட்டால்
நமக்கு என்ன என்று யாத்திரை போன உனக்கு பீமனை தண்டிக்க ஒரு உரிமையும் கிடையாது என்று உரைத்தானாம்...

பலராமனாவது இருவருக்கும் வித்தை சொல்லிக் கொடுத்த ஆசான் என்ற அளவில் சிறிது உரிமை இருந்த போதே அவனது செயலை கிருஷ்ணன் கண்டித்து தடுத்து விட்டான்...

ஆனானப்பட்ட

பலராமனுக்கே இப்படி....

அப்படி இருக்கும்போது நமக்கு மாற்று மதத்தவர்கள் எல்லா விதத்திலும் தொல்லை கொடுத்து அசிங்கப்படுத்திய காலத்தில்....

எந்த பக்கமும் இல்லாமல் அனைத்தையும் வேடிக்கை பார்த்துவிட்டு....

சில ஹிந்துக்கள் திருப்பி அடிக்க நினைக்கும் போது மட்டும்....

ஹிந்துக்கள் மீதே பாயும் நடுநிலைவாதிகளாக
காட்டிக் கொள்ளும் அரைவேக்காடுகளுக்கும்
கிருஷ்ணன் சொன்ன
பதில் தான் இது...

வேடிக்கை மட்டும் பாருங்கள் விமர்சிக்கவோ தண்டிக்கவோ தகுதியில்லாதவர்கள் நீங்கள்...!

- Keerthivasan

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :