குருவின் அவசியம் - 2
கடந்த
பதிவில் குரு நிந்தனை ஏன் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தேன்.
உங்களுக்கு பிடிக்காத ஆன்மீகவாதிகளை ஒதுக்கி விட்டு பிடித்தவர்களை
பற்றிக்கொள்ளுதல் நலம்.
பலருக்கு குரு என்றால் யார் என்கிற புரிதல் தவறாக இருக்கிறது. இதற்கு போலி சாமியார்களும் காரணம் என்றாலும் பலர் இது பற்றி தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் சொன்னார் "BETWEEN ME AND MY MAKER, I DON'T NEED A BROKER" என்று. அவர் சொல்வது பாதி உண்மை. புரோக்கர் போல் செயல்படும் போலி ஆன்மீக வாதிகளை புறக்கணிப்போம். ஆனால் வழிகாட்டி (GUIDE) போல் செயல்படும் ஆன்மீகவாதிகளை பற்றுதல் நலம். எனக்கு எதற்கு ஆன்மீக வாதிகள் - நான் இறைவனிடம் நேரடியாகவே வேண்டுகிறேன் என்று சொல்வோர் அருணகிரிநாதரின் கந்தர் அநுபூதியின் கீழ்க்கண்ட வரிகளை படியுங்கள்:
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
இதில் கடைசி வரியை பாருங்கள். இறையருள் பெற்ற அருணகிரிநாதர் முருகப்பெருமான் தனக்கு குருவாக வந்து அருள வேண்டும் என்று சொல்கிறார். ஏன், கடவுள் கடவுளாகவே வந்து அருள்புரியட்டும் என்று சொல்ல வேண்டியது தானே? ஏன் குருவாக வந்து அருள வேண்டும் என்று விரும்புகிறார்? இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது அருணகிரிநாதர் போன்ற சித்தர்களுக்கே குரு என்று ஒருவர் தேவைப்படுகிறார். அவருக்கு முருக பெருமானுடன் நெருக்கம் இருந்ததால் முருக பெருமானே குருவாக அருள் புரிந்திருக்கிறார். நம்மை போன்ற சாதாரண பிறவிகளுக்கு குரு என்று ஒருவர் தேவை என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
இன்னொரு உதாரணத்தை பார்ப்போம். மழை நீரானது குளங்களிலும் குட்டைகளிலும் விழுகிறது. வெயில் அடிக்கும்போது வற்றி ஆவியாக மேலே எழும்பி மேகமாக மாறுகிறது. மீண்டும் மழை பொழிகிறது. மீண்டும் குளம் குட்டைகளில் நீராக தேங்குகிறது. ஆனால் கடல் நீரை எடுத்து கொள்ளுங்கள். கடல் நீர் வற்றுவதே இல்லை. ஆகவே அந்த மழை நீர் கடலிலே விழுந்தால் மீண்டும் வற்றாமல் கடலிலேயே தங்கும். அப்படி கடலிலே கலக்க வேண்டும் என்றால் மழை நீர் ஒரு நதியில் விழ வேண்டும். நதி நீர் கடலில் கலக்கும்போது அந்த மழை நீரை கடலில் சேர்க்கும். அது போல் குரு என்பவர் பிறப்பு - இறப்பு, மீண்டும் ஒரு தாய் வயிற்றில் உறக்கம் என்கிற நிலையில் இருந்து நம்மை விடுவித்து இறைவனின் ஜோதியில் நம்மை ஐக்கியமாக்கி விடுவார். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ஏதாவது உருவில் வந்து நம்மை கை தூக்கி விடுவார்.
ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்னும் சுலோகத்தில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார் :
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹு தூஸ்தாரே
கிருபயா பாரே பாஹி முராரே
ஆகவே பிறப்பு - இறப்பு என்கிற மீளா சக்கரத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்கு குரு என்று ஒருவர் தேவைப்படுகிறார் என்று நம்புகிறவர்கள் தொடர்ந்து வரும் பதிவுகளை படியுங்கள்.
அடுத்த பதிவில் குரு பரம்பரை தோன்றிய விதம் பற்றி எழுதுகிறேன்.
பலருக்கு குரு என்றால் யார் என்கிற புரிதல் தவறாக இருக்கிறது. இதற்கு போலி சாமியார்களும் காரணம் என்றாலும் பலர் இது பற்றி தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் சொன்னார் "BETWEEN ME AND MY MAKER, I DON'T NEED A BROKER" என்று. அவர் சொல்வது பாதி உண்மை. புரோக்கர் போல் செயல்படும் போலி ஆன்மீக வாதிகளை புறக்கணிப்போம். ஆனால் வழிகாட்டி (GUIDE) போல் செயல்படும் ஆன்மீகவாதிகளை பற்றுதல் நலம். எனக்கு எதற்கு ஆன்மீக வாதிகள் - நான் இறைவனிடம் நேரடியாகவே வேண்டுகிறேன் என்று சொல்வோர் அருணகிரிநாதரின் கந்தர் அநுபூதியின் கீழ்க்கண்ட வரிகளை படியுங்கள்:
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
இதில் கடைசி வரியை பாருங்கள். இறையருள் பெற்ற அருணகிரிநாதர் முருகப்பெருமான் தனக்கு குருவாக வந்து அருள வேண்டும் என்று சொல்கிறார். ஏன், கடவுள் கடவுளாகவே வந்து அருள்புரியட்டும் என்று சொல்ல வேண்டியது தானே? ஏன் குருவாக வந்து அருள வேண்டும் என்று விரும்புகிறார்? இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது அருணகிரிநாதர் போன்ற சித்தர்களுக்கே குரு என்று ஒருவர் தேவைப்படுகிறார். அவருக்கு முருக பெருமானுடன் நெருக்கம் இருந்ததால் முருக பெருமானே குருவாக அருள் புரிந்திருக்கிறார். நம்மை போன்ற சாதாரண பிறவிகளுக்கு குரு என்று ஒருவர் தேவை என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
இன்னொரு உதாரணத்தை பார்ப்போம். மழை நீரானது குளங்களிலும் குட்டைகளிலும் விழுகிறது. வெயில் அடிக்கும்போது வற்றி ஆவியாக மேலே எழும்பி மேகமாக மாறுகிறது. மீண்டும் மழை பொழிகிறது. மீண்டும் குளம் குட்டைகளில் நீராக தேங்குகிறது. ஆனால் கடல் நீரை எடுத்து கொள்ளுங்கள். கடல் நீர் வற்றுவதே இல்லை. ஆகவே அந்த மழை நீர் கடலிலே விழுந்தால் மீண்டும் வற்றாமல் கடலிலேயே தங்கும். அப்படி கடலிலே கலக்க வேண்டும் என்றால் மழை நீர் ஒரு நதியில் விழ வேண்டும். நதி நீர் கடலில் கலக்கும்போது அந்த மழை நீரை கடலில் சேர்க்கும். அது போல் குரு என்பவர் பிறப்பு - இறப்பு, மீண்டும் ஒரு தாய் வயிற்றில் உறக்கம் என்கிற நிலையில் இருந்து நம்மை விடுவித்து இறைவனின் ஜோதியில் நம்மை ஐக்கியமாக்கி விடுவார். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ஏதாவது உருவில் வந்து நம்மை கை தூக்கி விடுவார்.
ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்னும் சுலோகத்தில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார் :
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹு தூஸ்தாரே
கிருபயா பாரே பாஹி முராரே
ஆகவே பிறப்பு - இறப்பு என்கிற மீளா சக்கரத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்கு குரு என்று ஒருவர் தேவைப்படுகிறார் என்று நம்புகிறவர்கள் தொடர்ந்து வரும் பதிவுகளை படியுங்கள்.
அடுத்த பதிவில் குரு பரம்பரை தோன்றிய விதம் பற்றி எழுதுகிறேன்.