Saturday, January 24, 2015

Keerthivasan

கட உபநிஷதத் தத்துவங்கள் - 3 - பிறவிப் பெருங்கடலில்

பிறவிப் பெருங்கடலில் :

      இந்தக் குறள் நம் அனைவர்க்கும் தெரிந்திருக்கும். பிறவிப் பெருங்கடலை நீந்தாத மனிதரால் இறைவனடி சேர்வது இயலாது என்று வள்ளுவர்பிரான் சொல்லியிருக்கிறார். இங்கு பிறவிகள் பற்றிய சில எண்ணங்களை கூற விழைகிறேன்.

      மனிதன் மொத்தம் இத்தனை லட்சம் பிறவிகள் எடுத்த பின்தான் முக்தியடைய முடியும் என்று சிலர் சொல்வதுண்டு. இதைக் கொஞ்சம் சிந்தித்தால் அத்தனாவது பிறவியின் முடிவில் தான் மனிதன் முக்தியடைய முடியும் என்பது போல ஒரு உள்ளர்த்தம் தோன்றும். இதை ஒரு லட்சம் பிறப்புக்கள் என்று கொள்வோம். இதில் இரண்டு விஷயங்களை சொல்லலாம். இது மனிதப் பிறவியின் கணக்கா இல்லை உயிரினமாக உருவாகிய பிறவிக் கணக்கா என்று தோன்றலாம். ஏனென்றால் ஈறாகிப் பேனாகி என்று வரும் பாடலைப் படித்தால் அத்தனைப் பிறவிகளைத் தாண்டித்தான் மனிதப் பிறவியே வாய்க்கும் என்று புரியும். இன்னொரு விஷயமும் உண்டு. மனிதன் மிகக் கீழான நிலையில் ஒரு பிறவியில் வாழ்ந்தால் அடுத்த பிறவியில் ஏதேனும் மிருகமாக கழுதையாக, நாயாக இப்படிப் பிறப்பான் என்றும் நமது சாத்திரங்கள் சொல்கின்றன. அப்படியானால் ஒரு லட்சம் மனிதப் பிறவிகள் என்பது மட்டும் சாத்தியமில்லை இடையிடையே இதர பிறவிகளும் வருவதால் என்றும் கொள்ளலாம். அதனால் இது உயிரினமாக ஒரு லட்சம் பிறவிகள் என்று கொள்ளளலாம்.

     இதையடுத்து இன்னொரு விஷயமும் உண்டு. சரி மனிதன் நல்வினை செய்கிறானோ அல்லது தீவினை செய்கிறானோ எப்படியிருந்தாலும் ஒரு லட்சம் பிறவிகள் எடுத்த பின் மட்டும்தானே அவனுக்கு முக்தி கிடைக்கப் போகிறது அப்படியானால் ஏன் நாம் நல்வினை செய்ய வேண்டும்? நம் மனம் போன போக்கில் சந்தோஷமாக வாழ்ந்து விட்டுப் போனால் போகிறது. எதற்காக நாம் நேர்மையாக, தெய்வ பக்தியுடன் நல்வினைகள் மட்டுமே ஆற்றி வாழ வேண்டும் என்று ஒரு சராசரியான மனிதனுக்குத் தோன்றாதா?? உண்மைதானே நான் சொல்வது? ஏன் நாம் பக்தி செலுத்த வேண்டும்? ஏன் நாம் ஞானம் பெற முயல வேண்டும்? ஏன் நாம் சரியாக நமது கர்ம வினையை ஆற்ற வேண்டும்?? இப்படிப்பட்ட சிந்தனைகள் சராசரியான மனிதனுக்கு வரவே கூடும்.

        இதை வேறு விதத்தில் நான் விளக்க முயல்கிறேன். எல்லாப் பிறவிகளும் கெடுசெயல்களே செய்துவந்த பாவியாகிய மனிதன் பலப்பல முறைகள் ஈறாகிப் பேனாகிப் பிறந்து அவன் பாவச்சுமை தாங்காமல் கடைசியாக அந்த ஒரு லட்சமாவது பிறவியில் மனம் திருந்தி ஏதோ ஒரு யோகத்தின் மூலம் முக்தியைப் பெறுவான் என்பதே இதன் கருத்தியலாகக் கொள்ள முடியும்.

       சரி அப்படியென்றால் அந்த மனிதனளவு பாவம் செய்யாத மனிதனுக்கு?? கண்டிப்பாக மேற்சொன்ன மனிதனை விடவும் குறைந்தளவு பாவங்களைச் செய்கின்ற வேறொரு மனிதனுக்கு அந்த ஒரு லட்சமாவது பிறவியில் தான் முக்தி என்கிற விதி கண்டிப்பாக இருக்காது. அவனுக்கு எழுபதாயிரமாவது பிறவியில் கிடைக்கலாம். இன்னொரு அவனை விட சிறந்த மனிதனுக்கு ஐம்பதாயிரமாவது பிறவியிலும் கூடக் கிடக்கலாம். நாம் எவ்வளவு சிறப்பாகப் படிக்கிறோமோ அதனை சிறப்பாக ரேன்க் வாங்குவோம் என்பதைப் போல்தான் இதுவும். இது போல இருந்தால் மட்டுமே மனிதனுக்கு தீவினைகளை அகற்றி நல்வினைகளை செய்யும் எண்ணம் தொன்றுமேயோழிய இத்தனையாவது பிறவியில்தான் என்று சொன்னால் வரவே வராது. இதையேதான் உபநிஷதக் கருத்தும் வலியுறுத்துகிறது. அது இன்னமும் பல பதிவுகள் தாண்டி எப்படி என்று சொல்கிறேன். அதற்கு முன் உள்ள பல விஷயங்களை அடுத்த பதிவில் சொல்ல விழைகிறேன்.

ஆக்கம்: துரோணாச்சாரியார்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :