ஒரு தத்வார்த்த பயணம் – 11 – ஹிந்து மதத்தில் இயற்கை சக்திகள் வழிபாடுகள்
இதர மதங்கள் போலன்றி ஹிந்து மதத்தில் இயற்கை சக்திகள் அனைத்துமே கடவுளர் நிலையில் வைத்து வணங்கப் படுகின்றன!! உண்மையில் பிரபஞ்ச சக்தி உள்ளிட்ட அனைத்து இயற்கை சக்திகள்தாம் இறை நிலையில் உருவம் தந்து வழிபாடுகள் செய்யப் படுவதாகக் கொள்ளலாம்!! அதை ஒரு புறம் வைத்து அடிப்படை இயற்கை சக்திகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்(அ) வெளி இவைகள் ஏன் நமது சனாதன தர்மத்தில் வழிபடப் படுகின்றன என்பதை சிந்தனை பூர்வ நிலையில் வைத்துப் பார்க்கலாம்!!
ஆரம்பக் கால மனிதன் ஆறரிவை உணராத நிலையில் வாழ்ந்தான்!! அவனுக்கு தான் இருக்கும் சூழலில் உள்ள மற்ற எல்லாமுமே பயத்தையே தந்தது!! அப்போது ஆயுதங்கள் எதுவும் செய்யத் தெரியாத சூழலில் காட்டில் இருந்த துஷ்ட மிருகங்களிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவே மிகவும் கஷ்டப் பட்டான்! இன்னொன்று அவன் உலகில் உள்ள பிரம்மாண்டத்தையும் தன் நிலையையும் எண்ணி வியப்படைந்தான்!!
இந்நிலையில் வாழும் பூமி என்னும் நிலம் அவனுக்கு கனிகளை, தாவரங்களை உணவாகத் தந்தது! அதேபோல நீரின் பயனும் தாகம் அடங்கும் நிலையில் அறிந்து கொண்டான்!! காற்றின்றி சுவாசிக்க இயலாது என்பதும் அவன் அறிந்த விஷயமாக இருந்தது!! முதன்முதலில் நெருப்பின் பயனை அவன் அறிந்து கொண்டது காட்டுத் தீ மூலம்தான்!! காட்டுத் தீயில் இறந்து கிடந்த மிருகங்களின் மாமிசத்தை உண்ட அவன் அதன் ருசியினால் உணவை சமைக்கும் கலையை அறிந்தான்!!இந்த இயற்கை சக்திகளால் தான் அடையும் பயன்கள் குறித்து அவன் மனதில் நன்றி உணர்ச்சி இருந்த அதே வேளையில் பய உணர்ச்சியும் இருந்தது!!
தனக்குப் பயன்களைத் தரும் இயற்கைச் சக்திகள் சீற்றமடைந்து போனால் அவை தனக்கு தரும் நாசத்தைக் கண்டே அவன் பயந்தான்!! நிலத்தில் பூகம்பமாகவும், நீர் பெருமழை வெள்ளமாகவும், காற்று கடும்புயலாகவும் நெருப்பு பெரும் காட்டுத் தீயாகவும் ஆகி கோரத்தாண்டவம் ஆடி மனித உயிர்களைப் பறித்தது கண்டு அவன் பயந்தான்!! அதனால் அவன் இந்தக் சக்திகளை சாந்த நிலையிலேயே தனக்குப் பயன்களைத் தரும் சூழலில் வைத்திருக்க எண்ணி அதனைத் தெய்வங்களாகக் கருதி அதற்கு வழிபாடுகள் செய்ய ஆரம்பித்தான்!!
அதையே ஹிந்து மதத்தில் நிலத்தை பூமாதேவி என்றும், நீரை வருணன் என்றும், நெருப்பை அக்னி என்றும், காற்றை வாயுபகவான் என்று பெயரிட்டு வணங்குகிறோம்!! எங்கும் நிறைந்த எல்லையில்லா வெளியான பிரபஞ்சத்தையே அறுதிக் கடவுள் நிலையில் வைத்து வணங்குகிறோம் என்றே கருதுகிறேன்!!
ஆரம்பக் கால மனிதன் ஆறரிவை உணராத நிலையில் வாழ்ந்தான்!! அவனுக்கு தான் இருக்கும் சூழலில் உள்ள மற்ற எல்லாமுமே பயத்தையே தந்தது!! அப்போது ஆயுதங்கள் எதுவும் செய்யத் தெரியாத சூழலில் காட்டில் இருந்த துஷ்ட மிருகங்களிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவே மிகவும் கஷ்டப் பட்டான்! இன்னொன்று அவன் உலகில் உள்ள பிரம்மாண்டத்தையும் தன் நிலையையும் எண்ணி வியப்படைந்தான்!!
இந்நிலையில் வாழும் பூமி என்னும் நிலம் அவனுக்கு கனிகளை, தாவரங்களை உணவாகத் தந்தது! அதேபோல நீரின் பயனும் தாகம் அடங்கும் நிலையில் அறிந்து கொண்டான்!! காற்றின்றி சுவாசிக்க இயலாது என்பதும் அவன் அறிந்த விஷயமாக இருந்தது!! முதன்முதலில் நெருப்பின் பயனை அவன் அறிந்து கொண்டது காட்டுத் தீ மூலம்தான்!! காட்டுத் தீயில் இறந்து கிடந்த மிருகங்களின் மாமிசத்தை உண்ட அவன் அதன் ருசியினால் உணவை சமைக்கும் கலையை அறிந்தான்!!இந்த இயற்கை சக்திகளால் தான் அடையும் பயன்கள் குறித்து அவன் மனதில் நன்றி உணர்ச்சி இருந்த அதே வேளையில் பய உணர்ச்சியும் இருந்தது!!
தனக்குப் பயன்களைத் தரும் இயற்கைச் சக்திகள் சீற்றமடைந்து போனால் அவை தனக்கு தரும் நாசத்தைக் கண்டே அவன் பயந்தான்!! நிலத்தில் பூகம்பமாகவும், நீர் பெருமழை வெள்ளமாகவும், காற்று கடும்புயலாகவும் நெருப்பு பெரும் காட்டுத் தீயாகவும் ஆகி கோரத்தாண்டவம் ஆடி மனித உயிர்களைப் பறித்தது கண்டு அவன் பயந்தான்!! அதனால் அவன் இந்தக் சக்திகளை சாந்த நிலையிலேயே தனக்குப் பயன்களைத் தரும் சூழலில் வைத்திருக்க எண்ணி அதனைத் தெய்வங்களாகக் கருதி அதற்கு வழிபாடுகள் செய்ய ஆரம்பித்தான்!!
அதையே ஹிந்து மதத்தில் நிலத்தை பூமாதேவி என்றும், நீரை வருணன் என்றும், நெருப்பை அக்னி என்றும், காற்றை வாயுபகவான் என்று பெயரிட்டு வணங்குகிறோம்!! எங்கும் நிறைந்த எல்லையில்லா வெளியான பிரபஞ்சத்தையே அறுதிக் கடவுள் நிலையில் வைத்து வணங்குகிறோம் என்றே கருதுகிறேன்!!
தொடரும்
ஆக்கம்: துரோணாச்சாரியார்