Saturday, July 25, 2015

Keerthivasan

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 2

கோட்சே வாக்குமூலம் – 2

குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 2.

8. இந்தக் குற்றச்சாட்டுக்கு முதன்மையான சான்றாவணம் திகம்பர் ஆர். பாட்கே (அரசுத்தரப்பு சாட்சி 57) சான்றாவணமாகும். ஆனால் பத்தி 6 ல் மேலே கூறப்பட்டதுபோன்று அவர் முற்றிலும் நம்பத்தகாத சாட்சியாவார்.இந்த சாட்சியான பாட்கே (அ.சா 57) எனக்குத் தெரிந்தவர். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அவர் என்னிடம் எதற்கும் வந்ததில்லை. நானும் அவர் இருப்பிடத்துக்குச் சென்றதுமில்லை. ஹிந்து ராஷ்ட்ரா அலுவலகத்துக்கு 1948 ஜனவரி 10 அன்று அவர் வந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட எண் 2 ஆகிய ஆப்தே அவரை அங்கு அழைத்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளது முற்றிலும் பொய். ஹிந்து ராஷ்ட்ரா அலுவலகத்திலோ அல்லது வேறு இடத்திலோ, அந்த நாளில் பாட்கே என்னைப் பார்த்ததாகக் கூறுவதை நான் மறுக்கிறேன். அவரும் ஆப்தேயும் வெடிப்பஞ்சுப்பலகைகள், கைக்குண்டுகள் முதலியவை பற்றியும், பம்பாயில் அவற்றை கொண்டு சேர்ப்பது குறித்தும் என்முன்னிலையில் தங்களுக்குள் பேசிக்கொண்டதாக பாட்கே பொய்யாக சுமத்தியுள்ளதை மறுக்கிறேன்.ஆப்தே என்னை அறையை விட்டி வெளியே வரச்சொன்னதாகவும், கைக்குண்டுகள் முதலியவற்றை பாட்கே ஒப்புவிக்கத் தயாராய் இருப்பதாக ஆப்தே என்னிடம் கூறியதாகவும் அவர் கூறியுள்ள அறிக்கை முற்றிலும் போய்யானதாகும்.என்னையும் மற்றவர்களையும், சாட்டப்பட்டுள்ள சதித்திட்டத்தில் தொடர்பு படுத்துவதற்காக இது பாட்கேயால் புனையப்பட்ட கதையாகும். தாதரில் 1948 ஜனவரி 14அன்று நான் பாட்கேவை தனியாகவோ, அல்லாமல் ஆப்தேயுடனோ ,பார்க்கவும் இல்லை, சந்திக்கவும் இல்லை. அன்று பாட்கே பம்பாய் வந்திருப்பதுகூட எனக்குத் தெரியாது.


9. குற்றப்பத்திரிகையில் "இரண்டாவதாக" என்ற தலைப்பில் பத்திகள் பி(1);(2) ஆகியவற்றில் குறிப்பிட்டிருப்பது போன்று 1948,ஜனவரி 20 அன்று டெல்லியில் இருக்கும்போது என் பொறுப்பிலோ அல்லது எனது கட்டுப்பாட்டிலோ அல்லது யாருடைய பொறுப்பிலோ எந்த ஆயுதங்களையும் அல்லது வெடிமருந்துப் பொருட்களையும் வைத்திருந்ததாகக் கூறப்பட்டதை நான் மேலும் மறுக்கிறேன்.

இங்கும் இந்தக் குற்றச்சாட்டை ஆதரிக்கும் சான்றாவணம் பாட்கேயுடயது மட்டுமே ஆகும்.அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பொய்யாக சான்றுரைத்துள்ளார்.அத்தகைய நிபந்தனையில் மட்டுமே அவருக்கு உறுதியளிக்கப்பட்டு வழங்கப்பட்ட மன்னிப்பை அவர் கைக்கொள்ள முடியும்.


10. "மூன்றாவதாக" என்ற தலைப்பின் கீழ் உள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாகவும்,தூண்டுதல்கள் தொடர்பாகவும் பல்வேறு பத்திகள் A(1); (2), B(1)(2) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவற்றை நான் மறுத்துக் கூறுகிறேன்.

11. "நான்காவதாக" என்ற தலைப்பின்கீழ் உள்ள இரண்டாம் பத்தி தொடர்பாக, 1948 ஜனவரி 20 அன்று பிர்லா இல்லத்தில் வெடிப்பஞ்சுப்பலகையை வெடிப்பதற்கு மதன்லால் கே.பாஹ்வாவை நான் தனியாகவோ ,மற்றவர்களுடன் சேர்ந்தோ,துண்டிவிட்டதாக்கூறுவதை நான் மறுத்துக் கூறுகிறேன். இந்தக் குற்றச்சாட்டை நிறுவுவதற்கு எந்தச் சான்றாவணமும் இல்லை.ஏதாவது சிறிதளவு சான்று இருந்தாலும் அது வெடிப்பஞ்சுப்பலகை வெடிப்புடன் என்னைத் தொடர்பு படுத்த இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

12. குற்றப்பத்திரிகையில் "ஐந்தாவதாக" என்ற தலைப்பின் கீழ் "மகாத்மா காந்தியைக் கொலைசெய்ய முயற்சி" என்ற தூண்டுதல் பற்றிய குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன்.மதன்லால் கே.பாஹ்வா அல்லது வேறு எந்த நபருடனும் எனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் கிடையாது என்பதைச்சொல்லிக் கொள்கிறேன். இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த எந்தவொரு சான்றாவணமும் இல்லை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

13. குற்றப்பத்திரிகையில் "ஆறாவதாக" என்ற தலைப்பின் கீழ், பத்திகள் A(1); (2) ஆகியவற்றில் உள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, நாராயண் டி. ஆப்தே உதவியுடன் உரிமம் இல்லாத கைத்துப்பாக்கியையும்,வெடிமருந்தையும் நான் இறக்குமதி செய்யவோ, கொண்டு வரவோ இல்லை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். டாக்டர். தத்தாத்ரேய எஸ்.பார்சூர், நாராயண் டி.ஆப்தே ஆகியோர் மேற்சொன்ன கைத்துப்பாக்கியை வாங்கிவந்தார்கள் என்பதையும், அவர்களுள் ஒருவர் தனியாகவோ இணைந்தோ என்னையோ, அவர்களுக்குள்ளோ அத்தகைய கைத்துப்பாக்கியையும், வெடிமருந்துகளையும் வாங்கத் தூண்டினார்கள் என்பதையும் நான் மறுக்கிறேன். அரசுத்தரப்பில் இது தொடர்பாக முன்வைத்துள்ள சான்றாவணம் நம்பக்கூடியதன்று என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். மேற்ச் சொன்னவற்றிற்குக் குந்தகமின்றி, நான் மேலும் சொல்லிக் கொள்வது என்னவென்றால், பத்திகள் A(1); (2) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்கள் நடைபெற்றிருந்தாலும் கூட, இந்த மதிப்புக்குரிய நீதிமன்றம் அவற்றை கவனத்தில் கொள்வதற்கு அதிகார வரம்பு இல்லை என்பதாகும். என்னைப் பொறுத்தவரை, குற்றச்சாட்டு எதுவும் இருந்தால் அது பத்தி B(1)-ன் கீழ் இந்தத் தலைப்பில் இணைந்துவிடும் என்பதையும் மேலும் நான் சொல்லிக் கொள்கிறேன்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :