Friday, December 26, 2014

Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 3 – ஹிந்து மதம் முரண்பாடுகள் உள்ள மதமா?

ஹிந்து மதம் முரண்பாடுகள் உள்ள மதமா?

பலப்பல பகுத்தறிவுவாதிகளாலும் இதர மதத்தவர்களாலும் அடிக்கடிச் செய்யப்படும் விமர்சனம் இதுவாகத்தான் இருக்கக் கூடும்! அவர்கள் ஆவ்வாறு கூறுவதும் மேலோட்டமாகச் சிந்தித்துப் பார்த்தால் நியாயமாகவே தோன்றக் கூடும்! ஆனால் ஆழ்ந்து சிந்திக்கும் பட்சத்தில் அது உண்மையல்ல என்பதைத் தெரிந்து கொள்ளலாம்! இந்தப் பதிவுகளில் அவர்கள் முன்வைக்கும் பல்வேறு முரண்பாடான விஷயங்கள் பற்றியும் அடுத்த பதிவில் அவை எப்படி முரண்பாடுகள் இல்லை என்பது பற்றியும் சொல்ல விழைகிறேன்!

பொதுவாக இவர்கள் முன்வைக்கக் கூடிய கருத்துக்களாக இவற்றைச் சொல்லலாம் :
1. இந்து மதத்தில் பல தெய்வ வழிபாடுகள்
2. இந்து மதத்தில் உள்ள சாதி/வர்ணாசிரமப் பிரிவினைகள்
3. இந்து மதத்தில் உள்ள பல்வேறு பிரிவினரும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது!
4. இந்து மதத்துக்கே உரித்தானதாகக் காட்டப்படும் தீண்டாமைக் கேடுகள்!
5. இஸ்லாமியர்களுக்கு குரான் போலவும் கிறிஸ்தவர்களுக்கு பைபிள் போலவும் ஹிந்துக்களுக்கு என்று பொதுத் தன்மையில் எந்த முதல நூலும் இல்லாமல் இருப்பது!

முதலாவதாக சொன்னது பல தெய்வ வழிபாடுகள் என்னும் விஷயம்! அவர்கள் சொல்வது போல உலகில் இந்து மதமின்றி வேறெந்த மதத்திலும் பல தெய்வ வழிபாடுகள் அதிககமாகக் கிடையாது என்பதும் கூட உண்மைதான் ! கிறிஸ்தவ மதத்தில் ஏசுவையும் மேரியையும் மட்டுமே கடவுளராக வணங்குகின்றனர்! அதே போல இஸ்லாத்தில் அல்லாவையும் நபிகள் நாயகத்தையும் மட்டுமே கடவுளாக (அல்லாவைக் கடவுள் என்றும் நபிகளை இறைத் தூதர் என்றும்) வணங்குகின்றனர்! ஹிந்து மதத்தில் இது போலப் பல தெய்வ வழிபாடுகள் முரண்பாடா இல்லையா என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

இரண்டாவது வர்ணாசிரம/சாதிப் பிரிவினைகள்! வர்ணாசிரமம் என்பது இன்று நடைமுறையில் இல்லை என்ற போதிலும் கூட பலராலும் அவ்வாறு இருப்பது போலக் காட்டப் படுகிறது! சாதி என்பது இன்றும் உள்ள ஒரு விஷயம்தான்! ஆனால் இவை எப்படி உருவாக்கி வளர்ந்தன என்பதை என் தொடரும் பதிவுகளில் படித்தால் இவை முரண்பாடான விஷயமா இல்லையா என்பது பற்றிய தெளிவு தோன்றும்!

மூன்றாவது ஹிந்து மதத்தில் உள்ள பல்வேறு பிரிவினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது! இதுவும் கூட மேலோட்டமாகப் பார்க்கும் போது உண்மையைப் போல்தான் தோன்றும்! நடைமுறையில் இவை ஓரளவு உண்மை என்றும் உணர வாய்ப்புள்ளது! ஆனால் இவை மதம் உருவாக்கிய முரண்பாடா இல்லை மனிதன் தானாக உருவாக்கிக் கொண்டதா என்பது என் தொடரும் பதிவுகள் மூலம் தெரிய வரும் !

நான்காவதாக சொன்ன விஷயம் உண்மையிலேயே ஒவ்வொரு உண்மையான ஹிந்துவும் வெட்கி வேதனைப் படவேண்டிய விஷயம்தான்! இது பற்றிய உண்மை விளக்கம் எனது தொடரும் பதிவுகளில் வரும்! இப்போது ஒன்றை மட்டும் கூற விழைகிறேன்! இது கடவுள் சொல்லாத விஷயம் மனிதனாகவே உருவாக்கிக் கொண்டது! இது பற்றிய முழு விளக்கம் எனது தொடரும் பதிவுகளில் வரும்!

ஐந்தாவதாக  சொன்ன விஷயமும் மேலோட்டமாகப் பார்த்தால் உண்மை என்பது போலவே தோன்றும்! ஆனால் அடுத்த பதிவில் இது குறித்த என் விளக்கத்தைப் படிக்கும் போது அது பற்றிய எண்ணங்கள் மாறலாம்!

ஹிந்து மதம் பற்றிய முரண்பாடான விஷயம் என்னும் விமர்சனம் மேலோட்டப் பார்வைகளால் இதர மதத்தவர்களாலும் பகுத்தறிவு பேசுபவர்களாலும் வைக்கப்படுவது ஆகும்! ஆனால் அதைக் கேட்கும் நமது சகோதரர்களுக்கு அது உண்மையோ என்று கூடத் தோன்றுவது அது பற்றிய தெளிவான பார்வை இல்லாமல் போனதால்தான்! அது போன்ற ஒரு ஆழ்ந்த சிந்தனைப் போக்கைக் கொண்டு வரும் முகமாகத்தான் என் தொடரும் பதிவுகள் அமையும்!

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :