Friday, January 2, 2015

Keerthivasan

கீதையின் முத்துக்கள் - 4

எவ்வகையான சிந்தனைகளோடு ஒருவர் கடமையாற்ற வேண்டும்? ஒருவர் கடமையை தியாகம் செய்வது ஆகுமா?
ஒருவர் கடமையை எக்காரணதிற்கொண்டும் தியாகம் செய்வது ஆகாது! அது இயலாது! சுவாசிப்பது கூட கடமையே! கடமையைச் செய்யும் கர்த்தா எந்த வித பிரதிபலன் எதிர்பார்க்காமல், உலகியல் இன்பங்களுக்காகச் செய்யாமல் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே கொண்டு செய்ய வேண்டும்.

பரமாத்மாவிற்கு மட்டுமே செய்யும் கடமைக்கு பலனளிக்கும் அதிகாரம் உண்டு. எனினும் கடவுளின் கருணையை வேண்டி, ஞானம் பெற, பக்தியை வளர்த்துக் கொள்ள, முக்தியை வேண்டி சித்தம் கொள்ளலாம்.


பரமாத்மாவிற்கு எவ்வித கடமைகளும் இல்லை, எனினும் ஏன் அவர் அவதாரங்கள் எடுத்து கடமைகளைச் செய்கிறார்?

பரமாத்மா மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் பொருட்டு தானே அவதாரம் எடுத்து கடமைகளைச் செய்கிறார். இல்லையேல் மக்களுக்குக் கடமையின் மகத்துவம், முக்கியத்துவம் புரியாமற் போகும்! சரி - தவறு எதுவென்று பிரித்தறியாத அஞ்ஞானத்தால் பீடிக்கப் படுவர். பலர் கடமையை விட்டு விடுவர். எனவே மக்களை நல்வழிப்படுத்த, ஞானத்தை அளிக்க, பகவான் தன்னையே பூமியில் அவதரித்துக் கொண்டு கடமைகளைச் செய்து காட்டுகிறார்.



கடமைகள் நிலையான முக்திக்காக பலன்களை எதிர்பாராது, அவற்றை தியாகம் செய்து ஆற்ற வேண்டும் எனில், ஏன் வேதம் போன்ற நூல்கள் உல்க இன்பங்கள், சுகங்களைப் பெற வழிகளைக் கூறுகின்றன?

பெரும்பான்மையான மக்கள் தெளிவு பெறவில்லை, ஞானத்தைப் பெற்றிருக்கவில்லை! புலன், உலகியல் இன்பங்களில் மூழ்கித் திளைத்திருப்பவர்களுக்கு திடீரென கடமை, கடமையின் பலன்களை தியாகம் செய்து பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது மிகவும் சிரமம்.

அவ்வகையானவர்களுக்கு கடமையின் தத்துவத்தையும் தியாக குணத்தையும் வளர்க்க பயன்படும் இடைப்பட்ட ஒரு கருவியாக இருப்பதே இந்நூல்களில் உள்ள முறைகள்.

ஆக்கம்: விஷ்வலிங்க சூர்யா

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :