இதுதான் இந்துமதம் – 11
உருவம் என்பதே ஒரு மாயை என்பதை பார்த்தோம். அப்படியேனில் உருவ வழிபாடு அவசியமில்லையா ? உருவம் என்பதே மாயை என்றால் அருவம் என்பது எங்கிருக்கிறது ? குழம்புகிறதா ? உருவமும் அருவமும் நம் மனம் ஏற்படுத்துகின்ற புரிதல்கள் மட்டுமே !!
உயர்நிலை தத்துவங்களையும், கோட்பாடுகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் பயன்படுத்தும் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகின்றன. இறைத்தன்மையை நாம் நம்முடைய அளவு சார்ந்த வரையரைகளை வைத்து வரையறுத்து விட முடியாது.
இறைவன் அளப்பறியவன் என்றால் அவன் அருவமாய் மட்டும் இருந்து கொண்டு, உருவமாய் இல்லாதவன் என்றால் அவனை நாம் மிகவும் குறைத்து மதிப்பிடுகிறோம் என்று பொருள். இரவு என்று ஒன்றை நாம் அழைத்தால், பகல் என்று ஒன்று இருப்பது புலப்படுகிறது. நல்லது என்று ஒன்று இருந்தால் தீயது என்று ஒன்று இருப்பது புலப்படுகிறது. ஒன்று இல்லாமல் மற்றது இல்லை. அருவம் இல்லாமல் உருவம் இல்லை, உருவம் இல்லாமல் அருவம் இல்லை. ஆகையால் ஒன்றில் மட்டும் அவனை பொறுத்தி விட இயலாது. இறைவன் அருவம் உருவம் ஆகிய நம் புரிதல்களை கடந்தவன் எனக் கொள்ளலாம்.
மேலும் பார்வை உள்ள ஒவ்வொருவரும் அருவம் என்கிற ஒன்றை உருவகப்படுத்தவே இயலாது. பார்வை எனும் புலன் நமக்கு வாய்க்கப்பட்டிருக்கும் வரை அருவம் என்பதே இல்லை. நாம் கண்களை மூடினாலும் இருளை நாம் பார்க்கிறோம். ஏற்கனவே நம் மனத்திரையில் பதிந்துள்ள பல காட்சிகளை நாம் பார்க்கிறோம்.
ஆகவே அருவமும், உருவமும் நம் கண்களை சார்ந்தது. கண்களுக்கு புலப்படுவது உருவம், கண்களுக்கு புலப்படாதது அருவம். அருவ வழிபாடு செய்பவர்கள் கண்களை ஒதுக்கிவிடுகின்றனர். புரியும்படி சொல்வது என்றால் அவர்கள் நாவாலும், காதுகளாலும் மட்டுமே இறைவனை வணங்க முடியும் என்கிறார்கள். அதாவது இறைவன் பெயரை நாவால் உச்சரித்து வணங்குவதும், அதை தங்கள் காதுகளால் கேட்பதையும் இறைவணக்கம் என்கிறார்கள். புலன்களுக்கு புலப்படாத இறைவனை கண்கள் எனும் ஒரு புலனால் வணங்க முடியாது எனும் போது மற்ற புலன்களால் மட்டும் வணங்க இயலுமா ?
இறைவன் எல்லையற்ற கல்யான குணங்களை உடையவன் என்கிறது இந்துமதம். அதாவது அவனின் அற்புதமான குணங்களையும், தன்மைகளையும் நம்மால் அளவிட்டு விட இயலாது. நமக்காகதான் நாம் வணங்குகிறோமே தவிர, இறைவனுக்காக இல்லை. இந்த புரிதல் மிக முக்கியமானது. நாம் எத்தகைய பலவீனமானவர்கள், இறைவன் எத்தகைய பேராற்றல் வாய்ந்தவன் என்பதை நாம் மனதில் நன்கு பதிய வைக்க வேண்டும். அதைதான் இந்துமதம் வலியுறுத்துகிறது. இந்து மதத்தின் பல்வேறு வழிபாடுகள் இந்த கோட்பாட்டை மையப்படுத்தியே இருக்கிறது. அதை குறித்து விரிவாக அடுத்த பகுதியில் பார்ப்போம்.
உயர்நிலை தத்துவங்களையும், கோட்பாடுகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் பயன்படுத்தும் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகின்றன. இறைத்தன்மையை நாம் நம்முடைய அளவு சார்ந்த வரையரைகளை வைத்து வரையறுத்து விட முடியாது.
இறைவன் அளப்பறியவன் என்றால் அவன் அருவமாய் மட்டும் இருந்து கொண்டு, உருவமாய் இல்லாதவன் என்றால் அவனை நாம் மிகவும் குறைத்து மதிப்பிடுகிறோம் என்று பொருள். இரவு என்று ஒன்றை நாம் அழைத்தால், பகல் என்று ஒன்று இருப்பது புலப்படுகிறது. நல்லது என்று ஒன்று இருந்தால் தீயது என்று ஒன்று இருப்பது புலப்படுகிறது. ஒன்று இல்லாமல் மற்றது இல்லை. அருவம் இல்லாமல் உருவம் இல்லை, உருவம் இல்லாமல் அருவம் இல்லை. ஆகையால் ஒன்றில் மட்டும் அவனை பொறுத்தி விட இயலாது. இறைவன் அருவம் உருவம் ஆகிய நம் புரிதல்களை கடந்தவன் எனக் கொள்ளலாம்.
மேலும் பார்வை உள்ள ஒவ்வொருவரும் அருவம் என்கிற ஒன்றை உருவகப்படுத்தவே இயலாது. பார்வை எனும் புலன் நமக்கு வாய்க்கப்பட்டிருக்கும் வரை அருவம் என்பதே இல்லை. நாம் கண்களை மூடினாலும் இருளை நாம் பார்க்கிறோம். ஏற்கனவே நம் மனத்திரையில் பதிந்துள்ள பல காட்சிகளை நாம் பார்க்கிறோம்.
ஆகவே அருவமும், உருவமும் நம் கண்களை சார்ந்தது. கண்களுக்கு புலப்படுவது உருவம், கண்களுக்கு புலப்படாதது அருவம். அருவ வழிபாடு செய்பவர்கள் கண்களை ஒதுக்கிவிடுகின்றனர். புரியும்படி சொல்வது என்றால் அவர்கள் நாவாலும், காதுகளாலும் மட்டுமே இறைவனை வணங்க முடியும் என்கிறார்கள். அதாவது இறைவன் பெயரை நாவால் உச்சரித்து வணங்குவதும், அதை தங்கள் காதுகளால் கேட்பதையும் இறைவணக்கம் என்கிறார்கள். புலன்களுக்கு புலப்படாத இறைவனை கண்கள் எனும் ஒரு புலனால் வணங்க முடியாது எனும் போது மற்ற புலன்களால் மட்டும் வணங்க இயலுமா ?
இறைவன் எல்லையற்ற கல்யான குணங்களை உடையவன் என்கிறது இந்துமதம். அதாவது அவனின் அற்புதமான குணங்களையும், தன்மைகளையும் நம்மால் அளவிட்டு விட இயலாது. நமக்காகதான் நாம் வணங்குகிறோமே தவிர, இறைவனுக்காக இல்லை. இந்த புரிதல் மிக முக்கியமானது. நாம் எத்தகைய பலவீனமானவர்கள், இறைவன் எத்தகைய பேராற்றல் வாய்ந்தவன் என்பதை நாம் மனதில் நன்கு பதிய வைக்க வேண்டும். அதைதான் இந்துமதம் வலியுறுத்துகிறது. இந்து மதத்தின் பல்வேறு வழிபாடுகள் இந்த கோட்பாட்டை மையப்படுத்தியே இருக்கிறது. அதை குறித்து விரிவாக அடுத்த பகுதியில் பார்ப்போம்.